பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: மிளகாய்
இலைகருகள் நோய்: பைட்டோப்தோரா கேப்ஸிசி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பாதிக்கப்பட்ட இலை திசு- வாடல், வெளிர் பச்சை அல்லது சாம்பல்-பச்சை நிறத்தில் இருந்து  பின்பு  தங்க நிறம் முதல் வெள்ளை நிறமாக மாறும் மற்றும் எரிந்த தோற்றத்தில் இருக்கும்
  • ஈரப்பதத்துடன், இலைகளில் புள்ளிகள் ஒரு தண்ணீர் நனைத்த எல்லை கொண்டு இருக்கும்
  • பழம் அழுகல்- வடிவத்தில் ஒழுங்கற்றதாக மற்றும் ஆலிவ் பச்சை அல்லது வெளிர் பச்சை நிறத்தில் நீர் நனைத்த எல்லைகளை கொண்டு இருக்கும்
  • அழுகல் வேகமாக விரிவடையும், பழங்கள் முற்றிலும் நோயுற்று, முழுமையாக காய்ந்துவிடும்
  • பாதிக்கப்பட்ட விதைகள் பழுப்பு நிறமாக சுருங்கி இருக்கும்
 
  ஒளி பச்சை விளிம்புடன் மிளகாய் பாதிக்கப்பட்ட மிளகாய்
நோய் காரணி:
  • ஸ்போரஞ்சியா என்ற நுண்ணிய பால் முறையினின்றும் வித்திகளை இந்நோய்  ஏற்படுத்துகிறது
  • ஸ்போரஞ்சியா- கோள அல்லது பேரி வடிவில், கண்ணாடி பரு போன்ற  ஒரு நீண்ட மலர்காம்பு அடிப்படையில்  வித்துக்கள் உடன் இருக்கும்
  • நோய் பரப்பும் கிருமி 25 முதல் 30 °C வெப்பநிலையில் நன்றாக வளர்கிறது

பரவல் முறை:

  • மண்ணில் பரவலான குப்பைககளில் உயிர் வாழ்கிறது
  • அறுவடைக்குப் பின் களத்தில் இருக்கும் வேர்கள், தண்டுகள் மற்றும் காய்ந்த பழங்கள் மூலம் பரவும்
  • விதைகள் மூலம் பரவும்
கட்டுப்படுத்தும் முறை:
  • நோயால் பாதிக்கப்படாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி
  • சுத்தமான விதைகளை புதிய பூச்சட்டியில் விதைக்க வேண்டும்
  • நாற்றுகளை நன்றாக கண்காணிக்கவும். நோயுற்ற தாவரங்களை அவ்வப்போது நீக்கி விட வேண்டும்.
Source of Images:
www.chileplanet.eu/diseases.html
http://www.agf.gov.bc.ca/cropprot/pcapsici.htm

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015