பயிர் பாதுகாப்பு :: மிளகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பொள்ளு வண்டு: லாங்கிட்டாஸிஸ் நிகிரிபினிஸ்

சேதத்தின் அறிகுறிகள்:

  • தண்டு மற்றும் காய்களில்: வண்டினப் புழு வளரும் நுனி, இளம் தளிர், இலைக்காம்பு, கதிர் மற்றும் காய்களை துளையிட்டு சாப்பிடும்.
  • இளம் தண்டுகளில் துளையிடுவதால் தண்டுப்பகுதி காய்ந்துவிடுகிறது.
  • வண்டினப் புழுக்களால் தாக்கப்பட்ட கதிர்கள் கருப்பாக மாறிப் பிறகு அழுகி கதிர்கள் உதிரிவிடும்.
  • வண்டினப் புழுக்கள் காய்களை துளையிட்டு சென்று உள்ளிருக்கும் திசுக்களைச் சாப்பிடும்.
  • காய்ந்த காய்களில் சிறுதுளைகள் காணப்படும்.
  • புழுக்கள் காய்களை துளையிடுவதால் காய்கள் கருகிக் காய்ந்து விடுகின்றன.
  • தாக்கப்பட்ட காய்கள் பொட்டாக அல்லது பொக்கு இருக்கும் அழுத்தியவுடன் உடைந்து விடும்.
  • பொட்டாக உள்ளக் காய்களை பொள்ளுக் காய்கள் எனப்படும்.
  • இலைப்பகுதியில்:
  • இளம் தளிர்களை வண்டுகள் சாப்பிடும்.
  • இலையின் மேற்பரப்பில் ஒழுங்கற்ற துளைகள் இருக்கும்.
  • முதிர்ந்த இலையில், வண்டுகள், இலையின் மேற்பரப்பில் இருக்கும் திசுக்களை சுரண்டி சாப்பிடும்.
பூச்சியின் விபரம்:
  • முட்டை : பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் தாய் வண்டுகள் வளரும் மொட்டு, இலை, இலைக்காம்பு, கதிர் மற்றும் இளம் காய்களில் துளையிட்டுத் தனித்தனியே முட்டையிடும்.
  • வண்டினப்புழு : இளம் மஞ்சளாக இருக்கும்
  • கூட்டுப்புழு: கூட்டுப்புழு மண்கூட்டில் இருக்கும்.
  • வண்டு : வண்டு நீலம் கலந்த மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக இருக்கும். பின்னங்கால்கள் சற்றுப் பெரியதாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தோட்டத்தின் நிழல் உண்டாவதை ஒழுங்குப்படுத்துவதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைக்கலாம்.
  • கொடிகளின் அடிப்பகுதியில் இருக்கும் மண்ணை உழவும
  • குவினால்ஃபாஸ் 0.05 சதம் கரைசலை ஜீலை மற்றும் அக்டோபரில் பயிரில் தெளிக்கவும் மற்றும் நீம் கோல்டு 0.06 சதவிகிதம் (வேம்பு வகைச் சார்ந்த பூச்சிக்கொல்லியை ஆகஸ்டு, செப்டம்பர் தெளிக்கவும்)

 


வண்டு


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015