பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்
மொட்டுக் கருகல் நோய் : நிலக்கடலை, மொட்டுக் கருகல் வைரஸ் (பிபீஎன்வி)
அறிகுறிகள்
  • இளம் இலைகளில் வெளிர் பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றி (வளையப் புள்ளிகள்) கோடுகளாக மாறுகின்றன.
  • நுனியில் மொட்டுக் கருகல் ஏற்படுகின்றன. (அதிக வெப்பநிலையில்)
  • செடிகள் முதிர்ச்சியடையும் போது சிறிய இடைக்கணுவுடன் மொட்டுக்கள் தோன்றி வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இவ்வகையான நோய்கள் இலைப்பேன் மூலம் பரவுகின்றன.

கட்டுப்பாடு

  • குருவை, சம்பா பருவங்களில் முன் காலங்களில் விதைப்பு மேற்கொண்டால் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
  • பயிரின் அடர்த்தியை பெருக்குதல், முன் பருவ காலங்களில் விதைத்தல், கம்புடன் சேர்த்து விதைத்தல்  (கலப்புப் பயிர்) ஆகியன நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தும் முறைகள்.
  • நிலக்கடலை, கம்பு (7:1) என்ற விகிதத்தில் விதைக்கலாம்.
  • மானோகுரோட்டாபாஸ் 1.6 மில்லி / லிட்டர் அல்லது டைமீதோயேட் 2 மில்லி / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தி நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தலாம்.

 

Oil Seeds Groundnut Infected Leaf

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015