பயிர் பாதுகாப்பு :: பயிர் வகைகள்

துவரை நீர் உறை நூற்ப்புழு :

அறிகுறிகள் :

  • பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாதல், வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் காய் பிடித்தல் மற்றும் பயிரின் வீரியம் குறைந்து காணப்படும். துவரை, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, சோயாபீன்ஸ், உளுந்து மற்றும் எள் போன்ற பல பயிர்கள் நூற்புழுவால் பாதிக்கப்படுகின்றன.
  • பயிரின் நாற்றுப்பருவத்தில், முத்து போன்ற (அ) எலுமிச்சை வடிவ வெள்ளைப் பெண் நூற்புழுக்கள் வேருடன் ஒட்டிக்கொண்டு இருக்கும்.

கட்டுப்பாடு :

  • வெப்ப காலங்களில் கோடை உழவு செய்தல் வேண்டும்.
  • 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்தல் வேண்டும்.
  • விதைக்கும் போது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (அ) டிரைகோடெர்மா விரிடி @ 2.5 கிலோ/ எக்டர் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி  @ 5 + 5 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013