பயிர் பாதுகாப்பு :: பலாபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்

பழம் அழுகல்: ரைசோபஸ் ஆர்ட்டோகார்பி, ரைசோபஸ் நிக்ரிகன்ஸ் மற்றும் பைட்டோப்தோரா பால்மிவோரா

அறிகுறிகள்

  • இளம் பழங்கள் மற்றும் ஆண் பூங்கொத்துக்களை பூசணங்கள் மிக மோசமாக தாக்கப்படுவதால் குறைந்த சதவிதமே பழங்கள் முதிர்ச்சியடைகின்றன
  • பொதுவாக பெண் பூங்கொத்து மற்றும் முதிர்ந்த பழங்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படாது
  • இந்நோய் மென்மை அழுகல் நோயாகும். ஆரம்ப காலத்தில் பூசணங்கள் சாம்பல் நிறமாக அதிகப்படியான பூசண இழைகளுடன் வளர்ந்து படிப்படியாக கருப்பு நிறமாக வளர்ந்து காணப்படும்
  • பூசணம் படிப்படியாக வளர்ந்து பழம் முழுவதும் அல்லது பூங்கொத்து முழுவதையும் தாக்கி அவை அழுக நேரிடும். பின் உதிர்ந்து விடும்

கட்டுப்பாடு

  • ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மூன்று வார கால இடைவெளியில் 0.25% மேன்கோசெப் அல்லது 0.25% காப்பர் ஆக்ஸில்க்ளோரைடை இளம் பழங்களின் மேல் தெளிக்கவும்

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015