அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: திராட்சை

போபரிடிஸ் குலை அழுகல் அல்லது திராட்சையின் சாம்பல் பூசணம்: போட்ரிடிஸ் சினேரியா

அறிகுறிகள்:

  • தாக்கப்பட்ட பழங்கள் முதலில் மென்மையாகவும், நீர் போன்றும் காணப்படும்.
  • தாக்கப்பட்ட வெள்ளைப் பயிர்வகை பழங்கள் பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடும்
  • ஊதா நிறப் பயிர் வகைகள் ஆழ்ந்த சிவப்பு நிறத்தை உருவாக்கும்.
  • ஆரோக்யமான பழங்கள் நோய் தாக்கப்பட்ட பழங்களின் மேல் உரசினால் அந்தப் பழங்களும் பாதிக்கப்படும்.
  • அழுகிய பழங்கள் கெட்டியாக காய்ந்து கீழே விழுந்து விடும்.

கட்டுப்பாடு:

  • மழைக் காலங்களுக்கு முன் ஒரு மாத கால இடைவெளியில் 0.2% கேப்டான்னை மூன்று முறை தெளித்தால் அறுவடை முன் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

 

போபரிடிஸ் குலை அழுகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015