பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்
ஃபியூ சேரியம் வாடல் நோய் : ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் வகை வாசின்ஃபெக்டம்

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட இளஞ்செடியின் விதையிலைகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படும்.
  • நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும். வளர்ந்த செடியில் நோய் தொற்றினால், அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளாக மாறி, பின் வாடி உதிர்ந்து விடும்.
  • தண்டின் அடிப்பகுதி கருமையாகவும், உரித்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் காணப்படும்.

கட்டுப்பாடு

  • அமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளை, கார்பாக்சின் அல்லது கார்பென்டசிம் 4 கிராம்  / கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
  • ஜீன் – ஜீலையில், கோடை உழவுக்குப் பின் அறுவடை செய்த தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும்.
  • பொட்டாசியம் உரத்தின் அளவை அதிகரிக்கவும்.
  • அதிகப்படியான தொழுவுரம் 100 டன் / எக்டர் இடவும்.
  • 0.05 % பெனோமைல் (அ) 0.1 % கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.

 

தண்டின் அடிப்பகுதியில் பழுப்பு நிறக்கோடுகள் மஞ்சள் நிற இலைகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016