organic farming
அங்கக வேளாண்மை :: உயிராற்றல் வேளாண்மை

முகவுரை


1924-ம் ஆண்டு ஜெர்மனியில், முனைவர் ரூடால்ப் ஸ்டெய்னர் வேளாண்மையைப் பற்றிய புதிய முறையை விவசாயிகளுக்கு பிரசங்கம் செய்யும் போது உயிர் சக்தி வாய்ந்த வேளாண்மை என்பது உலகுக்கு தெரியவந்தது. ரூடால்ப் ஸ்டெய்னர், ஆஸ்டிரிய தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி ஆவார். இவருடைய கருத்துக்கள் கிழக்கத்திய நாடுகளின் தத்துவம் முக்கியமாக புத்த மதம், இந்து மதம் மற்றும் வேதப் புத்தகங்கள் தாக்கத்தால் உருவானது. இந்த தாக்கங்கள் மற்றும் அவருடைய கருத்துக்களால் ஆந்தராபோஸாப்பி அல்லது மனித இனத்தினுடைய அறிவு என்பது உருவானது.

ஆந்திராபோஸாப்பி என்றால் மனித இனம், ஸோபியா என்றால் அறிவு.

ஆந்திராபோஸாப்பி என்பது ஆன்மீக நம்பிக்கையுடைய (புரூசா) மனித இனத்தின் அங்கீகரித்தல் ஆகும். ஐரோப்பாவில், இரசாயனப் பொருள் வேளாண்மையின் போது மண் வளத்தன்மை குறைதல், விளைபொருளின் தரம் குறைதல், விதை முளைப்புத் திறன் குறைதல் போன்றவை ஏற்பட்ட பொழுது, ஸ்டெய்னரின் உயிர் சக்தி வேளாண்மை பற்றிய பேச்சு விவசாயிகளுக்கு உதவியாக இருந்தது. பொதுவாக முக்கியத்துவம் குறைந்ததையும் விவசாயிகளுக்கு கவனித்தனர். பொதுவாக பூமியில் உள்ள எல்லா உயிர் வாழினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றியும் எடுத்துரைத்தார்.

பயோஸ் = உயிர்  டைனமிக் = சக்தி

புதிய அறிவியலைப் பற்றியும், ஆய்வுக் கூடங்களில் உள்ள உயிரற்ற பொருள்களினுடைய படிப்பு பற்றிய வேதிப் பொருள் வேளாண்மையும், இயற்கையாக உள்ள உயிரினங்கள் மற்றும் அதனிடையே உள்ள நிலையான மாற்றம் பற்றிய தொடர்பையும் விரிவாக விளக்கினார். நகர்ந்து கொண்டிருக்கக் கூடிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தைப் பற்றியும் விளக்கினார். தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித இனத்தின் அசைவுகளின் விளைவு முற்காலத்தில் எப்படி இருந்தது என்பது பற்றியும் பேசினார். இயற்கையுடன் நமக்கிருக்கும் தொடர்பை அறிந்து கொண்டு எப்படி மனித இனம் இந்த காலத்தில் வாழ வேண்டும் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இது  துல்லியமாக இருக்க வேண்டும்.

பூமியில் உள்ள பிரபஞ்சத்தின் உடைய விளைவுகளை புரிந்து கொண்டு பதிவு செய்தல் பற்றி மக்கள் இன்றைய காலத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஜெர்மனியில் உள்ள மரியா துன், தோட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கான பயிர் சாகுபடி பட்டியலையும் வெளியிட்டது. ரூடால்ட் ஸ்டெய்னர் இயற்கை வழி மருந்துகளைப் பயன்படுத்தி சில தயாரிப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார். இதனால் பயிர் மற்றும் மண்ணின் மீது நன்மைத் தரக்கூடிய விளைவுகளை அதிகப்படுத்துகிறது மற்றும் சோதனைக்கு மக்களை உற்சாகப்படுத்துவதையும், புதிதாக ஒன்றை கண்டு பிடிப்பது பற்றியும் இதில் உள்ளது. உயிர் சக்தி என்பது அதிக சக்தி பண்பட்ட சக்தி மற்றும் தாவரங்கள், விலங்குகள், மனித இனத்தை எப்படி பாதிக்கிறது பற்றியதாகும்.

