பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

தவளைக் கண் இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போ ஃநிக்கோட்டியானே
அறிகுறிகள்

  • இந்நோய் இடி இலைகளில் ஏற்படுகின்றது.
  • இலைப்புள்ளிகள் வட்டவடிவமாகவும், பழுப்பு நிறத்திலும் மத்தியில் வெள்ளை நிறத்திலும் தவளைக் கண் போன்று தோற்றமளிக்கிறது.
  • ஈரப்பதமான இடங்களில் வெளிக்கோடுகள் கோண வடிவத்திலும் மத்தியப் பகுதி வெண்மை  நிறமற்றும் காணப்படுகிறது.
  • அதிகப்படியான மழை பெய்யும் பகுதியில் இறந்த செல்களை உடைய பகுதிகளும், கோடைக்காலங்களில் தவளைக் கண் போன்ற பகுதி குண்டூசி போல் காட்சியளிக்கும்.
  • இலையின் நுனிப்பாகத்திலும் ஓரத்திலும் உள்ள புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து ஓரம் கருகி இலைகள் நாளடைவில் உதிர்ந்துவிடுகின்றன.
  • புகையிலையின் விளைச்சலும் தரமும் இந்நோயினால் குறைகின்றன.

கட்டுப்பாடு

  • நாற்றாங்கால் மேடைப்பாத்திகளை பாதிக்கப்பட்ட வயல்களுக்கு அருகில் அமைக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்புறப்படுத்தவேண்டும்.
  • அளவுக்கு அதிகமான தலைச்சத்தை பயன்படுத்தக்கூடாது. முதிர்ந்த இலைகளை மட்டும் அகற்றவேண்டும். அப்படி அகற்றினால் இலைப்புள்ளி  நோய் வருவது குறைகிறது.
  • போர்டோக் கலவை 0.4 சதவிகிதம் (4 கிராம் / லிட்டர்), சினெப் 0.2 சதவிகிதம் (2 கிராம் / லிட்டர்) அல்லது 0.1 சதவிகிதம் (1 கிராம்  / லிட்டர்), பினோமைல் ஆகிய மருந்தைப் பயன்படுத்தலாம்.

 

 

tobacco

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015