வாடல்நோய்: ப்யூசேரியம்  ஆக்ஸிஸ்போரம் 
            அறிகுறிகள் 
          
            - இலைகள்  மடங்கியும், தொங்கியும் நுனியில் மட்டும் இலைகள் இருக்குமாறு காட்சியளிக்கும்.
 
            - செடிகள்  வாடியும், வேர்கள் மாற்றமடைந்தும், திசுக்கள் இறந்தும், இறுதியில் செடிகளே இறந்துவிடுகின்றன.
 
            - இலையின்  நுனியில் கருகியும், இலையின் நரம்புப் பகுதிகளுக்கு இடையில் பரவியும், பின்பு இலை முழுவதும்  கருகி காணப்படும்.
 
            - தண்டுப்  பகுதியை பிளந்து பார்த்தால் பழுப்பு நிறத் தோற்றம், மற்றும் வெண்மையான பூசண வளர்ச்சியும்  காணப்படும்.
 
           
          கட்டுப்பாடு 
          
            
            - நோயற்ற  விதைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
 
            - நோய்  எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களான ஜோதி, ஜீவாலா, ஜிசிஹச்-டி, டிசிஹச்-30 மற்றும் எஸ்ஹச்பி  145, ஆகியவை பயிரிடலாம்.
 
            - முன்  பயிரின் கழிவுகளை எரிக்கவேண்டும்.
 
            - பசுந்தாள்  உரம் மற்றும் ஊடுபயிராக துவரையையும் பயன்படுத்தலாம்.
 
            - விதையை  திரம் 3 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா  விரிடியின் மூலம் நேர்த்தி செய்யலாம்.
 
            - 2.5  கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை தொழு உரத்துடன் கலந்து டபெருகச் செய்து, தண்ணீர் தெளித்து  பாலித்தீனால் 15 நாள் மூடிவைத்து பின்பு இரண்டு கால்களுக்கு அல்லது கரைகளுக்கு போட்டால்  இந்நோய் பாதிப்பதை சிறிது தடுக்கலாம்.
 
           
 | 
          
                       |