முதல் பக்கம் தொடர்புக்கு  
சார்புடைய தலைப்புகள்
தமிழ்நாட்டின் நெற்பயிர் சாகுபடித் திட்டங்கள்
கர்நாடகாவில் நெற்பயிர் சாகுபடித் திட்டம்
கேரளாவின் நெற்பயிர் சாகுபடித் திட்டங்கள்

நெற்பயிர் சாகுபடித் திட்டம்

           

  பயிர் வளர்ப்புமுறைப்பாங்கு என்பது  குறிப்பிட்டநிலத்தில், ஒரு வருடத்தில், வரிசை முறையில் பயிர் மற்றும் தரிசுவிடல் ஆகியன அமையும் முறை ஆகும். பண்ணையில் வளரும் அனைத்து பயிர் வளர்ப்புமுறைப் பாங்குகளும், பயிர் சாகுபடித் திட்டமாகும்.  மேலும்  பயிர் சாகுபடித் திட்டம் என்பது,பண்ணை வளங்கள்,  இயல்நிலை, உயிரியல், தொழில்நுட்ப இயல் மற்றும் சமூக இயல் காரணிகள் அல்லது சுற்றுச்சுழல் ஆகியவற்றோடு  ஒருங்கிணைந்து,சேர்ந்து செய்யும் செயல்களை உள்ளடக்கும் முறையாகும்.

தொடர் சாகுபடித் திட்டம்

     இதில் ஒரே வயலில், அறுவடை செய்த உடனே தொடர்ச்சியாக முன் விளைந்த பயிரையே அடுத்த பயிராக பயிரிடுதல். நெல் சாகுபடியில் இது ஒரு விதமான பல பயிர் சாகுபடி முறை.

கலப்புப் பயிர் சாகுபடி:-

ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான இரகங்களைப் பயிரிட்டு, வரிசை அமைவு முறையின்றி ஒன்று சேர்த்தல்.  இதில் ஊடுபயிர் போட்டி அதிகமாகக் காணப்படும்.

ஒரு பயிர் சாகுபடி த் திட்டம்:

   தொடர்ந்து சில வருடங்களுக்கு அதிக பரப்பளவு கொண்ட நிலத்தில் நெற்பயிரையே தொடர்ந்து பயிரிடுதல்.

கட்டைப்பயிர் வளர்த்தல்:

   தீவிர பயிர் சாகுபடியின் ஒரு முக்கியமான முறையாக,  அறுவடைக்குப் பின்னும் பயிர்கட்டைகளை வயலிலேயே விட்டுவிட்டு, அதிலிருந்து புது பயிர் உருவாக்குதலே கட்டைப்பயிர் வளர்த்தல் முறையாகும்.

தொடர்பயிர் நடவுத் திட்டம்:

   முதற்பயிர் நிலைத்திருக்கும் போதே இரண்டாம் பயிரை நடுதல். இவ்வாறு செய்வதினால் முதற்பயிர் அறுவடையின்போது இரண்டாம் பயிர் முற்றிலும் வளர்ந்துவிடும்.







மேலே செல்க

  தமிழ்நாட்டின் நெற்பயிர் சாகுபடித் திட்டங்கள்:





தொடர் சாகுபடித் திட்டம்:

 பாசன ஆயக்கட்டு பரப்புகள்:

  • நெல்(ஆகஸ்ட்-ஜனவரி)-பயறு வகை/எள்/மக்காச்சோளம் (ஜனவரி-ஏப்ரல்)
  • நெல் (ஜூன்-செப்டம்பர்) - நெல் (அக்டோபர் - ஜனவரி) - பயறு வகை /எள்/பசுந்தாள் உரம் (பிப்ரவரி - மே)
  • நெல் (ஜூன்-செப்டம்பர்) - நெல் (டிசம்பர் -மார்ச்)
    நெல் (ஜூன்-செப்டம்பர்) - பசுந்தாள் உரம் (அக்டோபர் -நவம்பர்) – நெல் (டிசம்பர் -மார்ச்)
  • நெல் (ஆகஸ்ட்-ஜனவரி) - பருத்தி (பிப்ரவரி - ஜூன்)
  • நெல் (அக்டோபர் - ஜூன்) – கம்பு /காய்கறிகள் /எள் / பயறு வகை /நிலக்கடலை (பிப்ரவரி-மே)
  • நெல் (ஏப்ரல் -ஆகஸ்ட்) - நெல் (செப்டம்பர்-மார்ச்) தரிசு நிலம்.