இந்த உயிர் சக்தியினுடைய அறிவு மற்றும் பணி மண்ணிற்கு சமநிலையும், குணப்படுத்தலையும் தருகிறது. தாவரங்களை உண்ணக்கூடிய ஒவ்வொரு உயிரியும் மற்றும் மண்ணில் வளரும் அனைத்திற்கும் இந்த உயிர்சக்தி தேவைப்படுகிறது.
உயிரியக்க ஆற்றல் பண்ணையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் முக்கிய விளைவுகள்:

  • உணவினுடைய முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
  • இயற்கை மூலங்களான மண் (மண்ணிலுள்ள அங்ககப்பொருளை தக்க வைப்பதால்), விதைகள் மற்றும் நீரை சீர்ப்படுத்துகிறது.
  • இயற்கைக்கும், உலகுக்கும் இடையேயான தொடர்பை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது மற்றும் இயற்கையுடன் இயைந்து வாழவும் கற்றுக் கொடுக்கிறது.
  • எங்கெல்லாம் தொடர்ந்த உபயோகத்தினால் பலவீனமாக உள்ளதோ அங்கு இயற்கையினால் பூமியையும் மனித இனத்தையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.

வரலாறு:

வேளாண்மை என்பது மனித வாழ்வின் அடிப்படை. நாம் தினமும் உண்ணுவதற்கும், நம்முடைய உடம்பு, மனம், ஆவி, ஆத்மாவை நிலை நிறுத்தவும் உணவுப் பயிர்களை வளர்க்கிறோம். மனித இன வரலாறு முழுவதும், இசை, ஓவியம், பாட்டு மற்றும் இதர கலைகளுடன் இணைந்த பணியாகவே இருக்கிறது. ஆனால் கடந்த நூறு வருடங்கள் அல்லது சில நூற்றாண்டுகளில் வாழ்விற்கான ஆதாரத்தை நாம் இழந்து வருகிறோம். உலகப் போர்களின் போது விட்டுப்போன போர்க்கருவிகளுக்கான வேதிப்பொருட்களை பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்லுவதும் உரங்களாகப் பயன்படுத்தியும் வேதிப்பொருள் வேளாண்மை செய்யப்பட்டது. வேளாண் வேதிப் பொருட்களுக்கான ஆதாரங்கள் - பூமியில் இருந்து வரும் படிவ எரி பொருள். இது நிலையற்றது மற்றும் எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியது அல்ல.

1960 மற்றும் 1970ம் ஆண்டில் வந்த பசுமைப் புரட்சியின் போது அறிடுகப்படுத்தப்பட்ட கலப்பின விதைகள், வளர்ச்சி பருவம் வந்தவுடன் விதைகளை உற்பத்தி செய்ய இயலாமல் போகிறது. இதனால் விவசாயிகள் கலப்பின விதை நிறுவனங்களை சார்ந்து இருக்க நேரிடகிறது. இந்த கலப்பின விதைகள் அதிகளவு பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களின் தேவைகளால் பலவீனமான செடிகளை உற்பத்தி செய்யும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள் (ஜி.எம்) (குறிப்பிட்ட பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, மற்றும் உரங்களைப் பயன்படுத்துவது) மனித இனத்துக்கு மட்டுமல்லாமல், பூமியினுடைய ஆரோக்கியமான சரிநிகர் நிலைக்கும் ஊறு விளைவிக்குமாறு உள்ளது. மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள் நிறைய பொருளாதாரப் பிண்ணனியுடன் பிணைந்துள்ளது. வளரும் நாடுகளில் இந்த விதைகளை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துரதிர்ஷ்டவசமாக விவாதங்கள் எழுந்துள்ளன.

இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வதால் நம்முடைய ஆரோக்கியம், விவசாயிகளின் பொருளாதார நிலை, மண்ணின் முக்கியத்துவம் மற்றும் அனைத்து தாவர விலங்குகளின் ஆரோக்கியமான நிலை கெடுவதைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மண் கடினமாகி விதை முளைப்பதற்கு இயலாமல் போகிறது. மேலும் மேலும் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி பயிரிடுவதால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் கடன் ஏற்படும் நிலை உருவாகிறது. புதிதாகத் தோன்றும் பூச்சி மற்றும் நோய்கள், இரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு எதிர்ப்புச் சக்தியுடையதாக மாறுகிறது. புதிதாக நோய்கள் தோன்றுவதால் விலங்குகள் மற்றும் மனித இனம் பாதிக்கப்படுகிறது.

உலகம் பேரழிவை நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களிடையே விழிப்புணர்வும் வந்து கொண்டிருக்கிறது. கடந்த பல நூறு வருடங்களில், உயிர் சக்தி வேளாண்மை முறை மிக மெதுவாக மக்களிடையே உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. விவசாயிகள் மற்றும் தோட்ட விவசாயிகளினுடைய உயர்சக்தி அமைப்புக்கள் மற்றும் சான்றளிப்பு குழுக்களால் வழங்கப்படும் டிமீட்டர் (Demeter) சான்றால் விளைந்த பொருட்களை விற்பனை செய்வது உத்திரவாதமாகிறது. 

