பயிர் பாதுகாப்பு :: தட்டைப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்

ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம்

அறிகுறிகள்:

  • செடியின் கீழ் உள்ள இலைகள் வாடியும் ஒரு பகுதி மஞ்சள் நிறத்தில் மாறியும் இருக்கும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சி குன்றியும் வாடியும் காணப்படும்.
  • தண்டுப் பகுதியை பிளந்து பார்த்தால் சிவப்பு நிற திசு காணப்படும்.

கட்டுப்பாடு :

  • தரமான நல்ல விதைகளை பூசணக்கொல்லியுடன் நேர்த்தி செய்ய வேண்டும்.
  • நான்கு முதல் ஐந்து வருடன் பயிர் சுழற்சி முறையை பயன்படுத்தவேண்டும்.
  • தென் கருகல் நோயைக் கட்டுப்படுத்த முந்திய பயிரின் கழிவுகளை 6 இன்ச் அடி ஆழத்திற்கு மண்ணில் புதைக்க வேண்டும்.
  • சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்
  • களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்ற வேண்டும்.
  • மோனோகுரோட்டபாஸ் 0.1 சதவிகிதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள செடிகளை பயன்படுத்தவில்லை யென்றால் நூற்புழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் செடியில் ப்யூசேரியம் வாடல் நோயை நூற்புழு அதிகப்படுத்துகிறது.

 

 

Redgram

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015