| பயிர் பாதுகாப்பு  :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                | பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிகுவா | 
               
              
                
                  
                      அறிகுறிகள்
                        
                          - முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு  இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணுகிறது.
 
                          - வளர்ச்சியடைந்த புழு இலைகளின் ஓரங்களைத்  தின்று சேதப்படுத்தும்.
 
                          - தாக்கப்பட்டசெடிகளின் இலைகள் வலைப்பின்னல்  போன்று காட்சியளிக்கும்.
 
                         
                        பூச்சியின் விபரம்
                        
                          - முட்டைகள் - பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் முட்டையைக் குவியல்களாக இடும்.
 
                          - புழு - கருமைக் கலந்த மஞ்சள் நிற ரோமங்கள் உடலைச் சுற்றி காணப்படும்.
 
                          | 
                        | 
                       
                   கட்டுப்பாடு
                  
                    - கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழுதல்  வேண்டும்.
 
                    - பரிந்துரைக்கப்பட்ட விதை அளவை மட்டும்  பயன்படுத்த வேண்டும்.
 
                    - தேவையான இடைவெளி விட்டு நட வேண்டும்.
 
                    - ஊடுபயிராக மக்காச்சோளம் (அ) சோளம்  ஆகியவற்றை 4:2 என்ற விகிதத்தில் பயிரிட வேண்டும்.
 
                    - தாக்கப்பட்ட செடிகள், முட்டைக்குவியல்  மற்றும் இளம் புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
 
                    - வயல்வெளியை சுத்தமாக வைத்துக் கொள்ள  வேண்டும். குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை தாக்கப்பட்ட செடிகளின் பாகங்களை சேகரித்து  உரக்குழியில் இட்டு எரித்துவிட வேண்டும்.
 
                    - விளக்குப் பொறியை எக்டர்க்கு 1 வீதம்  அமைத்து அந்துப் பூச்சியினைக் கவர்ந்து அழிக்கலாம்.
 
                    - குளோர்பைரிபாஸ்  (அ) குயினால்பாஸ் மருந்தை எக்டர்க்கு 1500 மிலி எடுத்து தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்.
 
                  | 
                 
            | 
           
         
  |