பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் கருகல் நோய்: பெஸ்டாலோடியா மேன்கிபேரா
அறிகுறிகள்:

  • இலைகளில் நுனியில் மற்றும் விளிம்பில் பழுப்புப்புள்ளிகளை உருவாக்குகிறது.
  • புள்ளியின் அளவு அதிகமாகிறது மற்றும் அடர் பழுப்பு நிறமாகிறது.
  • அசர்வெளி பூஞ்சை இருக்கும் இடத்தில் கறுப்புப்புள்ளிகளை உருவாக்குகிறது.
  • ஒரு வருடத்திற்கு மேல் மா இலைகளில் வாழ்கிறது மற்றும் காற்று மூலம் பூசண இலைகள் மூலம் பரவுகிறது.
  • வெப்பநிலை 20- 50°செல்சியஸ் மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அதிகமாக நோய்த்தாக்கம் காணப்படுகிறது.

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட செடியின் பகுதிகளை அழிக்க வேண்டும்.
  • காப்பர் ஆக்ஸிகுளோரைட்(0.25%), மேன்கோசெப் ((0.25%) அல்லது போர்டோ கலவையைத்தெளிக்கவும்.


சாம்பல் கருகல் நோய்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015