பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆந்தராக்னோஸ் நோய்: கொல்லட்டோடிரைக்கம் இன்டிமுத்தியானம்

அறிகுறிகள்

  • பயிரின் அனைத்து பகுதிகளையும், பயிரின் எந்த நிலையையும் இந்த நோய் தாக்கும்
  • வட்ட வடிவில், கருப்பு நிற நீரில் அமிழ்ந்த புள்ளிகள் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும். இந்த புள்ளிகளின் நடுவில் கருப்பு நிறமாகவும், ஓரங்களில் அடர் ஆரஞ்சு நிறத்துடனும் காணப்படும்.
  • தீவிர தாக்குதலின் போது, தாக்கப்பட்ட பகுதிகள் உதிர்ந்து விடும்.
  • விதை முளைக்க ஆரம்பித்தவுடன், நாற்றுக்கள் கருக ஆரம்பித்து விடும்
  • பூஞ்சாண் விதைகள் மற்றும் பயிரின் குப்பைகளில் உயிர் வாழும்
  • காற்று வழி பரவும் கொனிடியா மூலம் இந்த நோய் பரவும்.
  • குளிர் மற்றும் ஈரமான காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

கட்டுப்பாடு

  • கார்பன்டசிம் 2 கிராம் / கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்தல்
  • தாக்கப்பட்ட பயிரின் குப்பைகளை அகற்றி, அழித்தல்.
  • மான்கோசெப் 2 கிராம் / லிட்டர் (அ) கார்பன்டசிம் 0.5 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015