பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்
பேக்டீரியக் கருகல் நோய்: சேந்தோமோனஸ் கேம்பஸ்ட்ரீஸ் பி.வி.மால்வேசியாரம்

அறிகுறிகள்

  • விதையிலைகளில் நீர் ஊறிய சிறிய புள்ளிகள், வட்ட வடிவமாக (அ) ஒழுங்கற்றதாக ஒன்றோடொன்று இணைந்து காணப்படும்.  பின் காய்ந்து உதிர்ந்துவிடும்.  இளஞ்செடிகளில் புதிதாக தோன்றும் இலைகளும் தாக்கப்பட்டு காய்ந்து விடும்.  இது “நாற்று கருகல்” எனப்படும்.
  • இலைகளின் அடிப்பாகத்தில் நீர் ஊறிய சிறுபுள்ளிகள் பழுப்பு நிறத்தில் பின் கரு நிறமாக மாறி, மேலும் விரிவடையாமல் சிறு சிறு நரம்புகளுக்கிடையில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கோண வடிவத்தை கொண்டிருக்கும்.  நாளடைவில் மேற்புறத்திலும் புள்ளிகளை காணலாம் (கோணப்புள்ளி).
  • நடுநரம்பு, கிளை நரம்புகள் இவற்றின் இருபுறங்களிலும் நீர்க் கசிவு தோன்றி நாளடைவில் கருநிறமாக மாறிவிடும் (நரம்பு கருத்தல்)
  • தண்டு மற்றும் கிளைகளில் கருப்பு நிற காயங்கள் காணப்படும்.  இளம் இலைகள் உதிர்ந்துவிடும் (கருங்கிளை)
  • இது காய்களையும் பாதிக்கிறது (காய்கல்)

மேலாண்மை

  • அடர்த்தியான சல்பியூரிக் அமிலம் 100 மி.லி / கிலோ விதை கொண்டு பஞ்சு நீக்கம் செய்யவும்.
  • பஞ்சு நீக்கிய விதைகளை கார்பாக்சிம் (அ) ஆக்சிகார்பாக்சின் 2 கிராம் / கிலோ கொண்டு விதை நேர்த்தி (அ) விதைகளை 1000பி.பி.எம்  ஸ்ரெப்டோமைசின்சல்பேட்டைஊற வைக்கவும்.
  • தாவரக் குப்பைகளை அகற்றவும்.
  • தானாக வளர்ந்த பருத்தி செடி மற்றும் களைகளை நீக்கவும்.

 

கோணப்புள்ளி நரம்பு கருத்தல்
காய் அழுகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016