பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

காயழுகல் நோய்

  • ஃபியுசேரியம் மொனிலிஃபார்மி, கோலிட்ரோட்ரைக்கம்கேப்சிஸி, அஸ்பெர்ஜில்லஸ்ஃபிலேவஸ், அ. நைகர், ரைஜோபஸ்நைக்ரிகன்ஸ், போட்ரிடிப்லோடியா வகை போன்ற நோய்க்காரணிகள் காய் அழுகலுடன் தொடர்பு கொண்டுள்ளன.

அறிகுறிகள்

  • காய் முழுவதும் கருப்பு (அ) பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
  • அழுகல், வெளியிலோ (அ) உட்பகுதியிலோ காணப்படும்.
  • காய், வெடிக்காமல், இளம்பருவத்திலேயே உதிர்ந்துவிடும்.

மேலாண்மை

  • போதுமான இடைவெளி விடவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும்.
  • கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ /  எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016