பயிர் பாதுகாப்பு :: கார்நேசன் பயிரைத் தாக்கும் நோய்கள்

ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை டயாள்தி

அறிகுறிகள்:
  • இந்நோயின் தாக்குதலினால் செடியின்  ஆரம்ப காலத்திலே இலைகளின் நிறம் மாறி படிப்படியாக இலைகளும் செடியின் தண்டுகளும் வாடிக் காணப்படும்.
  • பின்னர் பாதிக்கப்பட்ட செடி முழுவதும் காய்ந்து காணப்படும்.
  • முதிர்ந்த செடிகளிலும் இதே போன்ற அறிகுறிகள் காணப்படும். ஆனால் அதில் இலைகள் மஞ்சளாகி பின்னர் ஊதா – சிவப்பு நிறத்தில் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட தண்டுகளின் வாங்குலர் திசுக்கள் அடர் பழுப்பு நிறமாக்குகின்றன.
  • முதிர்ந்த செடிகள் இறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே காய்ந்து அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன மற்றும் வைக்கோல் நிறத்திற்கு மாறிவிடுகின்றன.

மேலாண்மை:

  • நோயுற்ற செடியை உடனடியாக நீக்கிவிட வேண்டும். வேர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மண்  முழுவதையும் தோண்டி கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • பாலியெத்திலின்  (0.1 மிமீ தடிமம்) மூலம் 30 நாட்களுக்கு மண்ணை வெப்ப மூட்ட வேண்டும்.
Image Source: http://pnwhandbooks.org/plantdisease/carnation-dianthus-caryophyllus-fusarium-wilt

 

செடி வாடல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015