பயிர் பாதுகாப்பு :: எண்ணெய்ப்பனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நாற்றாங்காலிலுள்ள பூச்சி:
நாவாய்ப்பூச்சி: கார்வல்ஹோயா அரிக்கே

சேதத்தின் அறிகுறிகள்:

  • நடுக்குறுத்து இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
  • இலைகள் காய்ந்து விழுந்துவிடும்
  • நடுக்குறுத்து வளர்ச்சி குன்றி சுருங்கி விரிய முடியாமல் போகும்

பூச்சியின் விபரம்:

  • இளம் குஞ்சுகள்: கரு ஊதா நிறம் உடலில் தலைப்பகுதி இளம்மஞ்சளாகவும், சிவப்புநிற கண்களும் பெற்றிருக்கும்
  • வளர்ந்த புழுக்கள்: வயிற்றுப்பகுதியில் கருப்புநிறம் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • ஃபோரேட் 10 சத குறுணை 2 கிராம் அளவில் ஒரு பாலிதீன் பையில் போட்டு அப்பையை சிறு துளையிட்டு நடுக்குருத்துப் பகுதியில் போட்டு வைக்கவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015