பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் நோய்கள்

எள்ளின் பச்சைப்பூ நோய்: பைட்டோபிளாஸ்மா
அறிகுறிகள்

  • செடியின் அனைத்து பூக்கும் பகுதிகளும் பச்சை இலைகளாக மாறுகின்றன. பூக்கும் பாகங்களில் நரம்புகளில் பச்சை நிறம் வெளிர்ந்து காணப்படும்.
  • மிகவும் தீவரமாக பாதித்த பகுதிகளில் பூக்கள் முழுவதுமாக சிறுசிறு இலைகளாக அடர்ந்த நிலையில், சிறிய இடைக்கணுக்களைக் கொண்டு, நிறைய சிறிய கிளைகள் வளைந்து காணப்படும்.
  • காய்கள் வளர்ந்தாலும் அதில் விதைகள் காணப்படாது.
  • எள்ளின் பச்சைப்பூ நோய் ஒரோசியஸ் அல்பிங்கடஸ் என்னும் தத்துப்பூச்சியினால் பரவுகிறது.

கட்டுப்பாடு

  • ஊடுபயிராக எள் + துவரை (6:1) என்ற விகிதத்தில் பயிரிடலாம்.
  • நோயுற்ற செடிகளை அழிக்கவேண்டும்.
  • மூன்று முறை டைமீதோயேட் (0.03 சதவிகிதம்) விதைத்த 30,40 மற்றும் 60வது நாட்களில்  தெளித்தால் நோய் பரப்பும் காரணியைக் கட்டுப்படுத்தலாம்.
Sesame Sesame

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015