பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள் :: காய்கறிகள் :: உருளைக்கிழங்கு
பின் பருவத்து கருகல் நோய் :  பைட்டோப்தோரா indestans
அறிகுறி
•        இலை, தண்டு மற்றும் கிழங்குகள் பாதிக்கப்படும்
•        இலை மற்றும் கிழங்கு முழுவதும் புள்ளிகள் காணப்படும்.  ஆரம்ப நிலையில் பழுப்பு நிறப்புள்ளிகள், கருப்பு நிறமாக மாறிவிடும்
•        தண்டு பகுதி சிதைந்து (அ) ஒடிந்து விடும்
•        கிழங்கு துரு பிடித்தது போல் காணப்படும்
நீர் நனைத்த புள்ளிகள் உடைந்த தண்டு ஊதா பழுப்பு நிற புள்ளி பழுப்பு நிறத்தில் திசு அழுகல்

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
•        பூஞ்சை இழை நிறமற்று காணப்படும்
•        வித்தகக்காம்பு - பூஞ்சை இழை உள்ளிருந்து கிழங்கின் துளை மூலம் தோன்றுகிறது
•        சிதலகம் - பல் உட்கரு உயிரணி, மெல்லிய சுவருடையது, நிறமற்ற கோள வடிவமுடையதுமூ
•        இயங்கும் வித்துக்கள் - இரு உணர் கொம்புடையது

பரவுதல் மற்றும் உயிர் வாழ்தல்
•        பாதிக்கப்பட்ட கிழங்கு மற்றும் மண் வழி பரவும்
•        பூஞ்சை அதிக நாட்கள் மண்ணில் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது
•        பாதிக்கப்பட்ட கிழங்குகள் தோட்டத்திலிருந்து, சேமிப்புக் கிடங்கிற்கும் பின் அதை அடுத்து விதையாக பயன்படுத்துவதன் மூலம் பரவுகிறது

நோய்தொற்று
•        வெப்பநிலை 12-15°C மற்றும் ஈரப்பதம் 90% க்கும் அதிகமாக இருக்கும் போது வேகமாக பரவும்

மேலாண்மை
•        நோய் எதிர்ப்பு திறன் கொண்ட இரகத்தை பயிர் செய்யவும்
•        கிழங்குகள் சேதமடையாமல் அறுவடை செய்யவும்
•        10-15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து பூஞ்சாண மருந்தினை தௌளிக்கவும்
•        பிரிஸ்டன் 600 கிராம் , எக்டர்
•        ஜினப்் 0.2%
•        போர்டாக்ஸ் கலவை 1.0%
•        ஆயnஉடிணநb (2 கிலோ , எக்டர்)

Source of Images:
http://en.wikipedia.org/wiki/Phytophthora_infestans
http://www.agf.gov.bc.ca/cropprot/lateblight.htm

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015