பயிர் பாதுகாப்பு :: சீரகம் பயிரைத் தாக்கும் நோய்கள்

அல்ட்டர்னேரியா கருகல்: அல்ட்டர்னேரியா பர்ன்சி

அறிகுறிகள்:

  • கருகல் தாக்கப்பட்ட செடிகளில் மிகவும் மெல்லியதாக பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் தோன்றும். பின் அது கருப்பு நிறமாக மாறிவிடும்
  • நோய் வாய்ப்பட்ட செடிகள் விதைகள் உருவாவதை நிறுத்திவிடும்
  • விதைகள் உருவானால் அது உலர்ந்தும், எடை குறைவாகவும், கருப்பு நிறத்திலும் இருக்கும்

கட்டுப்பாடு:

  • ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கேப்டன் அல்லது திரம் மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • விதைகளை விதைத்த பின் 0.2% டைதேன்-எம்-45 கரைசலை நான்கு முறை 10 நாட்கள் இடைவெளியில் 40 நாட்கள் வரை தெளிக்க வேண்டும்.
  • நல்ல பயன் விளைவிக்கும் பூசணக் கொல்லியைத் தயாரிக்க 1 மிலி சோப் கரைசல் /லிட்டர் தண்ணீரை சேர்க்கவும்



பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015