பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்கள்

கரணை நோய்: எல்சினோ ஃபசெட்டி

அறிகுறிகள்:

  • இலைகள், குச்சிகள் மற்றும் ஆரஞ்சுப் போன்ற பழவகைகளை இந்நோய் தாக்கும்
  • மழைக் காலங்களில், புளிப்பான ஆரஞ்சு, எழுமிச்சை, ஆரஞ்சு வகைப் பழங்கள், திராட்சை, ஆகியவை எளிதில் பாதிக்கக் கூடியவை
  • இந்நோய், முதலில் இளஞ்சிவ்ப்புப் புள்ளியாக காணப்படும்
  • இலை திசுக்கள் உருக்குழைந்து, புண் போன்று காணப்படும்
  • இவ்வாறு நோயினால் தாக்கப்பட்டு உருக்குழைந்த இலைகளின் திசுக்கள் மேலும் தழும்பு போன்ற நிறத்தில் தோன்றி பின்பு அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும்
  • பொதுவாக இலையின் அடிப்புறத்தில் புள்ளி போன்று காணப்படும். பின்பு இப்புள்ளிகள் இலையில் ஊடுரவி இருபுறம் காணப்படும்
  • பாதிக்கப்பட்ட பகுதிகள், அனைத்துப் பகுதியையும் இந்நோய் பரவிவிடும். இலைகள் சுருண்டு, உரு மாறியும் மற்றும் வளர்ச்சி குறைந்து காணப்படும். குச்சிகளிலும் இதைப்போன்ற புள்ளிகளை பரவச் செய்யும்
  • வெளிப்புறத்தில் சொறி போன்று காணப்படும் பழங்களில் சொறி அல்லது பொடிப் போன்று காணப்படும்
  • முதிராத பழங்களில் பால் போன்ற நிறத்திலும் மற்றும் முதிர்ந்த பழங்களில் அடர்ந்த பச்சை சாம்பல் நிறத்திலும் காணப்படும். இப்பழங்களில் பிஞ்சு நிலையிலேயே உதிர்ந்துவிடும்

கட்டுப்பாடு:

  • கார்பன்டாசிம் 0.1% அளவில் தெளிக்கவும்

 

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015