முதல் பக்கம் தொடர்புக்கு  
சார்புடைய தலைப்புகள்
குறுகிய கால இரகங்கள்
மத்திய கால இரகங்கள்
நீண்ட கால இரகங்கள்
அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் இரகங்கள்
புதிய நெல் இரகங்கள்
பாரம்பரிய இரகங்கள்

தமிழ்நாட்டின் நெல் இரகங்கள்



குறுகிய கால இரகங்கள்
கால அளவு (நாட்கள்) தகுந்த பருவங்கள் தகுந்த இரகங்கள்
90 - 120 நாட்கள் நவரை,சொர்ணவாரி, கார், குறுவை, பின்தாளடி ஏடிடீ-36, ஐஆர்50, ஐஆர்64, ஐஆர் 36, எம்டியு 3, கோ47, எஎஸ்டி16, எஎஸ்டி17, எடிடீ37, டிபிஎஸ்2, எடிடீ 39, எஎஸ்டி18, எம்டீயு4, பிஎம்கே2, எடிடீ42, எம்டீயு 5, எஎஸ்டி 20, எடிடீ 43, டிகேஎம் 11, எடிடீ (ஆர்அச்) 1, எடிடீ(ஆர்)45, டிகேஎம்(ஆர்) 12, டிஆர்ஓய் (ஆர்)2, பிஎம்கே (ஆர்) 3, எடிடீ (ஆர்) 47, எடிடீ (ஆர்) 48.







 


மத்திய கால இரகங்கள்
கால அளவு (நாட்கள்) தகுந்த பருவங்கள் தகுந்த இரகங்கள்
120-140 நாட்கள் முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம், பின் பிசாணம் ஐஆர் 20, பவானி, ஐஆர் 50, கோ 43, வெள்ளைப்பொன்னி, எடிடீ 38, டிபிஎஸ் 2, டிகேஎம் 10, டிபிஎஸ் 3, எஎஸ்டீ 19, டிஆர்ஓய் -1, கோ 46, கோஆர்அச் 2 மற்றும் எடிடீ (ஆர்) 46.
மேலே செல்க






 



நீண்ட கால இரகங்கள்
கால அளவு (நாட்கள்) தகுந்த பருவங்கள் தகுந்த இரகங்கள்
140-180 நாட்கள் முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம்,, பின் பிசாணம். பொன்மனி, பிஒய் 4 (ஜவகர்), எடிடீ (ஆர்) 44
மேலே செல்க



 



தமிழ்நாட்டில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் இரகங்கள்

குறுகிய கால இரகங்கள் ஐ ஆர் 64, கோ 47, ஏ டி டீ 36, ஏ டி டீ 37, ஏ டி டீ 43, ஏ டி டீ 45, ஏ டி டீ47, ஏ டி டீ 48, ஏ எஸ் டி 16, ஏ எஸ் டி 17, ஏ எஸ் டி20 மற்றும் எம் டி யூ 5




மத்திய கால இரகங்கள் ஐ ஆர் 20, ஐ ஆர் 36, கோ 43, கோ 46, ஏ டி டீ 38, ஏ டி டீ 39,
ஏ டி டீ 46, பவானி, எம் டி யூ 3, எம் டி யூ 4, டீ ஆர் ஒய் 1,
ஏ எஸ் டி 19, டி பி எஸ் 2 மற்றும் டி பி எஸ் 3



நீண்ட கால இரகங்கள் பொன்மணி ( சி ஆர் 1009), பி பீ டீ 5204, மற்றும் ஏ டி டீ 44

 


வீரிய ஒட்டு இரகங்கள் கோ ஆர் எச் 1, கோ ஆர் எச் 2, கோ ஆர் எச் 3 மற்றும்
ஏ டி டீ ஆர் எச் 1

 

 

அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் இரகங்கள் - குறுகிய கால இரகங்கள்


  ஐ ஆர் 64

உருவாக்கிய முறை : ஐ ஆர் 5657-33-2-1/ ஐ ஆர் 2061-465-1-5-3
வயது (நாட்கள்) :115 – 120
சராசரி மகசூல் (கி/எக்டர்) :6146
1000 தானிய மணிகளின் எடை (கி) :23.1
தானிய அமைப்பு : நீண்ட, சன்ன நெல்
பயிரின் தன்மை : நடுத்தர உயரம்
அரிசியின் நிறம் : வெண்மை

மேலே செல்க










 




கோ47  

உருவாக்கிய முறை – ஐ ஆர் 50/ கோ 43
வயது (நாட்கள்) – 110-115
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5832
1000 தானிய மணிகளின் எடை (கி) – 20.6
தானிய அமைப்பு – நடுத்தர, சன்ன நெல்
பயிரின் தன்மை – நீண்டு வளரும் தன்மை
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – குலை நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது

மேலே செல்க













  ஏ டி டீ 36

உருவாக்கிய முறை – திரிவேணி × ஐ ஆர் 20
வயது (நாட்கள்) –110
சராசரி மகசூல் (கி/எக்டர்) –4000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 20.6
தானிய அமைப்பு – நடுத்தரமானது
பயிரின் தன்மை – நீண்டு வளரும் தன்மை t
அரிசியின் நிறம் - வெண்மை
சிறப்புப் பண்பு – குலை நோய் மற்றும் புகையானுக்கு
எதிர்ப்புத் திறன் கொண்டது

மேலே செல்க

 

 

 

 

 

 




ஏ டி டீ 37  

உருவாக்கிய முறை – பி ஜி 8280-12 × பி டி பி 33
வயது (நாட்கள்) –105
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6200
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.4
தானிய அமைப்பு – சிறிய குண்டு ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டை மற்றும் நடுத்தரமாக நீண்டு வளரும்
அரிசியின் நிறம் - வெண்மை
சிறப்புப் பண்பு – நிறைய பூச்சிகளுக்கும், நோய்க்கும் எதிர்ப்புத் திறன் கொண்டது.
விதை உறக்க காலம் – 60 நாட்கள்

மேலே செல்க















  ஏ டி டீ 43

உருவாக்கிய முறை – ஐ ஆர் 50 / வெள்ளைப் பொன்னி
வயது (நாட்கள்) –110
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5900
1000 தானிய மணிகளின் எடை (கி) – 15.5
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டை பயிர்
அரிசியின் நிறம் - வெண்மை
சிறப்புப் பண்பு - பச்சைத் தத்துப்பூச்சி எதிர்ப்புத்திறன், அதிக தூர் கட்டும் திறன் கொண்டது, சன்ன ரக அரிசி தரும்

மேலே செல்க









 





ஏ டி டீ 45  

உருவாக்கிய முறை – ஐ ஆர் 50 / ஏ டி டீ 37
வயது (நாட்கள்) – 110
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6100
1000 தானிய மணிகளின் எடை (கி) – 17.5
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர், நீண்டு வளரும்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - ஆனைகொம்பனுக்கு எதிர்ப்புத் திறன் புகையானுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது

மேலே செல்க













 

  ஏ டி டீ 47

உருவாக்கிய முறை – ஏ டி டீ 43 / சீரக சம்பா
வயது (நாட்கள்) –118
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6200
1000 தானிய மணிகளின் எடை (கி) – 13.5
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர், நீண்டு வளரும்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – தண்டுத்துளைப்பான், வெண்முதுகு தத்துப் பூச்சி, இலை உறை கருகல் எதிர்ப்புத் திறன் கொண்டது.

மேலே செல்க












 

ஏ டி டீ 48  

உருவாக்கிய முறை – ஐ இ டீ 11412 / ஐ ஆர் 64
வயது (நாட்கள்) – 94-99
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 4800
1000 தானிய மணிகளின் எடை (கி) – 22.0
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர், நீண்டு வளரும்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - முன் பருவத்திற்கு ஏற்றது, பச்சைத் தத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன், தண்டுத்துளைப்பானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க













 

  ஏ எஸ் டி 16

உருவாக்கிய முறை – ஏ டி டீ 31 / கோ 39
வயது (நாட்கள்) – 110 - 115
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5600
1000 தானிய மணிகளின் எடை (கி) – 24.2
தானிய அமைப்பு – சிறிய, குண்டு ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர், நீண்டு வளரும்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – குலை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. மிதமான தூர் கட்டும் திறன்

  மேலே செல்க












ஏ எஸ் டி 17  

உருவாக்கிய முறை – ஏ டி டீ 31 / ரத்னா / ஏ எஸ் டி 8/ ஐ ஆர் 8
வயது (நாட்கள்) – 95-101
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5422
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.8
தானிய அமைப்பு – சிறிய குண்டு ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர், விரிந்து வளரும்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – புகையானுக்கு மிதமான எதிர்ப்புத்திறன், ஆனைக்கொம்பன் தாக்குதலுக்கு உள்ளாகும்

  மேலே செல்க












  ஏ எஸ் டி 20

உருவாக்கிய முறை – ஐ ஆர் 18348 / ஐ ஆர் 25863/ ஐ ஆர் 58
வயது (நாட்கள்) – 110
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 22.08
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நீண்டு வளரும் தன்மை
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – நிறைய பூச்சிகள் மற்றும் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க












 

 

எம் டி யூ 5  

உருவாக்கிய முறை – ஒரைசா கிளாபெரிமா × பொக்காலி
வயது (நாட்கள்) – 95 - 100
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 21.1
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நீண்டு வளரும் தன்மை
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – வறட்சி தாங்கும், நாற்று விட்டு நட ஏற்ற இரகம்

