பயிர் பாதுகாப்பு :: அண்ணாசிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்
இலை மற்றும் பழம் அழுகல்: சைரட்டோஸ்டோமெல்லா பேரடோக்சா

அறிகுறிகள்:

  • அழுகிய மொட்டு அல்லது அடிப்பகுதியை காய வைக்காமலும், சரியான காற்றோட வசதி இல்லாத பொதியில் அடைத்தால் இந்த நோய் வருவதற்கு சாதமாகும்
  • களையெடுக்கும் பொழுது முதிர்ந்த செடிகளின் கழுத்துப் பகுதிகளில் ஏற்பட்ட புண் மூலமாக பூசணம் பரவி அந்தச் செடிகளை முழுவதுமாக அழித்துவிடும்
  • தீவிரமான நிலையில் முழு செடியுமே கருப்பாக மாறி இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் அழுகிவிடும்

கட்டுப்பாடு:

  • பயிரிடப்படும் நாற்றுகளை 0.3%டைத்தேன் Z -78 உடன் முக்கி எடுக்க வேண்டும் அல்லது இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
  • தாமிர பூச்சிக்கொல்லியை அன்னாசி பயிருக்கு பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் அது இலையை கருகச் செய்துவிடும்
  • பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றிவிடவும். இனப்பெருக்கத்திற்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து எடுக்கக்கூடாது


 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015