நாற்று கருகல்: பைட்டோதோரா கொலகேசியே 
            அறிகுறிகள் 
          
            - இந்நோயினால்  நாற்றுக்கள் இறந்துவிடுகின்றன.
 
            - இலையின்  இரண்டு பாகத்திலும் வெளிர் பச்சை நிறத்தில் திட்டு திட்டாக பரவி காணப்படும். இவை இலையின்  காம்பு வரையில் நீண்டு இலை தொங்கும் தோற்றத்தை அடைகிறது.
 
            - இதில்  பறிக்கப்பட்ட இலையிலிருந்து தண்டிற்கு நோய் பரவுகிறது. வளரும் முளையில் இந்நோய் பரவுவதால்  செடிகள் இறந்துவிடுகின்றன.
 
            - இளம்  இலைகள் முதிர்ந்த செடிகளில் குறைந்த அளவே பாதிக்கின்றன.
 
            - இலைப்புள்ளி  மஞ்சள் நிறமாகவும், பின்பு பழுப்பு நிறமாகவும் மாறுகின்றது.
 
            - இவ்வகையான  இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைகள் காய்ந்துவிடுகின்றன.
 
            - பாதிக்கப்பட்ட  இலைகள் உதிர்ந்து விடுகின்றன. ஈரப்பாமான நிலையில் வெள்ளைநிறப் பூசணம் இலையின் அடிப்புறத்தில்  காணப்படுகின்றன.
 
           
          கட்டுப்பாடு 
          
            - தண்ணீர்  வடியாத வயல்களிலும் குறைந்த தாழ்வான பகுதிகளில் ஆமணக்கு விளைவிப்பதைத் தவிர்க்கவும்.
 
            - விதையை  4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 3 கிராம், மெட்டாலக்ஸில் / கிலோ என்ற அளவில்  நேர்த்தி செய்யலாம்.
 
            - காப்பர்  ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் / லிட்டர் அல்லது மெட்டலக்சில் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில்  தெளிக்கவும்.
 
            | 
          
           |