அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: பப்பாளி

ஆந்தராக்னோஸ்: க்ளியோஸ்போரியம் பப்பாயே

அறிகுறிகள்:

  • புள்ளிகள் பழங்களின் தோலின் மேற்பரப்பில் பழுப்பு நிறத்தில் நிறம் மாற்றம் ஏற்படும். இது வட்ட வடிவத்தில் 1-3 செ.மீ விட்டம் அளவு பழத்தின் பகுதிகள் குழியாகக் காணப்படும்
  • படிப்படியாக புள்ளிகளின் விளிம்புகளில் நைவுப்புண் ஒன்றாகி அடர்த்தியற்ற பூசண இழையின் வளர்ச்சியை உண்டாக்கும்
  • ஈரமான நிலையில் கெட்டியான அரக்கு இளஞ்சிவப்பு பூசணவித்தை வெளிப்படுத்தும்
  • ஆரம்ப நிலையில் பழங்கள் தாக்கப்பட்டால் காய்ந்து, உருச்சிதைத்து காணப்படும்
தோலின் மேற்பரப்பில் புள்ளிகள் பழுப்பு நிற குழி ஆந்தராக்னோஸ் பூசணம்

நோய் பரவுதல் மற்றும் நிலைத்திருத்தல் முறை:

  • முதல் நிலையா வயலிலேயே பழங்களின் மேல் நோய் தாக்குதல் ஏற்படும்
  • காற்று வழியாக இந்நோய் பரவும்
  • மழை தூறல் அடிப்பதாலும் பூசண நோய் பரவும்
  • அதிகப்படியான ஈரப்பதம் இருப்பதால் இலைத்தொகுதிகளில் கடுமையாக இருக்கும்
  • நைவுப்புண் மிக மெதுவாக முதிராத பழங்களின் மீது உருவாகி பின் படிப்படியாக முதிர்ந்த பழங்களின் மேல் உருவாகும்

கட்டுப்பாடு:

  • 0.1%கார்பன்டாசிம்-ஐ 45 நாட்கள் இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும் அல்லது
  • 0.2% க்ளோரோதலோனில்-ஐ 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும் அல்லது
  • 0.1% தியோஃபனேட் - மெத்தில் அல்லது 0.2% மேன்கோசெப்பை 10 நாட்கள் இடைவெளியில் தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்
  • பென்சிலிசோதையோசையனேட் பயன்படுத்தி பூகையூட்டம் ஏற்படுத்தினால் அறுவடை பின்சார் புள்ளிகளையும், அழுகல்களையும் கட்டுப்படுத்தலாம்

Image source: http://www.padil.gov.au/pests-and-diseases/pest/main/136592#


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015