பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்
வேரழுகல் நோய் : ரைசோக்டோனியா பட்டாடிக் கோலா (மேக்ரோபோமினா பேசியோலினா)

அறிகுறிகள்

  • முளையிடும் நாற்றுக்களின், விதையிலை கீழ்த்தண்டில் கருப்பு புண்கள், தண்டின் பட்டை இடை நீக்கமடைந்து நாற்றுகள் இறந்துவிடும்.
  • தண்டின் அடிப்பகுதியில் பட்டை நார் நாராக உரிந்துவிடும்.
  • வேர்பகுதி முழுவதும் சிதைந்து விடும்.  செடியை பிடுங்கினால் எளிதில் வந்துவிடும்

மேலாண்மை

  • ட்ரைக்கோடெர்மாவிரிடி 4 கிராம்  / கிலோ (அ) சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
  • கார்பாக்சின் (அ) திரம் 5 கிராம் (அ) கார்பென்டசிம் 2 கிராம் / கிலோ விதை நேர்த்தி செய்யவும்.
  • 0.05% பெனோமைல் (அ) 0.1% கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.
  • தொழுவுரம் 10 டன் / எக்டர் (அ) வேப்பம் புண்ணாக்கு 2.5 டன்  / எக்டர் இடவும்.
  • ஆரம்ப விதைப்பு (ஏப்ரல் முதல் வாரம்) (அ) தாமத விதைப்பு (ஜீன் கடைசி வாரம்)  விதைக்கும் நேரத்தை மாற்றுவதன் மூலம் செடியை அதிக மண் வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கலாம்.
  • மண் வெப்பநிலையை குறைக்க, சோளம் மற்றும் நரிப்பயறுவை ஊடுபயிராக நடவும்.

வேரழுகல் தண்டு நார் நாராக அறிதல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016