தண்டு சொறி: மேக்ரோபொமினா  பேசோலினா 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      
                      - நெல்லை  தொடர்ந்து, உளுந்து நடவு செய்யும் வயல்களில், வெள்ளை நிற சொறிகள் தண்டின் அடிப்புறத்தில்  4 வாரமான  உளுந்து பயிரில் தோன்றும்.
 
                      - இந்த  சொறிகள் பெரிதாகி, பழுப்புற்ற கோடுகள் போன்று மேல்நோக்கி பரவும்.
 
                      - பயிர்கள்  குட்டை வளர்ச்சியுடன், இலைகள் அடர் பச்சை நிறத்தில், பல வண்ண நிறமாக மாறி, அளவு சிறிதாகித்  தோன்றும்.
 
                      - தாக்கப்பட்ட  செடிகளின் இலைகள் திடீரென்று உதிர்ந்து, காயும்.
 
                      - பூத்தல்  மற்றும் காய்த்தல் பெரிதளவு  குறையும்.
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - கோடையில்  ஆழமாக உழவு செய்தல்.
 
                      - பயிர்  சுழற்சியை மேற்கொள்ளுதல்
 
                      - பண்ணை  எரு 12.5 டன்/ஹெக்டர் என்ற அளவில் இட்டு பண்ணை சீரமைத்தல்.
 
                      - நோய்தாக்கப்பட்ட  பயிர்க் குப்பைகளை மண்ணில் புதைத்து எரித்தல்.
 
                      - டிரைக்கோடெர்மா  விரிடி 4 கி/கிலோ விதைக்கு (அ) ப.ப்ளோரோசென்ஸ் 10கி/கிலோ விதை (அ) கார்பென்டசிம்  அல்லது திரம் 2கி/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                      - கார்பெண்டசிம்  1 கிராம்/லிட்டர்  (அ) ப.ப்ளோரெசன்ஸ்/டி.விரிடி 2.5 கிலோ/ஹெக்டர் + பண்ணை எரு 50 கிலோ  என்ற அளவில் குறிப்பிட்ட இடத்தில் அமிழ்த்தி வைக்க வேண்டும்.
 
                      | 
                                        | 
                 
                |