பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: எரிசப்பே பாலிகோனி

அறிகுறிகள்

  • இலைகளில் வெள்ளை நிற பொடி திட்டுக்கள் தோன்றும். மற்ற பச்சை நிற பகுதிகள் மங்கிய நிறமாக மாறும். இந்த திட்டுக்கள் அதிகமாகி, கீழ்ப்பகுதியிலும் பரவும்.
  • தீவிர தாக்குதலின் போது, இலையின் இருபுறத்திலும் வெள்ளை நிற சாம்பல் பொடி போன்ற வளர்ச்சி காணப்படும். தாக்கப்பட்ட பகுதிகள் சுருங்கி, உருமாறும்.
  • நோயின் தாக்குதல் அதிகமாகும் போது, இலைப் பரப்பு முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி, வளர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்ந்து விடும். இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
  • பலதரப்பட்ட ஓம்புயிரி பயிர்களில் உயிர் வாழும்.
  • காற்று வழி பரவும்.

கட்டுப்பாடு

  • ஜீன் மாத ஆரம்பத்திலேயே விதைத்தல்.
  • கார்பன்டசிம் 1கிராம்/லிட்டர் (அ) டிரைடிமார்ப் 1மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015