பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

திடீர் வாடல்

அறிகுறிகள்:

  • பாக்டீரியா வாடல் போல் இல்லாமல், பருவத்தின் கடைசியில் தீடீரென்று வாடும்
  • அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும் போது செடிகள் கொடி போன்று தொங்கிக் கொண்டிருக்கும்
  • இதே நிலையைத் தொடர்ந்தால், 4 நாட்களில் செடிகள் முழுவதும் வாடும்
  • நோய் வேகமாக 5-6 நாட்களில் பரவும். வயலில் முதிர்ச்சியடையாத பழங்கள் மட்டும் காணப்படும்
  • தாக்கப்பட்ட செடிகளின் வேர்கள் சரியாக உருவாகமல், தடித்துக் காணப்படும்
  • பித்தியம் வகை, ரைசோக்டினியா சொலானி, ப்யூசேரியம் வகையுடன் சேர்ந்து இந்த நோய் காணப்படும்
  • அதிகப்படியான ஈரப்பதம், வறட்சி, மிகக்குறைந்த வெப்பநிலையால் செடிகள் பலவீனமாகி, மண் மூலம் பரவும் நோய்க் காரணி மூலம் நோய் பரவும்

கட்டுப்பாடு:

  • மண் நன்றாக வடியுமாறு இருக்க வேண்டும்.
  • நோயுற்ற பயிர்க் குப்பைகளை அழிக்க வேண்டும்.
  • டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ/ஹெக் பண்ணை எருவுடன் கலந்து மண்ணில் இடவேண்டும்.
  • மேன்கோசெப்/காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் /லிட்டர் (அ) கார்பண்டசிலம்/கையோபினேட் - மீத்தைல் 1 கிராம்/லிட்டர் தெளிக்க வேண்டும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015