  மேலே செல்க










 

 


அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் இரகங்கள் - மத்திய கால இரகங்கள்


  ஐ ஆர் -20

உருவாக்கிய முறை – ஐ ஆர் 262 / டீ கே எம் 6
வயது (நாட்கள்) – 130 - 135
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 19
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – தண்டுத்துளைப்பானுக்கு எதிர்ப்புத் திறன்

  மேலே செல்க















ஐ ஆர் 36  

உருவாக்கிய முறை – ஐ ஆர்1561-228 / 1ஐ ஆர் 244/ ஒரைசா நிவரா/ சி ஆர் 94-13
வயது (நாட்கள்) – 120
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 21
தானிய அமைப்பு – நடுத்தரமான நெல்
பயிரின் தன்மை – நீண்டு வளரும் குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – புகையானுக்கு எதிர்ப்புத்திறன், தண்டுத்துளைப்பான் மற்றும் பாக்டீரியா இலை கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க














 

  கோ 43

உருவாக்கிய முறை – தாசல் / ஐ ஆர் 20
வயது (நாட்கள்) – 135 - 140
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5200
1000 தானிய மணிகளின் எடை (கி) – 20
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நீண்டு வளரும் பயிர் தன்மை
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – களர், உவர் தன்மையை தாங்கும்

  மேலே செல்க









 

 



கோ 46  

உருவாக்கிய முறை – டீ 7 / ஐ ஆர் 20
வயது (நாட்கள்) – 125
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.5
தானிய அமைப்பு – நீண்ட, சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – உயரமான , நீண்டு வளரும் பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – புகையானுக்கு எதிர்ப்புத் திறன்

  மேலே செல்க










 



  ஏ டி டீ 38

உருவாக்கிய முறை – ஐ ஆர் 1529-680-3-2/ஐ ஆர் 4432-52-6-4/ஐ ஆர் 7963-30-2
வயது (நாட்கள்) – 130 - 135
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6200
1000 தானிய மணிகளின் எடை (கி) – 21
தானிய அமைப்பு – நீண்ட, சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர, நீண்டு வளரும் குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – பாக்டீரியா இலை கருகல் தாக்கும், நிறைய பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது , விதை சேமிக்கும் காலம் குறைவு

  மேலே செல்க













 

ஏ டி டீ 39  

உருவாக்கிய முறை – ஐ ஆர் 8/ ஐ ஆர் 20
வயது (நாட்கள்) – 120 - 125
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 18
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தரமான குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – குலை நோய் மற்றும் இலை உறை அழுகலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க












 

  ஏ டி டீ 46

உருவாக்கிய முறை – ஏ டி டீ 38/ கோ 45
வயது (நாட்கள்) – 135
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6656
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.8
தானிய அமைப்பு – நீண்ட சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நீண்டு வளரும் குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு- இலை மடக்குப்புழு மற்றும் தண்டுத்துளைப்பானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க












பவானி  

உருவாக்கிய முறை – பீடா / பி பி ஐ 76
வயது (நாட்கள்) – 130 - 135
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 21.5
தானிய அமைப்பு – நீளமான சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர உயரமான பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை

  மேலே செல்க










 



  எம் டி யூ 3

உருவாக்கிய முறை – ஐ ஆர் 8 / டபுள்யூ 1263
வயது (நாட்கள்) – 120 - 125
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 5000
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.1
தானிய அமைப்பு – நீளமான சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - ஆனைக்கொம்பனுக்கு அதிக எதிர்ப்பு சக்தியும், புகையான் மற்றும் குலை நோய்க்கு எதிர்ப்புத்திறனும், பழுப்பு இலைப்புள்ளி, கழுத்து குலை நோய், வெண்முதுகு தத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க














எம் டி யூ 4  

உருவாக்கிய முறை – ஏ சி 2836 / ஜகன்னாத்
வயது (நாட்கள்) – 120 - 125
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5900
1000 தானிய மணிகளின் எடை (கி) – 22.9
தானிய அமைப்பு – நீளமான சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நீண்டு உயரமான பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - பனிப் பொழிவை தாங்கும் திறன் கொண்டது

  மேலே செல்க










 



  டீ ஆர் ஒய் 1

உருவாக்கிய முறை – ஐ ஆர் 578-172-2-2 / பி ஆர் -1-2-பி-1
வயது (நாட்கள்) – 135-140
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5255
1000 தானிய மணிகளின் எடை (கி) – 24
தானிய அமைப்பு – நடுத்தர ரக நெல்
பயிரின் தன்மை – நீண்டு வளரும்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - அவல் மற்றும் பொரி தயாரிப்புக்கு ஏற்ற ரகம்

  மேலே செல்க







 






ஏ எஸ் டி 19  

உருவாக்கிய முறை – லால்நகந்தா / ஐ ஆர் 30
வயது (நாட்கள்) – 127 (120 - 132)
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5800
1000 தானிய மணிகளின் எடை (கி) – 18.39
தானிய அமைப்பு – குட்டை சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – குட்டைப்பயிர், நீண்டு வளரும்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - குலைநோய் மற்றும் புகையான் எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க













  டி பி எஸ் 2

உருவாக்கிய முறை – ஐ ஆர் 26 / கோ 40
வயது (நாட்கள்) – 125 - 130
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 4615
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.5
தானிய அமைப்பு – தடித்த, குண்டு ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - இலைமடக்குப்புழு மற்றும் புகையான் , குலைநோய், பாக்டீரியா இலைகருகல் மிதமான எதிர்ப்புத்திறன், வெண்நுனி நூற்புழுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது

  மேலே செல்க














டீ பி எஸ் 3  

உருவாக்கிய முறை – ஆர் பி 31-492 / எல் எம் என்
வயது (நாட்கள்) – 135 -140
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5600
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.2
தானிய அமைப்பு – தடித்த குண்டு ரக நெல்
பயிரின் தன்மை – நீண்ட குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - குலைநோய் மற்றும் இலை மடக்குப்புழுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க













  வெள்ளைப்பொன்னி

உருவாக்கிய முறை – டைசூங் 65 / 2 மயாங் இபோஸ்-80
வயது (நாட்கள்) – 135 - 140
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 4500
1000 தானிய மணிகளின் எடை (கி) – 16.4
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர உயரமான பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – சன்ன ரக அரிசி, துங்ரோ வைரஸ் எதிர்ப்புத்திறன், இலைப்புள்ளி மற்றும் குலை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க














அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் இரகங்கள் - நீண்ட கால இரகங்கள்


ஏ டி டீ 44  

உருவாக்கிய முறை – ஐ ஆர் 56 / ஓ ஆர் 142-99
வயது (நாட்கள்) – 148
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6214
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.9
தானிய அமைப்பு – தடித்த குண்டு ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர உயரமான பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப்பண்பு– குலைநோய், பச்சை தத்துப்பூச்சி, தண்டுத்துளைப்பான், பழுப்பு புள்ளி நோய் மற்றும் இலை மடக்குப்புழு எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க














  பொன்மணி

உருவாக்கிய முறை – பங்கஜ் / ஜகன்னாத்
வயது (நாட்கள்) – 155 - 160
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5300
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.5
தானிய அமைப்பு – தடித்த குண்டு ரக நெல்
பயிரின் தன்மை – நீண்டு வளரும் பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - உயர் விளைச்சல் ரகம், புகையானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.

  மேலே செல்க












 


பி பி டீ 5204  

உருவாக்கிய முறை – ஜி இ பி 24 × டீ (என்) 1 × மசூரி
வயது (நாட்கள்) – 150
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6000
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – குலைநோய்க்கு எதிர்ப்புத்திறன், மானாவாரி தாழ் நிலங்களுக்கு ஏற்ற இரகம்.

  மேலே செல்க









 




  பி ஓய்- 4(ஜவஹர்)

உருவாக்கிய முறை – ஐ ஆர் 8 × ஹெச் 4
வயது (நாட்கள்) – 145 - 150
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6200
1000 தானிய மணிகளின் எடை (கி) – 24.8
தானிய அமைப்பு – நீண்ட குண்டு ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர், நீண்டு வளரும்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு –பாக்டீரியா இலை கருகல், பழுப்பு இலைப்புள்ளி, துங்ரோ வைரஸ், இலை உறை அழுகல், இலை மடக்குப்புழு, தண்டுத்துளைப்பான் எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க












 



அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் இரகங்கள் -வீரிய ஒட்டு இரகங்கள்


கோ ஆர் எச் 1  

உருவாக்கிய முறை – ஐ ஆர் 62829 × ஐ ஆர் 10198-666-2 ஆர்
வயது (நாட்கள்) – 110-115
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6000
தானிய அமைப்பு – நடுத்தர சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு – இலை உறை கருகல், பழுப்பு இலை புள்ளி நோய், புகையான், பச்சை தத்துப்பூச்சி, துங்ரோ வைரஸ்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது

  மேலே செல்க














  கோ ஆர் எச் 2

உருவாக்கிய முறை – ஐ ஆர் 58025 ஏ / சி 20 ஆர்
வயது (நாட்கள்) – 125
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6100
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.77
தானிய அமைப்பு – நடுத்தர ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர்
அரிசியின் நிறம் – வெண்மை
சிறப்புப் பண்பு - உயர் விளைச்சல் இரகம்

