பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: மிளகாய்
பாக்டீரியா மென்மை அழுகல் நோய்:  எர்வினியா கராட்டாவோரா சபஸ்பீசிஸ் கராட்டாவோரா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலை நரம்புத் திசுக்கள் கருப்பாகிறது. இதைத் தொடர்ந்து இலை இரத்த சோகை மற்றும் நசிவு ஏற்படுகிறது.
  • உள்ளுக்குள் அடர் பழுப்பு நிறமாற்றம் ஏற்படும்
  • தண்டு பிளவு உருவாகின்றன- கிளைகள் உடையும்
  • வாடச்செய்தல் மற்றும் காய்ந்து போகுதல்
  • பழம் மஞ்சரிக்காம்பு- மிகவும் ஏதுவாக மற்றும் நோய் தாக்குதலுக்கான முதல் இடம்
  • பழுத்த மற்றும் பசுமையான பழங்கள் பாதிக்கப்படுகிறது
  • ஆரம்பத்தில், பழம் காயங்கள் நீர் நனைத்த, மற்றும் ஓரளவு பள்ளமான அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.
  • பிந்தைய காலங்களில், பாக்டீரியா கசிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உருவாகி, அழுகின திசுக்களாக மாறுகிறது
  • பாதிக்கப்பட்ட பழம் தண்ணீர் நிரப்பப்பட்ட பை போன்று தொங்கிவிடும்
 
  மஞ்சரிக்காம்பு மீது மென்மையான திசு நீர் நனைத்த மூழ்கிய புள்ளிகள் அழுகிய மிளகாய்
நோய் காரணி:
  • பாக்டீரியா -ve, கோலை வடிவில் 1-6 பெரிய புறச்சுற்றில் நகரிழைகள் கொண்டு இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:

நோயின் தாக்கம் குறைக்க:

  • அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல்
  • கிளை கத்தரிப்பு கருவிகளை கிருமி நீக்கம் செய்தல்
  • தாவரங்களை காயப்படுத்துதலை தவிர்க்கவும்
  • விழுந்த, நோயுற்ற இலைகள் மற்றும்  தாவர குப்பைகளை நீக்கவும்
  • விதை நேர்த்தி- 1 % சோடியம் ஹைப்போகுளோரைட்டில் முப்பது நிமிடங்கள் ஊறவைத்து  சுத்தமான தண்ணீரில் கழுவுதல்
  • உருளைக்கிழங்கு அல்லது முட்டைக்கோஸ் பயிர்களை தொடர்ந்து மிளகாய்  பயிர்களை நடவு செய்வதை தவிர்க்கவும்
  • அதற்கு பதிலாக, பீன்ஸ், சோளம் மற்றும் சோயா பயிர்களை சுழற்சி பயிர் செய்யவும்

அறுவடை பின் சார் நோய் மேலாண்மை

  • குளோரின் நீர் பயன்படுத்துவதை குறைக்கவும்
  • பழங்களை முற்றிலும் காய வைக்கவும்
  • பேக்கிங் மற்றும் சேமிப்பின் போது பழங்களை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும
Source of Images:
www.avrdc.org/download/publications/crop-guides/peppers/bact_rot.pdf
http://aciar.gov.au/files/mn-157/pdf/TECCIPM-14-%2818Dec13%29-bacterial-diseases.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015