| ஆச்சா  மரம் அறிவியல் பெயர்: ஆர்டுவிக்கா  ஃபின்னேட்டா
 பரவல்: 
இத்தாவரங்கள் தக்காணபீடபூமி,  மத்திய இந்தியா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற இவைகளில் காணப்படுகின்றன.
 
 நாற்றங்கால்  நுட்பங்கள்: விதை 24 மணி நேரம்  நீரில் ஊறவைக்கப்படுகிறது. சூன் சூலை மாதங்களில் நாற்றங்கால்களில் விதைக்கப்படுகிறது.  நாற்றங்கால் படுகைகள் நிழல் பகுதிகளில், நாற்றங்கால் பாத்தியிலோ (அ) பாலிதீன் பைகளிலோ  வளர்க்கப்படுகின்றன. நடப்பட்ட (அ) விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு முளைக்கத் தொடங்கும்.
 
 வேர்க்கால்  நடவுமுறை: ஏழு வயதுள்ள நாற்றுகளின்  அடித் தண்டு 4 செ.மீ. நீள தண்டும் 13-15 செ.மீ. நீளமும் உடையவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
 
 வயல்நடவு: 12 மாத வயதுள்ள நாற்றுகள்  (அ) அடித்தண்டு வேர்கள் மழைக்காலங்களில் நடவு செய்யலாம். இந்நாற்றுகள் 4-6 ஆண்டுகளக்குப்பிறகே  அதிவேகமாக வளரும்.
 
 பயன்கள்:
 
            
              கட்டை       மிகவும் கடினமானதுமரப்பட்டைகள்       கயிறு தயாரிப்பில் பயன்படுகின்றனஇலைகள்       தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும் பயன்படுகின்றன.வைரம்       பாய்ந்த நடுக்கட்டையிலிருந்து ஒலியோ கோந்துகள்  பெறப்பட்டு வண்ணப்பூச்சுகள் தயாரிக்கப்பயன்படுத்தப்படுகின்றன. |