  மேலே செல்க















கோ ஆர் எச் 3  

உருவாக்கிய முறை : த நா வே ப சி எம் எஸ் 2 ஏ / சி பி 87 ஆர்
வயது (நாட்கள்) : 110 – 115
பருவம் : கார் / குறுவை/ சொர்ணவாரி / நவரை
சராசரி மகசூல் (கி/எக்டர்) : 6600
தானிய அமைப்பு - நடுத்தர ரக நெல்
அரிசியின் நிறம் - வெண்மை
சிறப்புப் பண்பு - உயர் விளைச்சல் தரும்,நடுத்தர சன்ன ரக அரிசி, நல்ல சமையல் பண்பும், சேமிப்பு பண்புகளும் கொண்டது. குலை நோய் மற்றும் துங்ரோ வைரஸ், புகையான் தாக்குதல் தாங்கும் திறன் கொண்டது.பச்சை தத்துபூச்சிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.ஒத்த பூக்கும் தன்மைகள் கொண்ட தாய் செடிகள்

  மேலே செல்க















  ஏ டி டீ ஆர் எச் 1

உருவாக்கிய முறை – ஐ ஆர் 58025 × ஐ ஆர் 66 ஆர்
வயது (நாட்கள்) – 115
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6400
1000 தானிய மணிகளின் எடை (கி) – 23.8
தானிய அமைப்பு – நீண்ட சன்ன ரக நெல்
பயிரின் தன்மை – நடுத்தர குட்டைப்பயிர், நீண்டு வளரும்
அரிசியின் நிறம் – பால் வெள்ளை நிற மணம் மிக்க அரிசி
சிறப்புப் பண்பு –உயர் விளைச்சல் தரும் ரகம்

  மேலே செல்க











 

 

புதிய நெல் ரகங்கள்


கோ ஆர் எச் 3  

வெளியிட்ட ஆண்டு - 2006
உருவாக்கிய முறை - டிஎன்ஏயு சிஎம்எஸ் 2
வயது (நாட்கள்) - 110 – 115
பருவம் : கார் / குறுவை/ சொர்ணவாரி / நவரை
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 6600
தானிய அமைப்பு - நடுத்தர ரக நெல்
அரிசியின் நிறம் - வெண்மை
சிறப்புப் பண்பு - குறுகிய கால வீரிய ஒட்டு நெல் (115 நாட்கள்),நடுத்தர சன்ன வெள்ளை நிற அரிசி,நல்ல சமையல் பண்புகள் கொண்டது.குலை நோய் மற்றும் துங்ரோ நோயை தாங்கி வளரக்கூடியது. பச்சை தத்துப்பூச்சிக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. வெண்முதுகு தத்துப்பூச்சி மற்றும் புகையானை தாங்கி வளரக்கூடியது.ஒரே சமயத்தில் பூக்கும் தன்மையுடைய பெற்றோரை உடையது

  மேலே செல்க













 




  நெல்- ஆர் எம் டி (ஆர்) 1

வெளியிட்ட ஆண்டு - 2006
உருவாக்கிய முறை - டி ஜீ ஆர் 75 என்ற இரகத்திலிருந்து தனி வழித் தேர்வு
வயது (நாட்கள்) - 100-105
பருவம் : செப்டம்பர்– அக்டோபர் (நேரடி விதைப்பு)
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 4000
தானிய அமைப்பு - மத்திய குட்டை
அரிசியின் நிறம் - நீள பருமன் மற்றும் வெள்ளை நிற அரிசி
சிறப்புப் பண்பு - மானாவாரி நேரடி விதைப்பிற்கேற்ற நெல் இரகம் ,குறைந்த வயது ,மானாவாரியில் அதிக மகசூல் தரவல்லது. வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது. மத்திய குட்டை மற்றும் சாயாத தன்மை கொண்ட செடிகள்,நீள பருமன் மற்றும் வெள்ளை நிற அரிசி

  மேலே செல்க













 



நெல் – டி பி எஸ் (ஆர்) 4  

வெளியிட்ட ஆண்டு - 2006
உருவாக்கிய முறை - டி எஸ் 29 / அம்பை 16
வயது (நாட்கள்) - 95
பருவம் : கன்னிப்பூ (ஜூன்-செப்டம்பர்.) கும்பப்பூ (அக்டோபர்-பிப்ரவரி) சராசரி மகசூல் (கி/எக்டர்) - 6000
தானிய அமைப்பு - நடுத்தர பருமனான
அரிசியின் நிறம் - வெண்மை
சிறப்புப் பண்பு -குலைநோய், இலைப்புள்ளி நோய், இலையுறை கருகல் நோய்களும் தண்டுப் புழு, இலை மடக்குப் புழு, புகையான் பச்சை தத்துப் பூச்சிகளுக்கு வயல்களில் எதிர்ப்புத் திறன் கொண்டது.

  மேலே செல்க













 

 

  நெல்- கோ (ஆர்) 48

வெளியிட்ட ஆண்டு - 2007
வயது (நாட்கள்) - 130 – 135
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 9625
தானிய அமைப்பு - நடுத்தர ரக நெல்
அரிசியின் நிறம் - வெள்ளை அரிசி
சிறப்புப் பண்பு - குலைநோய், துங்ரோ மற்றும் இலையுறை கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு சக்தி கொண்டது

  மேலே செல்க










 



நெல்- கோ (ஆர்) 49  

வெளியிட்ட ஆண்டு - 2008
வயது (நாட்கள்) - 130-135
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 6286
தானிய அமைப்பு - நடுத்தர ரக நெல்
அரிசியின் நிறம் - வெள்ளை அரிசி
சிறப்புப் பண்பு - நடுத்தர மாவு சத்து மற்றும் சிறந்த சமையல் பண்புகள் ,பின் சம்பா பருவத்திற்கு பயிரிட ஏற்றது

  மேலே செல்க










 


 

  நெல்- பி எம் கே (ஆர்) 4

வெளியிட்ட ஆண்டு - 2009
உருவாக்கிய முறை - பந்த்தான் 10 / ஐ.இ.டி 9911-லிருந்து தனி வழித்தேர்வு
வயது (நாட்கள்) - 100 - 105
பருவம் - சம்பா (செப்டம்பர் – அக்டோபர்)
மகசூல் - 3.7
டன் / எக்டர்
தானிய அமைப்பு - நடுத்தர உயரம் மற்றும் சாயாத தன்மை
அரிசியின் நிறம் - நீண்ட சன்னமான வெள்ளை அரிசி
சிறப்புப் பண்பு - வறட்சியைத் தாங்கும் திறன்

  மேலே செல்க












 

 

தவேபக கோ 50  

வெளியிட்ட ஆண்டு - 2010
உருவாக்கிய முறை - கோ 43 / ஏடிடீ 38 ஒட்டு
வயது (நாட்கள்) - 130 -135
பருவம் - பின் சம்பா / தாளடி
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 6338
தானிய அமைப்பு - மத்திய சன்ன அரிசி
அரிசியின் நிறம் - வெள்ளை அரிசி
சிறப்புப் பண்பு -குலை நோய், இலை உறை அழுகல், பழுப்பு புள்ளி நோய், பாக்டீரியா இலை கருகல், துங்ரோ ஆகிய நோய்களுக்கு மித எதிர்ப்பு சக்தி கொண்டது

  மேலே செல்க













 

  தவேபக நெல் டி ஆர் ஒய் 3

வெளியிட்ட ஆண்டு - 2010
உருவாக்கிய முறை - ஏடிடீ 43 / சீரக சம்பா
வயது (நாட்கள்) - 135
பருவம் - சம்பா / பின் சம்பா / தாளடி
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 5833 / ha
தானிய அமைப்பு - மத்திய பருமன் அரிசி
அரிசியின் நிறம் - வெள்ளை அரிசி
சிறப்புப் பண்பு - குலைநோய், இலை பழுப்பு புள்ளி, இலை உறை அழுகல் மற்றும் இலை உறை கருகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன்

  மேலே செல்க












 


தவேபக நெல் ஏடிடீ 49 49  

வெளியிட்ட ஆண்டு - 2011
உருவாக்கிய முறை - சி ஆர் 1009/சீரக சம்பா
வயது (நாட்கள்) - 130 to 137 நாட்கள்
பருவம் - பின் சம்பா/ தாளடி பட்டம்
தானிய அமைப்பு - மத்திய சன்ன அரிசி
அரிசியின் நிறம் - வெள்ளை அரிசி
மகசூல் -
6173 கி/எக்
அதிக பட்ச மகசூல் - 10250 கி/எக்
பயிரிட உகந்த மாவட்டங்கள் -தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பயிரிட ஏற்றது
சிறப்புப் பண்பு -
1000 மணிகளின் எடை 14 கிராம்

முழு அரிசி அரவைத்திறன் - 71.3%
குலைநோய், துங்ரோ நோய், இலையுறை கருகல் மற்றும் இலையுறை அழுகல் நோய்,செயற்கை நோய் காரணிகளின் தாக்கத்தில் மித எதிர்ப்பு சக்தி வயல்வெளி ஆய்வில் செம்புள்ளி நோய் மற்றும் இலை மடக்குப்புழுவிற்கு நடுத்தர தாங்கும் திறன்

  மேலே செல்க






















  தவேபக வீரிய ஒட்டு நெல் கோ ஆர் எச்   4

வெளியிட்ட ஆண்டு - 2011
உருவாக்கிய முறை - COMS 23 A / CB 174 R
வயது - 130 – 135 நாட்கள்
பருவம் - பின் சம்பா/ தாளடி
தானிய அமைப்பு - மத்திய சன்ன அரிசி
அரிசியின் நிறம் - வெள்ளை அரிசி
மகசூல்- 7348 கி/எக் (14% over 27 பி11)
அதிக பட்ச மகசூல் - 11250 கி/எக்
பயிரிட உகந்த மாவட்டங்கள் - தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பயிரிட ஏற்றது
சிறப்புப் பண்பு - குலை நோய் மற்றும் பழுப்பு புள்லி நோய்க்கு எதிர்ப்பு திறனும் பச்சை தத்து பூச்சி, வெண் முதுகு தத்துப்பூச்சி, இலையுறை அழுகல், இலையுறை கருகல் மற்றும் துங்ரோ ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன்.