நன்கு நீர்பாயும் பரப்புகள் (வடிமுனைக் கிணறு):-


  • நெல் (ஆகஸ்ட்-ஜனவரி) - நெல் (ஜனவரி-ஏப்ரல்) -நிலக்கடலை  (ஏப்ரல் -ஜூன்)
  • நெல் (ஆகஸ்ட்-நவம்பர்) - நெல் (டிசம்பர் -மார்ச்) - நெல் (மார்ச்-ஜூலை)
  • நெல்/காய்கறிகள்/செண்டுப்பூ(ஜூன்-அக்டோபர்)- மக்காச்சோளம் (அக்டோபர்-ஜனவரி)- பயறு வகை (பிப்ரவரி-மே)
  • நெல் (ஏப்ரல்-ஆகஸ்ட்) நிலக்கடலை (செப்டம்பர்-டிசம்பர்)- காய்கறிகள்/எள்(ஜனவரி-மார்ச்)
  • நெல் (ஆகஸ்ட்-ஜனவரி)- நிலக்கடலை (பிப்ரவரி-ஏப்ரல்)-எள்/ பயறு வகை /மக்காச்சோளம் (ஏப்ரல்-ஜூன்)
  • நெல் (ஆகஸ்ட்-ஜனவரி) - பருத்தி (பிப்ரவரி-ஜூன்)/எள் (பிப்ரவரி-மே)
  • நெல் (ஜூன்-அக்டோபர்)-ராகி/நிலக்கடலை/எள் (நவம்பர்-பிப்ரவரி)
  • நெல் (ஏப்ரல் -ஆகஸ்ட்)- நெல் (செப்டம்பர் -ஜூன்) - தீவனச்சோளம் (ஜனவரி-மார்ச்)
  • நெல் (அக்டோபர்-பிப்ரவரி) - பயறு வகை (பிப்ரவரி -மே).

ஏரிப்பாசனப் பரப்புகள்:

  • நெல் (ஆகஸ்ட்-ஜனவரி) - நெல் (ஜனவரி-ஏப்ரல்)
  • நெல் (ஆகஸ்ட்-ஜனவரி)- மக்காச்சோளம் (ஜனவரி-ஏப்ரல்)
  • நெல்/காய்கறிகள்/நீர்முலாம்பழம்(ஆகஸ்ட்-ஜனவரி)-
  • நிலக்கடலை-எள்/பயறுவகை (பிப்ரவரி-மே)
  • நெல் (ஜூன்-செப்டம்பர்) - ராகி (செப்டம்பர்-டிசம்பர்) - பயறு வகை (ஜனவரி - ஏப்ரல்)
  • நெல் (ஜூலை - நவம்பர்) - நிலக்கடலை/ராகி (டிசம்பர் -மார்ச்)- தரிசு நிலம்
  • நெல் (செப்டம்பர்-ஜனவரி) - பருத்தி (பிப்ரவரி-ஆகஸ்ட்)
  • நெல் (செப்டம்பர்-ஜனவரி) - பசுந்தாள் உரம் (பிப்ரவரி-ஏப்ரல்)
  • நெல் (செப்டம்பர்-டிசம்பர்) - “சென்னா” (ஜனவரி -மார்ச்)
  • நெல் (ஜூன்-செப்டம்பர்) - மிளகாய் (அக்டோபர்-பிப்ரவரி)
மானாவாரி பரப்புகள்:

மேட்டுப்பாங்கான நெல்/சிறு தானியங்கள்/ பயறு வகை / நிலக்கடலை/ பருத்தி/ மிளகாய் (செப்டம்பர்-பிப்ரவரி)
புழுதி நெல் (ஜூன் -ஆகஸ்ட்) - பயறு வகை /காய்கறிகள்/எள் (செப்டம்பர்-ஜனவரி) நெல் (ஜூலை - நவம்பர்)


