பயிர் பாதுகாப்பு :: பட்டாணி பயிரைத் தாக்கும் நோய்கள்
ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை பிசி

அறிகுறிகள்:

  • செடிகள் தொங்கிக் காணப்படும். தொடர்ந்து உடனடியாக மடியும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, முதிர்வதற்கு முன் உதிர்ந்துவிடும்
  • காய் உருவாதலும் பாதிக்கப்படும். கழுத்துப் பகுதியில் செடிகள் வாடி, காய்ந்து, நிறமாற்றம் ஏற்படும்
  • நோயுள்ள செடிகளை எளிதில் பிடுங்கலாம்
  • நோயுற்ற தண்டை வெட்டிப் பார்க்கும் போது, அடர் பழுப்பு நிறத்தில், நிறமாற்றம் உள்ள வளையம் வாஸ்குலர் திசுக்களைச் சுற்றிக் காணப்படும். வேர் முடிகளிலிருந்து நேரடியாக தாக்குதல் ஏற்படும்
  • மண்ணில் இந்த பூஞ்சாண் உயிர் வாழும்

கட்டுப்பாடு:

  • காரபண்டாசிம் (2 கிராம் / கிலோ விதை) என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% மண்ணில் நனையுமாறு இடுதல் வேண்டும்.


 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015