  மேலே செல்க


















பாரம்பரிய நெல் இரகங்கள்

 

புழுதி கார் நெல்-புன்செய் நில நெல்
  • ஈரோடு மாவட்டத்திலுள்ள மேற்கு மலைத் தொடர்களில் அமைந்திருக்கும் மானாவாரி மற்றும் இறவை நில நிலைமைகளில் வளரும்.
  • நேரடி விதைப்புப் பயிர்.
  • பயிர் வளர்ச்சிக்காலம் 120-130 நாட்கள் மற்றும் நெல் பயிரின் சராசரி உயரம் 130 செ.மீ.
  • பயிர் சாய்தலுக்கு இலக்காகும் தன்மையுடையது.
  • ஒரு ஏக்கருக்கு 1.5 டன்கள் மகசூலை தரும்.நெல் தானியம் தடிப்பாகவும் சிவப்பு நிறத்துடனும் இருக்கும்
மேலே செல்க











  கல்லுருண்டை
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையக் கூடியது
  • பின்சம்பா (செப்டம்பர்15-பிப்ரவரி14) மற்றும் நவரை (டிசம்பர் 15-மார்ச்14) ஆகியவை இந்த இரகத்திற்கு ஏற்ற பருவங்கள்.சிறப்பான வளர்ச்சிக்கு களிகலப்பு மண் ஏற்றது.
  • 120 நாட்கள் வாழ்நாளைக் கொண்ட நேரடி விதைப்பு நெல்.
  • 120 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது.
  • வறட்சி,பூச்சி, நோய்கள் மற்றும் உப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது.
  • நெல் தானியமணி, மஞ்சள் நிறமுடன் அதில் கருப்பு நிற மங்கிய கோடுகளுடன் காணப்படும்.
  • நெல் மணி சற்று தடிப்பாகவும், வெளிறிய மஞ்சள் நிறமுடன் காணப்படும்.
  • இந்த இரக நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல், கூரை வேய்தலுக்குப் பயன்படுகின்றது.
  மேலே செல்க

 

 

 

 

 

 



 

 

 

சூலை குறுவை
  • நாகை மாவட்டத்திலுள்ள செம்பொடை, பெரிய குத்தகை, தொப்புதுரை ஆகிய பகுதிகளிலுள்ள கரையோர கிராமங்களில் விளையக் கூடியவை.
  • பின் சம்பா (செப்டம்பர் 15-பிப்ரவரி14) மற்றும் குறுவை (ஜூன் 1 -ஆகஸ்ட் 31) ஆகியவை சிறந்த பருவங்கள்.களி கலப்பு மண் மற்றும் கரையோர உப்பு மண் இந்த இரகத்திற்கு மிகவும் ஏற்றது.
  • பாசன முறை மற்றும் மானாவாரி நிலைகள் இரண்டிலும் வளரக் கூடியது.
  • பயிர்க் காலம் 130-140 நாட்கள் ஆகும். மேலும் இவை 110-120 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது.
  • நெல்மணி தடிப்புடனும், வெளிறிய அழுக்கான பழுப்பு நிறத்துடனும் காணப்படும்.
  • ஏக்கருக்கு 15 பைகள் (75 கிலோ/சாக்கு) மகசூலைத் தருகிறது. அதாவது 1125 கிலோ-ஏக்கர்.
  • இதன் வைக்கோல் கால்நடைத் தீவனமாகவும், கூரை வேய்தலுக்கும் பயன்படுகின்றது
மேலே செல்க










 

 




  குழி வெடிச்சான்
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் தாலுாக்காவில் வளரக் கூடியவை
  • இந்த இரகம் விளைவதற்கு ஏற்ற பருவம் சம்பா (ஜூலை 15-ஜனவரி 14) பருவமாகும்.
  • மணல் கலந்த களிமண் மற்றும் உவர்ப்பு மண்ணில் நன்கு வளர்வதால் கடல் கரையோரப் பகுதிகளுக்கும் ஏற்ற இரகமாக விளங்குகிறது
  • உப்புத் தன்மை, வறட்சி, பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவற்றை எதிர்க்கும் திறன்கொண்டது
  • 110 நாட்கள் வாழ்காலம் கொண்ட குறுகிய காலப் பயிர் வகையாகும்
  • ஏக்கருக்கு 950 கிலோ வரை மகசூலைத் தரும்.நெற்பயிரின் சராசரி உயரம் 2½ அடியாகும் எனவே பயிர் சாய்தலுக்கு இலக்காகும் தன்மையுடையது
  • நெல்மணி தடிப்பாகவும், வெளிறிய அழுக்கான வெள்ளை நிறமுடனும் காணப்படும்
  • குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை உண்டால், பால் சுரப்பை அதிகப்படுத்துவது இந்த இரகத்தின் சிறப்பம்சமாகும்.
  மேலே செல்க






 

 

 

 







 




வால் சிவப்பு  
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் தாலுக்காவில் நன்கு வளரக்கூடியது.
  • பின் சம்பா (செப்டம்பர் 15-பிப்ரவரி 14) பருவம் ஏற்றது
  • மணல் கலந்த களிமண் மற்றும் உவர்ப்பு மண் வகைகள் மிகவும் ஏற்றது
  • வறட்சி மற்றும் உப்புத் தன்மையைத் தாங்கும் ஆற்றல் கொண்டது.
  • 145-150 நாட்கள் பயிர்க்காலம் உடையது. மேலும் 160 செ.மீ உயரம் வளரக் கூடிய இரகம் ஆகும்
  • நெல்மணி சிவப்பு நிறமுடனும், சிறந்த சுவையுடனும் இருக்கும்
  • நெல் மணியின் பின்பகுதியில் ஒரு முள் மயிர் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். இது சிறிய பறவையின் வால் போன்று காட்சி தரும்

  மேலே செல்க




















  வெள்ளை குறுவை கார்
 
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளபாலம் மற்றும் கீவலுார் தாலுக்கா பகுதிகளில் நன்கு வளரக் கூடியவை.
  • சம்பா (ஜூலை15-ஜனவரி14) மற்றும் பின் சம்பா (செப்டம்பர் 15-பிப்ரவரி14) ஆகியவை இந்த இரகத்திற்கு ஏற்ற பருவங்களாகும்.
  • 125-135 நாட்கள் கால அளவு கொண்டது. இதில் 25-30 நாட்கள் நாற்றங்கால் காலம் ஆகும்.
  • மேட்டுப்பாங்கான பகுதி நிலங்களில், நேரடி விதைப்பு முறை பின்பற்றப்படுகிறது.
  • இந்த இரகம் 100-120 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது.தானிய மணிகள் மற்றும் வைக்கோல் ஆகியவை வெளிறிய மஞ்சள் நிறத்திலிருந்து, அழுக்கான வெள்ளை நிறமாகத் தோன்றும்.
  • துார் வைக்கும் பருவத்தில், பயிர்த் தண்டு சுவையாக இருப்பதால், எலிகள் தாக்குதல் ஏற்பட்டு அதிக சேதம் ஏற்படும்.
  மேலே செல்க














 


சீரக சம்பா  
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் தாலுக்கா பகுதிகளில் நன்கு வளரக் கூடியது
  • 125-130 நாட்கள் இதன் வாழ்காலம். Êசம்பா பருவம் இதற்கு ஏற்றது. மேலும் நாற்றங்காலிலிருந்து பிரித்து நடவு செய்யும் முறையே ஏற்றது
  • நாற்றங்கால் காலம் 30-35 நாட்கள். மேலும் பயிர்ச் செடி 80.5 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. 20 சாக்குகள் மகசூலை உடையது. (1500 கிலோ/ஏக்கர்).
  • தானியமணி மிகவும் சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும். எனவே விசேஷ சமயங்களில் பிரியாணி சமைப்பதற்கு இந்த இரக அரிசி பயன்படுகின்றது.