இரக கலப்புப்பயிர்த் திட்டம்:
  • தமிழ் நாட்டில் இரக கலப்புப்பயிர்த் திட்டம் கூதிர்க்காலம்(இலையுதிர்க்காலம்) மற்றும் குளிர்கால இரகங்களை 3:1 என்ற விகிதத்தில் பயிர்செய்வதே வழக்கத்தில் உள்ளது (“உடோ” முறை  எனப்படுகிறது)
  • இந்த அமைப்பினால் குறைந்த சாகுபடி செலவு ஏற்படுகிறது.  குளிர்கால பயிரைப் பயிரிட நிலம் தயாரிப்புக்கான செலவை நீக்குகிறது.
  • இருப்பினும் இயல்பான நிலைகளில், இத்திட்டம் நிறைய பிரச்சனைகளை உருவாக்குகிறது. உழவியல் செயல்களான அறுவடை, உர அளவை நிர்ணயித்தல் மற்றும் பல செயல்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

  மேலே செல்க

கர்நாடகாவில் நெற்பயிர் சாகுபடித் திட்டம்:  
ஒரு பயிர் சாகுபடி முறை:

கர்நாடகாவின் துங்கபத்ரா திட்டப்பரப்பு, நெல் - நெல் ஒரு பயிர் சாகுபடி முறையினால் தான் நெல் சாகுபடி  ஓங்கி நிற்கிறது.

தொடர் சாகுபடித் திட்டம்

கர்நாடகாவின் தெற்கு நடுநிலை மண்டலத்தின் நெல் சார்ந்த பயிர்த் திட்டங்கள் பின்வருமாறு:
நெல்-நெல்
நெல்-நிலக்கடலை
நெல்- பயறு வகை  
நெல்-தரிசு நிலம்
நெல்-காய்கறிகள்
நெல்-மக்காச்சோளம்

கட்டைப்பயிர் வளர்த்தல்:

  இம்முறை நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பைத் தருகிறது. மேலும், கர்நாடகா மலைப்பகுதிகளில் இருக்கின்ற பருவவாரி தரிசு நிலம், தொழிலாளர்கள் மற்றும் எஞ்சிய ஈரத்தன்மையினை உபயோகித்துக் கொள்ள உதவுகிறது. முதன்மை பயிர் மகசூலில் 76-350 சதவிகிதம் மகசூலை கட்டைப்பயிர் தருகிறது. கட்டைப் பயிரில் முதன்மை பயிரைவிட 24 சதவிகிதம் குறுகிய வளர்ச்சிக்காலமும் 59 சதவிகிதம் அதிக கொள் மகசூலும் கிடைக்கிறது.

மல்நாடு பகுதியில் கட்டைப்பயிர் வளர்த்தல்:
  • இன்டன் மற்றும் ஐ.இ.டி-7191, ஆகிய இரகங்கள் கட்டைப்பயிர் முறைக்கு ஏற்றவை
  • சிறந்த முதன்மை பயிர் அறுவடை செய்திருந்தால் மட்டும் கட்டைப்பயிர் முறை மேற்கொள்ளலாம்.
  • நிலமட்டத்திலிருந்து 8-10 செ.மீ மேலே விட்டு அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்குப் பின் 8-10 நாட்கள் நிலத்தை உலரவிட வேண்டும்.
  • பாசனம் செய்து 15 நாட்களுக்குப் பிறகு (ஹோடா) மண்ணை கிளறும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்நிலையில் 50 கிலோ தழைச்சத்தைக் கொண்டு மேல் உரம் இடுதல் வேண்டும்.
  • முதன்மை பயிருக்கு அளித்தது போலவே பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • கட்டைப்பயிர் 135 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.  ஒரு எக்டருக்கு 25 குவிண்டால் மகசூலைப் பெறலாம்.






