பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆன்தராக்நோஸ் மற்றும் சிவப்பு அழுகல் நோய்

அறிகுறிகள்

  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட இலைகளின் மேல்பரப்பில் புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி இலையை காய்ந்து விடச்செய்கின்றன.
  • இலைகளின் மேல் இடைநரம்புகளில் இந்நோய் தோன்றி நீளமான - உருளையான சிவப்பு அல்லது கத்தரிப்பூ நிறத்தில் புள்ளிகள் தோன்றி அதன் மீது கருப்பு அசர்வு நிலைக் காணப்படுகிறது.
  • நோய் தாக்கப்பட்ட தண்டினை பிளக்கும்போது தொடர்ச்சியாக நிறமாறியும் காணப்படுகிறது.


கட்டுப்பாடு

  • இந்நோயைக் கட்டுப்படுத்த விதையை கேப்டான்/திரம் 4 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
  • மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015