  மேலே செல்க

 









 





  பிச்சாவரை
 
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பாலம், கீவலுார் தாலுக்காப் பகுதிகளில் நன்கு வளரக் கூடியது.
  • வெள்ளப்பெருக்கு, வறட்சி ஆகியவற்றைத் தாங்கும் ஆற்றல்கொண்ட தாளடிப் பயிராகும்.
  • நேரடி விதைப்பு நெல் நாற்று நடுதல் முறையும் பின்பற்றப்படுகிறது.
  • 110-115 நாட்கள் பயிர்க்காலம்.ஹெக்டருக்கு 4800 கிலோ மகசூலைக் கொண்டது
  மேலே செல்க








 


சூரன் குறுவை  
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பழம் மற்றும் கீவலுார் தாலுக்கா பகுதிகளில் நன்கு வளரக் கூடியவை.சம்பா மற்றும் பின் சம்பா பருவங்கள் ஏற்றது.
  • 130-135 நாட்கள் பயிர்க்கால அளவுடையது. மற்றும் 30-35 நாட்கள் நாற்றங்கால் காலம் ஆகும்.
  • நெல் தானியமணி கரும்பழுப்பு நிறமாகவும்,பெரு நயத்துடனும் காணப்படும்.
மேலே செல்க










  வைகுண்டா
 
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீவலுார் தாலுக்காவில் பயிரிடப்படுகிறது.
  • நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்தல் ஆகிய இருமுறைகளிலும் பயிரிடப்படுகிறது.
  • 145-150 நாட்கள் கால அளவு உடையது. இதில் 35-40 நாட்கள் நாற்றங்கால் காலமாகும்.
  • வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி ஆகிய நிலைகளைத் தாங்கும் ஆற்றலுடையது.
  மேலே செல்க








 

 


கிச்சடி சம்பா  
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீவலுார் தாலுக்காவில் விளையக் கூடியது.
  • 140 நாட்கள் கால அளவு கொண்ட சம்பா இரகமாகும்.
  • 15 சாக்குகள் வரை மகசூலைத் தருகிறது. (1125 கிலோ)அரிசி வெளிறிய வெள்ளை நிறமுடையது.
  • பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டு விளங்குவதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
  மேலே செல்க










 

 

  சின்ன சம்பா/சட சம்பா
 
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீவலுார் தாலுக்காவில் விளையக் கூடியவை.
  • 140 நாட்கள் கால அளவு கொண்ட சம்பா பருவ நெல் ஆகும். இதில் 30 நாட்கள் நாற்றங்கால் காலம்.
  • பூங்கொத்து உருவாக்க நிலை மற்றும் பால்ப் பருவ நிலைகளில் நெல் தானியமணி இளம்பச்சை நிறத்திலும் பின் முதிர்ச்சிப் பருவத்தில் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் மாறிவிடுகின்றன.
  மேலே செல்க








 


குதிரை வால் சம்பா  
  • திருச்சி மாவட்டத்திலுள்ள கம்பளத்துப்பட்டி வட்டத்தில் விளைகிறது.
  • சம்பா பருவம் (ஜூலை 15-ஜனவரி 14) இதற்கு ஏற்றது.140-150 நாட்கள் மொத்த பயிர்க்கால அளவுடையது.
  • பயிர்த்தண்டு சாயாதது, பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது.
  • நெல் தானியம் மஞ்சள் நிறத்துடனும், அரிசி சுத்தமான வெள்ளை நிறமாகவும் காணப்படும். ஏக்கருக்கு 1.3 டன்கள் மகசூலைத் தருகிறது
மேலே செல்க









 


  மர நெல்
 
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை தாலுக்காவில் விளைகின்றது.
  • 120-125 நாட்கள் கால அளவு கொண்டது. மேலும் பின் சம்பா மற்றும் நவரை (கோடைக்காலம்) பருவங்கள் இதற்கு ஏற்றது.
  • நாற்று கொண்டு நடவு செய்தல் முறைப் பின்பற்றப்படுகிறது.
  • அரிசி சிவப்பு நிறத்தில், பெரு நயத்துடன் காணப்படும்.இந்த இரகத்தின் தானியமணிகள் கடினமான விதை உறையைக் கொண்டிருக்கும். எனவே, அறுவடை நேரத்தில் கனமான மழைப்பொழிவின் போதும் கூட இந்த தானியமணிகள் முளைவிடாது.
  • கடினமான விதையுறை உள்ளதால் சேமிப்புப் பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டு செயல்படுகிறது.
  மேலே செல்க












 


கள்ளிமடையான்  
  • பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள ஐயர்பாளையம் என்னும் கிராமத்தில் விளையக் கூடியவை.
  • இது ஆறு மாத கால அளவு கொண்ட இரகம்.
  • 110-120 செ.மீ உயரம் கொண்டு, சிறந்த துார் வைக்கும் தன்மை கொண்ட இரகமாகவும் விளங்குகின்றது.
  • பூங்கொத்து 30 செ.மீ நீளமுடையது.
  • தடிப்பான தானியமணிகளை உருவாக்கி, ஒரு ஏக்கருக்கு 2 டன்கள் அளவு மகசூலைத் தரும் ஆற்றலைக் கொண்டது.
  • நெல் மணி வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • தண்டு துளைப்பான், கதிர் நாவாய்ப்பூச்சி மற்றும் குலைநோய் ஆகியவற்றை எதிர்க்கும் தன்மையுடையது.
  • நாற்றங்கால் காலம் 35-60 நாட்கள் ஆகும்.

மேலே செல்க













 

 


  கருப்புக்கவுனி
  • சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடி என்னும் கிராமத்தில் விளைகின்றது.
  • இதன் கால அளவு 150-170 நாட்கள் ஆகும். செப்டம்பர்-ஜனவரி மாதங்கள் இந்த இரகம் பயிரிடுவதற்கு ஏற்ற பருவங்கள்.
  • நேரடி விதைப்பு முறை ஏற்றது.
  • தனி தானியமணியின் நீளம் 1 செ.மீ அளவு ஆகும்.
  • பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை எரு ஆகிய இயற்கை உரங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
  • சாயாத தன்மையுடையது.மட்டுமீறிய (அதிகளவு) துார் வைத்தல்
  • தானியம் கருப்பு நிறமாக இருக்கும். இதனை தேங்காய் பாலுடன் கலந்து இனிப்பு பண்டங்கள் செய்வதற்கு மட்டுமே பயன்படுகின்றது. இந்த இரக நெல் சாப்பாடு செய்வதற்கு ஏற்றது அல்ல.
  • மட்டுமீறிய துார் வைக்கும் தன்மையுடையதால், மற்ற நெல் இரகங்களை விட இந்த இரகத்தில் வைக்கோல் மீட்பு 150 சதவிகிதம் அதிகமாகக் காணப்படும்.
  மேலே செல்க
























சண்டிகார்  
  • சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தங்குடி கிராமத்தில் நன்கு விளையக் கூடியவை.
  • செப்டம்பர்-ஜனவரி மாதங்கள் ஏற்ற பருவமாகும்.
  • ஏக்கருக்கு 800 கிலோ தானிய மகசூலும், 1800 கிலோ வைக்கோலும் கிடைக்கிறது.
  • ஏக்கருக்கு 800 கிலோ தானிய மகசூலும், 1800 கிலோ வைக்கோலும் கிடைக்கிறது.
  • கரிசல் மண், சிவப்பு மண் மற்றும் உப்பு மண் ஆகியவற்றிற்கு மிகவும் ஏற்றது.
  • நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடுதல் முறை ஆகிய இரண்டும் ஏற்றது.

மேலே செல்க











 



  வரப்புக்கோடஞ்சன்
 
  • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சத்ரகுடி கிராமத்தில் விளையக்கூடியது.
  • மானாவாரி நிலைகளுக்கு ஏற்றது. வறட்சியை எதிர்க்கும் திறன் கொண்ட உயரமான இரகமாகும். இதன் வெளித்தோல் கருப்பு நிறமாகவும், உள் அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
  • சிறந்த சுவையுடையது. மேலும் சமைத்து வைத்த சாதத்தை 2-3 நாட்கள் வரை வைத்திருக்க முடியும். அரிசிக் கஞ்சி மிகவும் சுவையுடன் இருக்கும்.
  • வேளை செய்யும் மக்களுக்கு, மற்ற நெல் இரகங்களை விட இந்த அரிசியின் கஞ்சி மிகுந்த ஆற்றலைத் தருவதாக விவசாயிகள் நம்புகின்றனர்.மேலும் வைக்கோல் மீட்பும் அதிகமாய் இருக்கும்.
  • இது மூன்று மாத கால இரகமாகும். பொதுவாக இந்த இரகத்தை புரட்டாசி மாதத்தின் மத்திய காலத்தில் (செப்டம்பர்) விதைத்து, தை மாதத்தில், (ஜனவரி) அறுவடை செய்யப்படும்.
  மேலே செல்க












 

 

 


குழிபரிச்சான்  
  • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்லபச்சேரி கிராமத்தில் விளையக் கூடியவை.
  • கடற்கரையோர மணல் கலந்த மண் வகை இதற்கு மிகவும் ஏற்றது. வறட்சியை எதிர்க்கும் தன்டையுடைய உயரமான இரகமாகும்.
  • வெளிப்புறத்தோல் சற்று கருப்பாக இருக்கும். உள் தானியம் சற்று தடிப்புடனும், உருளையான வடிவத்திலும் காணப்படும்.சமைக்கப்பட்ட சாதம் சிறந்த வைப்புத்திறனைக் கொண்டது.
  • இது மூன்று மாத கால இரகமாகும். பொதுவாக புரட்டாசி மாதத்தின் மத்திய காலத்தில் (செப்டம்பர்) விதைக்கப்பட்டு, தை மாதத்தில் (ஜனவரி) அறுவடை மேற்கொள்ளப்படும்.
  மேலே செல்க












 

 


