பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தென்னை ஈரியோபிட் கரையான் : ஆசிரியா கர்ரோரோனிஸ்

அறிகுறிகள்:

  • முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும்
  • காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும்
  • தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும்
  • உருமாறிய காய்கள் பிளவுகளுடன், கெட்டியான நார்களுடன் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • இளம் பூச்சி மற்றும் பூச்சி: நீளமான உடலுடன் இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன் காணப்படும்
இளம் காய்களில் (அ) குரும்பைகளில் சேதம்  
காய்களில் ஈரியோபிட் கரையானால் சேதம்

கட்டுப்பாடு:

  • யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, மூரேட்ஆப் பொட்டாஷ் 3.5 கிலோ/தென்னை மரம்/வருடம்
  • வேப்பங்கட்டி 5 கிலோ மற்றும் அங்கக உரம் 5 கிலோ/தென்னை மரம்/ வருடம்
  • போராக்ஸ் 50 கிராம் + ஜிப்சம் 1 கிலோ + மாங்கனீசு சல்பேட் 0.5 கிலோ /தென்னை மரம்/வருடம்
  • ஊடுபயிராக சணப்பையை 4 பயிர்கள் /வருடத்திற்கு பயிரிடலாம். காற்றுத் தடுப்பு தாவரமாகி சவுக்கை தென்னந்தோப்பு சுற்றிலும் நடலாம்.
  • ட்ரைஅசோபாஸ் 40 கிகி 5 மிலி /லிட்டர் (அ) (அ)கார்போசல்பான் 25 EC வேம்பு கரைசல் 1% 5மிலி/லிட்டர் கலந்து குறிப்பிட்ட இடத்தில் அளிக்க வேண்டும்.

வேர் ஊட்டம் :

  • தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக வெளியீடான அக்ரோ பையோசைட் 30மிலி/மரம் என்ற அளவில் வேர் ஊட்டம் செய்ய வேண்டும்
  • டிரைஅசோபாஸ் 40 கிகி 15 மிலி (அ) கார்டோப்யூரான் 25 கிகி 15 மிலி/15மிலி நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
  • வேர் ஊட்டம் செய்தவுடன், 45 நாட்கள் கழித்து அடுத்த அறுவடை செய்ய வேண்டும்
பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி 
வேர் ஊட்டம்
தென்னை டானிக் பயன்படுத்தி வேர் ஊட்டம் 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015