பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்
பாக்டீரியா இலைக்கருகல்: சேந்தோமோனஸ் ஃபேசியோலி
அறிகுறிகள்

  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட  செடியின் இலைப்பழுப்பு நிறமாகவும், காய்ந்தும், சிறிது உயர்ந்த புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
  • இந்நோய் தீவிரமடையும் போது இவ்வாறான புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய கருகல் போன்ற தோற்றமும் மற்றும் இலைகள் மஞ்சள் நிறமாகவும் மாறியும், சில நாட்களில் முதிர்ச்சி அடையும் முன் உதிர்ந்துவிடும் தன்மையுடையது.
  • இலையின் கீழ்ப்பாகம் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு காரணம் சத்து உயர்ந்துள்ள புள்ளிகள்.
  • இந்த வகை பாக்டீரியம் விதையிலிருந்து உற்பத்தியாகிறது.
  • இந்நோயினால் தண்டும், காயும் பாதிக்கப்படுகின்றன.

கட்டுப்பாடு

  • முந்திய பயிரின் கழிவுகளை அழிக்கவேண்டும்.
  • விதைகளை விதைப்பதற்கு முன் 500 பிபிஎம் ஸ்ரெப்டோசைக்கிளின் திரவத்தில் 80 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு ஸ்ட்ரெப்டோசைக்ளின்னுடன் கார்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் / லிட்டர் கலந்து இரண்டு முறை 12 நாள் இடைவெளியில் தெளிக்கலாம்.
Redgram

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015