  சித்ரகார்
 
  • ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லானி பகுதிகளில் விளையக் கூடியவை.
  • இவ்வகையான அனைத்து பொது ரகங்களையும் "மட்டை" அல்லது "நொருங்கன்" எனப் பெயருடன் விவசாயிகள் வழங்குகின்றனர்.
  • கரையோர மணல் கலந்த மண் வகை இதற்கு ஏற்றது. வறட்சியை எதிர்க்கும் திறன் கொண்ட உயரமான இரகமாகும்.
  • ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ மகசூல் கிடைக்கிறது. பொதுமக்கள் மற்ற சன்ன நெல் இரகங்களை விட இந்த சிவப்பு அரிசி இரகத்தை அதிகம் விரும்புவதால் அதிக விலை மதிப்பை ஈட்டுகிறது.
  மேலே செல்க








 




சிவப்பு சித்திரைகார்  
  • பரமகுடி பகுதிகளில் விளையக்கூடியவை.
  • தானியத் தோல் சற்று கருப்பான நிறமாக இருக்கும். அதன் உள்பகுதி அரிசி சிவப்பு நிறமாக இருக்கும்.
  • வறட்சி நிலையை எதிர்க்கும் திறன் கொண்ட உயரமான இரகம். மேலும் இதன் கால அளவு 110 நாட்கள் ஆகும்.
  • ஆவணி மாதத்தில் விதைத்து, தை மாதத்தில் அறுவடை செய்யப்படும்.
  • முறையான பருவமழைக் காலத்தில் 1500-1800 கிலோ மகசூல் கிடைக்கும். பருவமழைப் பொழிவு இல்லாத காலத்தில் குறைந்த அளவு ஏக்கருக்கு 600-900 கிலோ தானிய மகசூல் கிடைக்கும்.
  • மற்ற இரகங்களைவிட, விவசாயிகள் இந்த இரகத்தினையே அதிகம் விரும்பி பயிரிடுகின்றனர்.
  மேலே செல்க













 

 



  முருங்கைக்கார்
  • ராம்நாத் பகுதிகளில் விளையக்கூடியவை. மிகவும் குறைவான மழைப்பொழிவு காலங்களுக்கு ஏற்ற இரகம்.
  • பொதுவான மானாவாரி நிலைமைகளில் ஏக்கருக்கு 1000-1300 கிலோ மகசூல் (15-20 சாக்குகள், 1 சாக்கு 65 கிலோ எடையுடையது) கிடைக்கிறது.
  • பொதுவாக ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்) விதை விதைக்கப்பட்டு, மார்கழி (ஜனவரி) மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
  • இந்த இரக நெல் வயலுக்கு, ஆட்டு சாணம் (உரம்) மற்றும் யூரியா மட்டுமே உரமாக அளிக்கப்படுகிறது.

  மேலே செல்க












 


நுாற்றிபத்து  
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையக்கூடியவை.
  • அரிசியின் வெளிப்புறத் தோல் வெள்ளை நிறமாகவும், உள்பகுதி சிவப்பு நிறமாகவும் காணப்படும்.
  • வறட்சி எதிர்க்கும் திறன் கொண்ட உயரமான இரகம் ஆகும்..
  • இந்த இரகத்தின் "அரிசிக் கஞ்சி" நல்ல சுவையுடன் இருக்கும். இதனை ஆவணியில் விதைத்து, தை மாதத்தில் அறுவடை செய்வர்.
  • ஏக்கருக்கு 1500-1800 கிலோ தானிய மகசூலும், 1 டன் வைக்கோலும் கிடைக்கிறது.
  • வைகை ஆற்றுப்பெரு நிலம் அருகிலுள்ள சில வயல்களில் களிமண் காணப்படும்.
மேலே செல்க












 


  அரியான்
 
  • ராமநாத மாவட்டத்திலுள்ள ரெகுநாதபுரம் பரப்புகளில் இருக்கும் மணல் கலந்த மண்ணில் விளையும் 4 அரியான் வகை நெல் இரகங்கள் பின்வருமாறு.
  • (அ) வெள்ளை அரியான் (ஆ) கருப்பு அரியான் (இ) சிவப்பு அரியான் மற்றும் (ஈ) வாழை அரியான் ஆகியவை ஆகும்.
  • அனைத்து அரியான் இரகங்களுக்கும் உமிச்சிலாம்புகள் இருக்கும். இவை 5.5 முதல் 6.5 அடி உயரம் வரை வளரக் கூடியவை. மேலும் இதன் கால அளவு 120 நாட்கள் ஆகும்.
  • கரையோர மணல் கலந்த மண் இதற்கு மிகவும் ஏற்றது.
  • இந்த இரகமானது வறட்சியை எதிர்க்கும் திறன் கொண்டது. உயரமாக வளரும் இரகமாகும்.
  • அரிசிக்கஞ்சி மிகவும் சுவையானது. இதனைப் பருகுவதால் சில மணி நேரங்களுக்கு பசியின்றி இருக்க உதவுகிறது.
  • அதிக மகசூலைப் பெறுவதற்கு பயிரின் முதல் 3 மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது மழைப்பொழிவு தேவைப்படுகிறது.
  மேலே செல்க

















 


சடைக்கார்  
  • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆகாடாவலசை என்னும் கிராமத்தில் மட்டுமே விளையக்கூடியவை.
  • இந்த இரகத்திற்கு சில மருத்துவ குணங்கள் உள்ளன. கை, கால்களில் உள்ள காயப்பட்ட இடங்களின் மேல் இதனை தேய்ப்பதால் காயங்களை (புண்) சரி செய்யமுடிகிறது.
  • பெரும்பாலான உள்ளூர் "மாட்டு வைத்தியர்கள்" இந்த அரிசியை சில மருத்துவ குணத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். மேலும் இதனிலுள்ள இனிப்புத் தன்மையால், "இடியாப்பம், புட்டு மற்றும் பனியாரம்" போன்ற உணவுப் பண்டங்கள் தயாரிப்பதற்க்றது.
  • ஏக்கருக்கு 1200 கிலோ தானிய மகசூலும், 3 டன்கள் அளவு வைக்கோல் மகசூலும் கிடைக்கிறது.
  • இந்த இரகப் பயிருக்கு, ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று முறை மழைப்பொழிவு தேவைப்படுகிறது.பொதுவாக இலைச்சுருட்டுப்புழு தவிர வேறு எந்த பூச்சிகள் மற்றும் நோய்களாலும் தாக்கப்படாது.
  • மணல் கலந்த மண் வகை மிகவும் ஏற்றது. பரப்பு அளவில் நீர் தேக்கம் ஏற்படுவதால், கிணறு வழி நீர்ப்பாசனம் செய்ய இயலாது.
  மேலே செல்க















 




 

 



  பூங்கார்
 
  • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ரகுநாதபுரம் கிராமத்தில் விளையக் கூடியவை.
  • புரட்டாசியில் (செப்டம்பர்) இயலாத போது, பூங்காரின் மற்ற பாரம்பரிய குறுகிய கால சிவப்பு நெல் இரகத்தை கார்த்திகை (அக்டோபர்) மாதத்தில் விதைத்து, பின் "தை" மாதத்தில் அறுவடை செய்யப்படும். ஆனால் இதன் மகசூல் குறைவானது.
  • கரையோர மணல் கலந்த மண் இதற்கு மிகவும் ஏற்றது. வறட்சி நிலையை எதிர்க்கும் திறன் கொண்ட உயரமான இரகமாகும்.
  • மிகவும் குறைந்த மழைப்பொழிவு நிலைகளிலும் வளரும் தன்மை உடையது. மேலும், குளி பரிச்சான் மற்றும் வரப்புக் கொடஞ்சான் ஆகியவற்றைவிட இந்த இரகம் வறட்சி நிலையைத் தாங்கும் தன்மையுடைது
  மேலே செல்க





 

 

 

 

 

குறுவைக் களஞ்சியம்  
  • பெரும்பாலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வளரக் கூடியவை.
  • இதன் கால அளவு 110 நாட்களாகும். ஆவணி மாதத்தில் விதைத்து, தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.நேரடி விதைப்பு முறையில், ஏக்கருக்கு 40-50 கிலோ விதை அளவு தேவைப்படுகிறது.
  • ஏக்கருக்கு 1 டன் அளவு வைக்கோல் கிடைக்கிறது.பொதுவான, பருவ மழைப்பொழிவு காலத்தில் ஏக்கருக்கு 1500-2000 கிலோ தானிய மகசூல் கிடைக்கிறது.
  • "சிவப்பு சித்திரைக்கார்" அரிசி கஞ்சியை விட குறுவை களஞ்சியத்தின் அரிசிக் கஞ்சி வேறுபடும். சமைக்கப்பட்ட சாதம் இரண்டு நாட்களுக்குப் பிறகும் சிறந்த சுவையுடன் இருக்கும்.
  மேலே செல்க












 






  நொருங்கன்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையக்கூடியவை. பயிர்க்கால அளவு 110நாட்கள் ஆகும்.
  • ஐப்பசி (அக்டோபர்) மாதத்தில் மணல் கலந்த மண்ணில் மானாவரி நிலைகளில் மானாவாரி பயிராக விதைக்கப்பட்டு, பின் தை (ஜனவரி) மாதத்தில் அறுவடை மேற்கொள்ளப்படுகிது.
  • ஏக்கருக்கு 2100 கிலோ மகசூலைத் தருகிறது
  மேலே செல்க










 



