பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்
செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா செனசென்ஸ்
அறிகுறிகள்

  • சிறிய புள்ளிகள் நிறைய எண்ணிக்கையில் தோன்றி வெளிறிப்போன பழுப்பு நிறத்துடன் கூடிய புள்ளியையும் பழுப்பு கலந்த சிவப்பு நிற விளிம்பையும் கொண்டுள்ளது. இதே போன்ற புள்ளிகள் கிளைகளிலும் காய்களிலும் தோன்றுகிறது.
  • சாதகமான சூழ்நிலை ஏற்படும் போத நிறைய இலைப்புள்ளிகள் தோன்றி அவை பூக்கும் மற்றும் காய்க்கும் சமயத்தில் அவ்விலைகள் உதிர்ந்துவிடுகின்றன.

கட்டுப்பாடு

  • சுத்தமான சாகுபடி முறையை மேற்கொள்ளவேண்டும்.
  • நோய் தாக்காத விதையைப்பயன்படுத்தவேண்டும்.
  • குறைந்த அளவு செடிகளின் எண்ணிக்கையை வைத்திருத்தல் வேண்டும். செடிகளுக்கு இடையே அகலமான இடைவெளி விடுதல்வேண்டும்.
  • நிலத்தில் போர்வை போன்ற கழிவுகளைக் கொண்டு போர்த்தினால் நோயின் தாக்கம் குறைந்து மகசூல் அதிகரிக்கும்.
  • விதைத்த 30 நாட்களுக்கு பின்பு கார்பன்டாசிம் 0.5 கிராம் / லிட்டர் அல்லது மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
Redgram

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015