பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கரையான்: ஓடனோடெர்மஸ் ஓபிசஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • வளரும் கரும்பின் சோகையின் ஓரங்களில் அரை வட்டமாக கரையான் கடித்தது போல் தென்படும்
  • நடவு செய்த கரணைகள் சரியாக முளைக்காமல் இருத்தல்,
  • முதலில் வெளிப்புற இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து போதல் பின்பு உட்புற இலைகளும் காய்தல்,
  • இறுதியில் முழுக்குருத்தும் காய்ந்து இழுக்கும்போது கையோடு வந்து விடுதல்.
  • விதைக் கரணைகள் உட்புறத் திசுக்களின்றி கரையான்  மண் காணப்படுதல்,  கரும்பு முழுவதும் காய்ந்து போதல் போன்றவை கரையான் தாக்குதலின் அறிகுறிகளாகும்.
   
  இலைகளில் அரை வட்ட வெட்டு   காய்ந்த வெளி இலைகள் மண் நிரப்பப்பட்ட கரணைகள
பூச்சியின் விபரம்: 
  • முட்டைகள் : சிறுநீரக (கிட்னி) வடிவில், சேர்ந்து காணப்படும். 30-90      நாட்களில் பொரித்துவிடும்.
  • இளம்குஞ்சுகள் : 8-9 முறைகள் தோலுரித்துப் பின் 6-12 மாதங்களில் முழு வளர்ச்சி பெறும்.
  • வளர்ந்த பூச்சிகள்: பழுப்பு கலந்த வெண்ணிற எறும்பு போன்ற சிறு பூச்சிகள், தலை அடர் நிறத்தில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறைகள்:

  • நடவு செய்யும்போது வெள்ளநீர்ப் பாசனம் செய்வதால் ஈரத்தன்மை அதிகமாக இருப்பதால் கரையானை கட்டுப்படுத்தலாம்.பாதிப்புள்ள பகுதிகளில் குறைந்த இடைவெளியில் அடிக்கடி நீர் பாசனம் வெய்ய வேண்டும்.
  • வயலில் இடைவேளி உள்ள இடங்களை நிரப்புதல்.

இயற்பியல் முறைகள்:

  • கரையான் கூடுகளைக் கண்டறிந்து அழித்தல். கரையான் மருந்தினை மன்னில் இட்ட பின்பு குறைவாக நீர் பாய்ச்ச வேண்டும்.
  • கரையானால் தாக்கப்பட்ட கரும்பு அல்லது விதைக் கரணைகளை வயலிலிருந்து அகற்றி அழித்து விடவேண்டும்.

இரசாயன முறைகள்:

  • இமிடகுளோப்ரிட் 70 டபிள்யூ.எஸ் மருந்தினை 0.1% அல்லது குளோர்பைரிபாஸ் 20 (இ.சி) சி 0.04% மருந்தில் விதைக் கரணைகளை 5 நிமிடம் நனைத்து எடுத்துப் பின் நடுவது சிறந்த பலன் தரும்.
கரையான்
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015