கல்லுருண்டைக்கார்  
  • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமகுடி தாலுக்காவில் விளையக் கூடியவை.
  • வறட்சி நிலையை எதிர்க்கும் ஆற்றலுடைய உயரமான இரகமாகும்.
  • ஏக்கருக்கு 1500-1800 கிலோ மகசூலைத் தருகிறது.நெல் மற்றும் குதிரைவாலி, (சிறு தானியம்), பயிர் முறையும் (ஓரப் பரப்புகள்) பின்பற்றபடுகிறது. ஏக்கருக்கு 600 கிலோ மகசூலை குதிரைவாலி அளிக்கிறது
மேலே செல்க









  தங்க சம்பா
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளரக் கூடியவை.
  • பின் சம்பா மற்றும் சம்பா ஆகியவைதான் மிகவும் ஏற்ற பருவங்கள்.
  • இதன் கால அளவு 160-165 நாட்கள், இதில் 40 நாட்கள் நாற்றங்கால் பருவமாகும்.
  • நெல் தானிய மணி தங்க நிறத்தில் மெல்லிய நயத்துடன் காணப்படும்.
  • ஏக்கருக்கு 1500 கிலோ தானிய மகசூலும், 60 கற்றைகள் (1800 கிலோ) வைக்கோலும் கிடைக்கிறது.
  • இந்த இரகத்தின் தானியக் கதிர் மிகவும் நீளமாக இருக்கும்.
  மேலே செல்க










 




நீலன் சம்பா  
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுக்கன் கொல்லி கிராமத்தில் விளையக் கூடிய இரகம்
  • சம்பா பருவம் மிகவும் ஏற்ற பருவமாகும். இதன் பயிர்க்கால அளவு 175-180 நாட்கள் ஆகும்.
  • அரிசி சிவப்பு நிறமாகவும், பெரு நயத்துடனும் காணப்படும்.
  • ஏக்கருக்கு 1500 கிலோ தானிய மகசூலும், 1800 கிலோ வைக்கோலும் கிடைக்கிறது.
  • நீர் சூழ்ந்த நிலைகளுக்கு மிகவும் ஏற்ற இரகமாகும்.பழுப்பு இலைத் தத்துப்பூச்சி மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை.
  • பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது.
மேலே செல்க








 






  வாடன் சம்பா
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளரக்கூடியவை.
  • சம்பா பருவம் மிகவும் ஏற்றது மற்றும் இதன் கால அளவு 155-160 நாட்களாகும்.
  • நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடவு செய்தல் ஆகிய இரு முறைகளும் பயன்படுத்தி இந்த இரகத்தைப் பயிர் செய்யலாம்.
  • அரிசி மங்கிய வெள்ளை நிறத்தில், பெருநயத்துடன் காணப்படும்.
  • ஏக்கருக்கு 1125 கிலோ தானிய மகசூலும், 1200 கிலோ வைக்கோலும் கிடைக்கிறது.
  • வறட்சி நிலையை எதிர்க்கும் தன்மையுடையது.
  • பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.தானியங்கள் விழத் தொடங்கினால், அவை பச்சையாக இருந்தாலும் கூட அதனை அறுவடை செய்துவிட வேண்டும்.
  மேலே செல்க


















களியண் சம்பா  
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுக்கன் கொள்ளை கிராமத்தில் விளையக் கூடியவை.
  • சம்பா பருவமே இதற்கு மிகவும் ஏற்ற பருவமாகும். இதன் மொத்த கால அளவு 155-160 நாட்களாகும். இதில் 40-45 நாட்கள் நாற்றங்கால் காலமும் உள்ளடங்கும்.
  • இந்த இரக நெல் பயிரிடுவதற்கு நாற்று பிரித்து நடுதல் முறையே ஏற்றது.
  • அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏக்கருக்கு 1200 கிலோ தானிய மகசூலும், 1600 கிலோ வைக்கோலும் கிடைக்கும்.
  • 5.5 அடி உயரம் வரை மிகவும் உயரமாக வளரக் கூடியவை.
  • நீர் சூழ்ந்த பகுதிகளில் மற்றும் தாழ்வான பகுதி நிலங்களுக்கும் ஏற்ற இரகமாகும்.
  • பூச்சி மற்றும் நோய் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் திறன்கொண்டது.
  மேலே செல்க














 




  சம்பா மொசானம்
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுக்கன் கொள்ளை கிராமத்தில் விளையக் கூடியவை.
  • சம்பா பருவமே மிகவும் ஏற்ற பருவமாகும். மேலும் இதன் கால அளவு 160-165 நாட்களாகும். (நாற்றங்கால் காலம் 40-45 நாட்கள்)
  • உலர் விதைப்பு மற்றும் நாற்று நடவு முறை ஆகிய இரண்டும் பின்பற்றப்படுகிறது.
  • அரிசி சிவப்பு நிறமாகவும் பெரு நயத்துடனும் காணப்படும்.
  • ஏக்கருக்கு 1800 கிலோ தானிய மகசூலும், 65 கற்றைகள் (1950 கிலோ) வைக்கோலும் கிடைக்கிறது.
  • இந்த இரகத்தினை "புழுதிக்கால் எரிநெல் மற்றும் மடுவு முசங்கி" எனப் பெயர்களாலும் வழங்கப்படுகிறது.
  • ஏரிகளின் அருகாமையில் உள்ள பகுதிகளில் சிறப்பாக வளரக் கூடியவை.மக்கள் படகுகளில் பயணம் செய்து வந்து "சம்பா மொசானம்" நெல்லை ஏரிகளிலிருந்து அறுவடை செய்து செல்வர் எனக் கூறப்படுகிறது.
  • உணவுப் பொருள்களான அவல், இட்லி மற்றும் தோசை ஆகியவற்றை தயாரிப்பதற்கு சிறந்த இரகமாகும்.
  மேலே செல்க
















 

 

 

 

 

காடைகழுத்தான்  
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுக்கன்கொள்ளை கிராமத்தில் விளையக் கூடியவை.
  • சம்பா பருவம் தான் மிகவும்ஏற்றபருவம். மேலும் இதன் கால அளவு 165 நாட்களாகும்.
  • இந்த இரகத்தினை நாற்று பிரித்து நடுதல் முறை மூலம் விளைவிக்கப்படுகிறது.
  • அரிசி வெள்ளை நிறத்துடன் சிறந்த தரத்துடன் இருக்கும்.
  • ஏக்கருக்கு 1350 கிலோ தானிய மகசூலும், 40 கற்றைகள் (1200 கிலோ) வைக்கோலும் கிடைக்கிறது.
  • அதாவது வெள்ளைநிற வளையம் போன்று அதில் உள்ளதால் இப்பெயரைப் பெறுகிறது.
  • தென் இந்திய சிறப்பு உணவுப் பண்டமான "புட்டு" செய்வதற்கு ஏற்றது.சிறந்த வடிகால் வசதியுடைய பகுதிகளில் நன்கு வளரக்கூடியவை.
  மேலே செல்க




















  பிசினி
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு தாலுக்காவின் சுக்கன் கொள்ளை கிராமத்தில் விளையக் கூடியவை.
  • சம்பா பருவமே சிறந்த பருவம். இதன்கால அளவு 120 நாட்களாகும்.
  • தோசை, கூழ் மற்றும் அவல் ஆகியவை தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றது.
  • வறட்சி நிலையை எதிர்க்கும் திறன் கொண்டது.
  • நெற்கதிர்களில் உமிச்சிலாம்பு காணப்படுவதால், தானியங்களை அகற்றும்போது அதிகம் கவனத்துடன் இருப்பது அவசியம்.
  மேலே செல்க

 







 

 

 


துாய மல்லி  
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுக்கன் கொள்ளை கிராமத்தில் விளையக் கூடியவை.
  • சம்பா பருவமே மிகவும் ஏற்ற பருவம். மேலும் இதன் கால அளவு 135-140 நாட்கள் ஆகும்.
  • நேரடி விதைப்பு மற்றும்நாற்று நடவு முறை இரண்டும் பின்பற்றப்படுகிறது.
  • அரிசி வெள்ளை நிறத்தில் சிறந்த தரத்துடன் இருக்கும்.ஏக்கருக்கு 1125 கிலோ தானிய மகசூலும் , 35கற்றைகள் (1050 கிலோ) வைக்கோலும் கிடைக்கிறது.
  • பூத்தல் பருவத்தின்போது, கதிர்கள் பூக்களைப் போல் காட்சியளிக்கும்.
  • பூச்சி மற்றும் நோய்களுக்கு மிகவும் எதிர்க்கும் திறன் கொண்டது. தமிழில் "துாயமல்லி" என்பது சுத்தமான மல்லிகை எனப்படுகிறது.

