பயிர் பாதுகாப்பு :: பேரிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்
நெருப்பு அழுகல் நோய்: எர்வினியா எமிலோவோரா

அறிகுறிகள்:

  • குளிர் காலத்தின் போது, நுண்ணுயிரி போன்று இந்நோய் தோன்றும். குச்சிகளின் விளிம்பில் பிளவு ஏற்படும் மற்றும் தண்டுகுளில் முன்பே பாதிப்படைந்திருக்கும்
  • திசுகளை தாக்கிய நுண்ணுயிரி, சிறிது சிறிதாக பிளவு ஏற்பட்ட தண்டுகளில் நோய் பரவ செய்யும்
  • இளவேனிற் காலங்களில், நுண்ணுயிரி வளர்ச்சியை அதிகப்படுத்தும், அதே சமயம் வளர்ச்சியின் நிலையை தொடங்கும். நுண்ணுயிரியின் அதிகரிப்பினால் பிளவு ஏற்பட்ட விளிம்புகளில் நீர் வடியும்
  • இந்நீர் வடிவதினால் பூச்சிகளை கவரச் செய்கிறது மற்றும் இவைகளை பூக்கின்ற பூக்களுக்கும் பூச்சிகள் எடுத்து செல்கின்றன. மழைநீரின் மூலமும் நுண்ணுயிரி தெளிக்க செய்து நோயை பரவ செய்கின்றது
  • நுண்ணுயிரி பூக்களை தாக்கியதும், 7 முதல் 10 நாட்களிலேயே பூக்கள் அழுகிவிடும். பூக்களை பாதித்தப் பின்பு நுண்ணுயிரி பழத் தண்டுகளில் நோய் பரவச் செய்து மற்றும் இறுதியில் குச்சிகளைத் தாக்கும்
  • நீர் கோர்த்தலின் தொடர்ச்சியினால், நோயின் இரண்டாம் நிலையாக தாக்கக்கூடும். ஈரப்பதம் அதிகரிப்பினால், நுண்ணுயிரி இலைகளிலும் இந்நோய் பாதிக்கப்படும்

கட்டுப்பாடு:

  • எதிர்ப்பாற்றல் மிக்க வகைகள்: கேய்வர், ஒரியன்ட், கர்பேர் அல்லது டவ்லஸ்
  • உரத்தை சரிவிகித அளவில் பராமரிக்க வேண்டும். நைட்ரஜன்் அதிகளவின் உபயோகிக்கக் கூடாது
  • செயலற்ற காலங்களில் வேண்டாத செடிகளை அகற்றிவிட வேண்டும். கோடைக்காலங்களில் வேண்டாத செடிகளை கவாத்து செய்ய வேண்டும். இல்லையெனில் நோய் வளர்ச்சியைக் கூடும்
  • குளிர்காலங்களில் செடியின் விழும்பில் ஏற்படும் நுண்ணுயிரிகளை அகற்றிவிட வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடியினை 8 – 12 அங்குள அளவில் அகற்றிவிட வேண்டும்.
  • பூக்கள் பூர்ப்பதற்கு முன்பும், பின்பும் ஐந்து நாட்கள் இடைவேளிவிட்டு நுண்ணுயிர்க் கொல்லியை தெளிக்கவும்.
  • பழத்தோட்டங்களில் ஏற்படும் கடும் மழையினாலும் அல்லது ஆலங்கட்டி மழையினால் ஏற்படும் சேததத்தின் போது நுண்ணுயிரிக் கொல்லியினை தெளிக்கவும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015