பயிர் பாதுகாப்பு :: வெள்ளரிகாய் பயிரைத் தாக்கும் நோய்கள்
வாஸ்குலர் வாடல் நோய்

அறிகுறிகள்:
  • இலைகள் மஞ்சளாதல், பின்னோக்கிக் காய்தல்.
  • தனி இலையில் முதிரில் அறிகுறிகள் தோன்றும். பின் உடனடியாக வாடத்தொடங்கும். மங்கிய பச்சை நிறத்துடன் தோன்றும்.
  • வாடல் அறிகுறிகள் மேலும், கீழும் பரவும். வறண்ட வானிலையின் போது வாட ஆரம்பிக்கும்.
  • தண்டுகளும், இலைகளும் பழுப்பு நிறத்தில் மாறி பின் மடியும். பாக்டீரியா சைலம் குழாய்கள் வழியாக பரவும். தொடர்ந்து முழுச்செடியும் சுருங்கி, மடிந்து விடும்.

வேர்களை தாக்கும் அறிகுறிகள்:

  • தாக்கப்பட்ட தண்டுப் பகுதியிலிருந்து வெள்ளை நிற கசிவு வடிந்துக் கொண்டிருக்கும்
  • இந்த பாக்டீரியல் கசிவு நுண்ணிய, பளபளப்பான நூல் போன்று உருவாகி, கத்தீ (அ) கையைக் கொண்டு அழுத்தும்போது. 1 செ.மீ. நீளத்திற்கு வெளியே வரும்
  • வெட்டப்பட்ட 2 தண்டுகளை ஒன்றாகக் கொண்டு வரும் போது, அழுத்தினால், பின் தனித்தனி இழைகளாகப் பிரியும்
  • நோயற்ற செடியின் சாறு நீர் போன்று, இழை போன்று இருக்காது, சில சமயங்களில், இந்த சோதனையை செய்துப் பார்ப்பதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும்
  • வயலில் அறிகுறிகளை கண்டறிவதற்கு இந்த முறை பயன்படுகிறது. இந்த சோதனை வெள்ளரி மற்றும் முலாம் பழம் போன்றவைகளில் ஒரளவிற்கு உதவி செய்யும்
  • பழங்களிலும் அறிகுறிகள் காணப்படாது. சிறிய நீரில் ஊறிய திட்டுகள் மேற்புறத்தில் காணப்படும். இந்த திட்டுக்கள் ஒரே மாதிரியாக பளபளப்பான அழுகும் புள்ளிகளாக பழத்தின் மீது தோன்றும்.

கட்டுப்பாடு:

  • அதிகளவில் பயிரிடும் வயல்களில் பூச்சிக் கொல்லிகள் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். கார்பைரில், மாலத்தியான் (அ) ரோட்டினான் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்
  • வசந்த காலத்தில் வண்டுகள் முதலில் தோன்றும் போது தெளிக்க வேண்டும் செடிகள் முளைக்க ஆரம்பித்தவுடனேயே, கட்டுப்படுத்த வேண்டும்
  • கட்டுப்படுத்தாவிட்டால் ஒன்று முதல் நான்கு தலைமுறை வண்டுகள் கூட இருக்கும். அதனால் வாராவாரம் பூச்சிக் கொல்லிகள் தெளிக்க வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015