  மேலே செல்க













 

 



  களர் பாலை
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுக்காவில் உள்ள சுக்கன் கொள்ளை என்னும் கிராமத்தில் விளையக்கூடியவை.
  • நாவரைப் பருவமே ஏற்ற பருவமாகும். இதன் கால அளவு 120 நாட்களாகும்.
  • நாற்று பிரித்து நடுதல் முறையே பயன்படுத்தப்படுகிறது.அரிசி பழுப்பு நிறமாக பெருநயத்துடன் காணப்படும்.
  • ஏக்கருக்கு 1200-1300 கிலோ தானிய மகசூலும், 1300 கிலோ வைக்கோலும் கிடைக்கிறது.
  • பூச்சி மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது.
  • களர் நிலம் (உவர்ப்பு மண்) மண்ணுக்கு ஏற்றது. எனவே களர்பாலை எனப்பெயர் பெற்றது.
  மேலே செல்க













 


 

குடைவாழை  
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு தாலுக்காவில் உள்ள சுக்கன் கொள்ளை என்னும் கிராமத்தில் விளையக்கூடியவை.
  • பின் சம்பா பருவமே மிகவும் ஏற்றது. மேலும் இதன் கால அளவு 120-125 நாட்களாகும்.
  • நாற்று நடுதல் முறையே இந்த இரகத்திற்குப் பின்பற்றப்படுகிறது.
  • அரிசி சிவப்பு நிறத்தில் பெருநயத்துடன் காணப்படும்.
  • ஏக்கருக்கு 1400 கிலோ தானிய மகசூலும், 50 கற்றைகள் (1500 கிலோ) வைக்கோலும் கிடைக்கிறது.
  • இந்த இரகத்தின் கதிர்கள் திறந்த குடை போன்று காட்சியளிப்பதால். "குடைவழை" எனப்பெயர் பெறுகிறது.இட்லி மற்றும் தோசை போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றது.
  • செடி 5 அடி உயரம் வரை வளரக்கூடியவை. இதன் தண்டு 2.5 செ.மீ தடிப்புடனும், மேலும் இதன் வைக்கோல் கூரை வேய்வதற்கும் பயன்படுகின்றது.
  • நீர் சூழ்ந்த பகுதிகளில் நன்கு வளரக்கூடியவை.மிகவும் குறுகிய கால இரகமானதால், ஒரு வருடத்தில் மூன்று முறைகள் இதனைப் பயிரிடலாம்.
மேலே செல்க








 








 


  கூம்வாளை
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுக்காவிலுள்ள சுக்கன் கொள்ளை என்னும் கிராமத்தில் விளையக்கூடியது.
  • சம்பா பருவமே மிகவும் ஏற்ற பருவம். மேலும் இதன் கால அளவு 128-130 நாட்கள் ஆகும்.
  • நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடுதல் முறை இரண்டும் பின்பற்றப்படுகிறது.
  • அரிசி பழுப்பு நிறத்தில், பெருநயத்துடன் காணப்படும்.
  • ஏக்கருக்கு 1350 கிலோ தானிய மகசூலும், 1800 கிலோ வைக்கோலும் கிடைக்கிறது.இந்த இரகப்பயிர்ச் செடிகள், 4.5-5.00 அடி உயரம் வரை வளரக்கூடியவை.
  • வைக்கோலை பொதுவாக கூரை வேய்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.மணல் கலந்த மண் மற்றும் நீர் சூழ்ந்த பகுதிகள் ஆகியவற்றிற்கு மிகவும் ஏற்ற இரகமாகும்.
  மேலே செல்க









 

 



 


முட்டகார்  
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்கழுகுன்றம் தாலுக்காவின் இடையூர் என்னும் கிராமத்தில் விளையக்கூடியவை.
  • நவரைப்பருவமே சிறந்த பருவமாகும். இதன் மொத்த கால அளவு 120 நாட்கள். இதில் 30 நாட்கள் நாற்றங்கால் காலமாகும்.
  • ஈர விதைப்பு மற்றும் நாற்று நடுதல் ஆகிய இரு முறைகளும் பயன்படுத்தப்படுகிறது.
  • 4.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. மேலும் (தண்டு) சாய்தல் தன்மையுடைய வகையைச் சேர்ந்தது.
  • அரிசி சிவப்பு நிறத்தில், பெருநயத்துடன் காணப்படும். ஏக்கருக்கு 1350 கிலோ தானிய மகசூலும், 40 கற்றைகள் (1200 கிலோ) வைக்கோலும் கிடைக்கிறது.
  மேலே செல்க









 








  செம்பாலை
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுங்குன்றம் தாலுக்காவிலுள்ள இடையூர் என்னும் கிராமத்தில் விளையக்கூடிய இரகமாகும்.
  • சம்பா பருவமே மிகவும் ஏற்ற பருவம். மேலும் இதன் கால அளவு 100-105 நாட்களாகும். இதில் 21-25 நாட்கள் நாற்றங்கால் காலமும் உள்ளடங்கும்.
  • நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடவு முறை ஆகிய முறைகள் பின்பற்றப்படுகிறது.
  • அரிசி மங்களான வெள்ளை நிறத்தில் பெருநயத்துடன் காணப்படும்.
  • ஏக்கருக்கு 1125 கிலோ தானிய மகசூலும், 45 கற்றைகள் (1350 கிலோ) வைக்கோலும் கிடைக்கிறது."பொரி" செய்வதற்கு ஏற்ற அரிசி.
  மேலே செல்க












 


 

 

கப்பகார்  
  • திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி தாலுக்காவில் உள்ள, தக்கண்டராபுரம் என்னும் கிராமத்தில் விளையக்கூடியவை.
  • சம்பா பருவமே மிகவும் ஏற்ற பருவம். மேலும் இதன் கால அளவு 150-160 நாட்களாகும். இதில் 40 நாட்கள் நாற்றங்கால் காலமும் உள்ளடங்கும்.
  • விதை அளவு 50 கிலோ/ஏக்கர்.
  • நேரடி விதைப்பு மற்றும் நாற்று பிரித்து நடுதல் ஆகிய இரு முறையும் பயன்படுத்தப்படுகிறது.
  • அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • ஏக்கருக்கு 1350 கிலோ தானிய மகசூலும், 60 கற்றைகள் (1800 கிலோ) வைக்கோலும் கிடைக்கிறது.
  • இட்லி மற்றும் தோசை ஆகியவை தயாரிப்பதற்கு ஏற்றது.
  • களிமண் நிலத்தில் அதிக மகசூலைத் தரும்.நீர் சூழ்ந்த பரப்புகள் மற்றும் வறட்சி நிலங்கள் இரண்டிற்கும் ஏற்றது. "அவல்" தயாரிப்பதற்கு உகந்த இரகமாகும்.
  மேலே செல்க














 



 



  பெருங்கார்
 
  • திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி தாலுக்காவிலுள்ள தக்கண்டராபுரம் கிராமத்தில் விளையக்கூடியவை.
  • இதன் கால அளவு 120 நாட்களாகும். நேரடி விதைப்பு முறைக்கு 35 கிலோ விதையும், நாற்று நடுதல் முறைக்கு 40 கிலோ/ஏக்கர் விதையளவும் தேவைப்படுகிறது.
  • ஏக்கருக்கு 1.4 டன்கள் தானிய மகசூலும், 1500 கிலோ வைக்கோலும் கிடைக்கிறது.
  • 4.5 அடி உயரம் வரை வளரக் கூடியது.
  • தண்டு துளைப்பான் மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சி ஆகியவற்றைத் தாங்கும் ஆற்றலுடையது.இட்லி மற்றும் தோசை ஆகியவற்றை தயாரிப்பதற்கு ஏற்றது.
  மேலே செல்க







 






கலனாமக்  
  • இந்தியாவில், "கலனாமக்" என்பது சிறந்த சன்ன ரக நறுமண அரிசி வகைகளில் ஒன்று.
  • கருப்பு உமியிலிருந்து இப்பெயர் பெறப்பட்டது. (கலா-கருப்பு, நாமக்-உப்பு)இந்தியாவில், கிழக்கு உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் இமாலய தராய் பகுதிகளில் மிகவும் பிரபலமானது. இருப்பினும் இந்த இரகத்திற்கான பரப்பளவு மிகவும் குறைந்து விட்டது. 1998-1999 ஆண்டுகளில் ஏற்பட்ட பூங்கொத்து வெடிப்பு பிரச்சனையே இதற்கு காரணமாகும்.
  • இதன் உயரமான வளர்ச்சி தண்டு சாய்தலை ஏற்படுத்துகிறது. நீண்ட கால பயிர், குறைவான மகசூல் மற்றும் குறைவான தானியத்தரம்.
  • இதே போன்று பண்பகத் தொகுதி வரிசைகள் உசார் (உப்பு-களர்) மண்ணில் நன்கு செயல்படக்கூடியவை. இந்த மண்ணில் கார அமில நிலை 9.0-9.5 ஆகும்.
  • இந்த தேர்ந்தெடுப்புகள், உப்பு-களர் மண்ணில் சிறந்த மகசூலுக்கான உத்தரவைத் தருகிறது.
  • சுவை, உண்சுவை, வாசனை ஆகியவற்றைத் தரும் சிறப்பான இரகமாகும். பாசுமதி அரிசியைப் போன்று சிறந்த தரம் கொண்டதால், பன்னாட்டு வாணிகத்தில் அதன் தானிய நீளத்தைத் தவிர மற்ற தரத்தன்மைகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • சமைக்கப்பட்ட சாதம் மிகவும் மென்மையாக, பொலபொலப்பாக, ஒட்டிக்கொள்ளாமல், சுவையாகவும் எளிதில் செறிமானம் ஆகும் தன்மையையும் கொண்டது. மீண்டும் அதிக வைப்புத்திறன் கொண்டது.
  • பொது சந்தைகளில், பாசுமதி அரிசியை விட இந்த இரக அரிசி அதிக மதிப்பைப் பெறுகிறது. மணமற்ற அரிசி இரகங்களை விட 4-5 மடங்குகள் அதிக மதிப்பைப் பெறுகின்றன.
 
  மேலேசெல்க