  மேலே செல்க

  கேரளாவின் நெற்பயிர் சாகுபடித் திட்டங்கள்:

தொடர் சாகுபடித் திட்டம் :

பொது மண்டலம்

நெல்

நெல்

தரிசு நிலம்

நெல்

நெல்

காய்கறிகள்/பயறினம்/எண்ணெய் வித்துப்பயிர்/ பசுந்தாள் எரு

குட்டனாடு

நீர் தரிசு நிலம்

நீர் தரிசு நிலம்

நெல்

நெல்

நெல்

நீர் தரிசு நிலம்

ஒன்னட்டுக்கரா

நெல்

நெல்

எண்ணெய் வித்துப்பயிர்/பசுந்தாள் எரு

கோல்/கைப்பாட்

நீர் தரிசு நிலம்

நெல்

நீர் தரிசு நிலம்

நீர் தரிசு நிலம்

நெல்

நெல்

நீர் தரிசு நிலம்

நீர் தரிசு நிலம்

நெல்

பொக்காலி

நெல்

மீன்/இறால்

-

உயர் மண்டலங்கள்

நெல்

நெல்

தரிசு நிலம்





ஊடுபயிர் திட்டம் :

தாழ்வான நிலத்தில் (பகுதி உலர்) விதைப்பு நெல்லுடன் தட்டைப் பயறுவகையை (12.5 கிலோ/எக்டர்) என்ற அளவில் நெல்லுடன் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பசுந்தாள் உரமாக செயல்படுகிறது.  தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், நெல்வயல், நீரில் மூழ்கிவிடின் 6 வாரங்களான தழைப்பருவத்தில் இருக்கும் தட்டைப்பயறு அழுகி தானாக மண்ணில் புதைந்து விடும். இதனால் மண்ணுக்கும் போதுமான பசுந்தழை உரத்தை அளிக்கிறது. இத்தகைய தட்டைப்பயறு சாகுபடி பகுதி உலர் நெல்லில் களை அழுத்தத்தையும் குறைக்கிறது.

 

 


ரக கலப்புப்பயிர்த் திட்டம் :

  • இலையுதிர் காலம் மற்றும் குளிர்கால இரகங்களை 3:1 என்ற விகிதத்தில்  கலந்து வளர்ப்பது கேரளாவில் “கூட்டுமுன்டகன்” எனப்படுகிறது.  இது வழக்கமான முறையாக உள்ளது.
  • இம்முறை அமைப்பினால் குறைந்த சாகுபடி செலவே ஏற்படுகிறது.  குளிர்கால பயிரைப் பயிரிட நிலம் தயாரிப்புக்கான செலவை நீக்குகிறது.
  • இருப்பினும் இயல்பான நிலைகளில், இத்திட்டம் அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறது. உழவியல் செயல்களான அறுவடை, உர அளவை நிர்ணயித்தல் மற்றும் பல செயல்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தொடர்பயிர் நடவுத் திட்டம் :

பயறு வகையின் விதைகளை தனியாகவோ, கலந்தோ, நெல் வயலில் அறுவடைக்கு 21 நாட்கள் முன்னரே நீர் தேங்கிய நிலையில் வீசிவிதைத்து பின் நீரை வடித்தபின் செய்வதே தொடர்பயிர் சாகுபடியாகும்.  நெற்பயிர் அறுவடைக்குப்பின் வயலில் எஞ்சிய ஈரத்தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டு, விதைத்த பயறு விதைகள் அறுவடை வரை நன்கு வளர முடிகிறது. நெற்பயிர் முதிர்ந்த நிலையில் பயறுவிதைகள், கொண்டைக்கடலை, பட்டாணி போன்ற விதைகளை விதைக்க வேண்டும். இம்முறையினால் நேரம் சேமிப்பு, பணம் சேமிப்பு (நில தயாரிப்புக்கு செலவளிப்பது) ஏற்படுகிறது. தொடர்பயிர் சாகுபடி முறை மேட்டுபாங்கான மற்றும் தாழ்வான, நெற்பயிர் வளர்ப்பு பகுதிகளில் வழக்கமாக உள்ளது.

 


மேலே செல்க