பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்கள்

பிசின் வடிதல் நோய் – பைட்டோப்தோரா பேராசிடிகா, பி.பள்மிவோரா, பி. சைட்ரோதோரா

அறிகுறிகள்:

  • முதல் அறிகுறியாக மரப்பட்டையில் கரும் கறையாக தோன்றி பின்பு மரக்கட்டை வரை இந்நோய் பரவும்
  • மரப்பட்டையின் அடிப்புறத்தில் இந்நோய் பரவி கம்பி வளையம் போல் தோன்றி மரத்தையே அழித்துவிடும்
  • மரப்பட்டைகளின் சில பகுதிகள் வரண்டும், சுருங்கி, வெடித்தும் மற்றும் சிறு சிறு துண்டுகளாக காணப்படும்.பின்பு இதன் விளைவுகள் அதிகரித்து, தண்டு பகுதியில் உள்ள மரப்பட்டையிலிருந்து பிசின் வடிவதை காணலாம்
  • இதன் பாதிப்பு வேரின் நுனி வரை பரவும்
  • வெள்ள நீர் பாசனமும் மற்றும் நீர் தேங்கி இருப்பதால், இதன் தண்டு பகுதிகள் நோய் பாதிப்படைய வாய்ப்புள்ளது
  • பூசண வித்துக்கள் மண்ணில் உயிர் வாழும் இவை பாசன நீராலும், காற்று மூலமாகவும் மற்றும் மழை நீரினாலும் நோய் பரவக் கூடும்

கட்டுப்பாடு:

  • பயிர் சாகுபடியின் நோய் தாக்காதவாறு நுனி வேர்கள் அல்லது அடி தண்டைத் தீங்கு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்
  • நோயினால் பாதிக்கப்பட்ட மரப்பட்டையை ½ “ அளவில் அடியோடு அகற்றிவிட வேண்டும்
  • தண்டு பகுதியில் உள்ள மரப்பட்டையை போர்டியாக்ஸ் பசையினை தடவ வேண்டும்

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015