டிமீட்டர் = பூமியினுடைய கிரேக்கக் கடவுள்:

உயிர்சக்தி முறைகள் மண்ணிற்கு இயற்கைச் சக்தியுடன் கூடிய புது வாழ்வைத் தருகிறது. இந்தச் செயலால் மனித இனத்துடைய ஒருங்கிணைப்பு மற்றும் அறிவு மேம்படுகிறது. இந்த விழிப்புணர்வு நிலத்துக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு மற்றும் கண்காணிப்பை பொறுத்து இருக்கிறது.


மேலே

அடிப்படை முறை மற்றும் நன்மைகள்:

ஒரு முறையை உருவாக்குவதற்கு தேவையான எல்லாக் காரணிகளும் வாழ்வைப் பேணுவதாக இருக்க வேண்டும். இந்தப் பகுதிகள் பின்வருமாறு:

சாரம் மற்றும் சக்தி:

பொருளுக்கும், சக்திக்கும் இடையேயான தொடர்பைப் பொறுத்துள்ளது. உதாரணமாக தாவரங்களுக்கு ஒளி, வெப்பம், நீர் வளருவதற்கு தேவைப்படுகிறது. சாரம் மற்றும் சக்திக்கும் இடையேயான தொடர்பு சரிசம நிலையை உருவாக்குகிறது. சாரம் மட்டுமல்லாமல் சக்தியை பயன்படுத்தி நாம் உயிர் வாழ்கிறோம். ஆகவே சக்தியை தரக்கூடிய உணவை உண்ணுவதற்கு உயிர் சக்தி நமக்கு தேவைப்படுகிறது. சரிநிலையில் உள்ள மண்ணில் வளரும் செடிகள் சக்தி மற்றும் சாரத்தைத் தருகிறது. (கனிமங்கள், நொதிகள், வளர்ச்சி ஊக்கிகள்).

மண்:

ஆரோக்கியமான திறனுடைய செடிகளை உருவாக்குவதற்கு, மண்ணினுடைய அமைப்பு மற்றும் வளத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள், நுண்ஊட்டச்சத்து, நுண்ணுயிரிகள், புழுக்கள் மற்றும் மண்ணில் உள்ள மற்ற உயிரினங்கள். ஆனால் மண் என்பது வாழும் முறையுடன் தொடர்பு மற்றும் உறவு முறையைக் கொண்டது. வாழ்வியல் சக்திகளினால் மண் சமநிலையில் இருந்தால் இதில் வளரக்கூடிய செடிகள் ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் இருக்கும். இரசாயனப் பொருட்கள் தேவையில்லை. மண் அமைப்பை பொறுத்தவரை மண் பொடியாக, பொறைப்புடன், காற்றோட்டமாக வளமானதாக இருக்க வேண்டும்.

அங்ககப் பொருள்:

சமநிலையில் உள்ள மண்ணை உருவாக்குவதற்கு அங்ககப் பொருளின் உடைய பயன்பாடு திறனுள்ளதாக இருக்க வேண்டும். மட்கிய உரக்குவியல் மூலமும் உயிர்சத்து மக்கிய உர தயாரிப்பு முறைகளின் மூலம் இதைச் செய்யலாம்.

தாவர மக்கு:

தாவர மக்கு செடிகள் வளர்வதற்கு தேவையானவற்றை கடத்துவதற்கும் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. மண் வளத்தை நிலையான வழியில் வைத்து, நீரைப் பிடித்து வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. கடினமான அங்ககப் பொருளை முழுவதுமாக மட்க செய்வது தாவரமக்கு ஆகும். இது அதிக ஊட்டச்சத்துடன் அடர் நிறத்தில் புதுவித வாசனையுடன் ஈரப்பதமாக இருக்கும். இது தான் மண் உருவாவதற்கான அடிப்படையாக உயிர் சக்தி வேளாண்மையாக மாறும்போது இருக்க வேண்டும்.

சாண எரு:

மாடுகளின் சாணத்தால் வழங்கப்படும் உரம் மண்ணின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. மாட்டின் நீளமான செறித்தல் முறையினால் சேர்க்கப்படும் நுண்ணுயிரிகளால் இந்த மாட்டுச் சாணம் மிகவும் சிறந்தது ஆகும். உரக் குவியலை உருவாக்குவதற்கு கிளப்பியாக பயன்படுத்தப்படுகிறது. தழைச்சத்தின் அளவுக்காகவும் உயிர் சத்து தயாரிப்பு முறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

விண்வெளி சக்திகள்:

இந்த தயாரிப்பு முறையைப் பயன்படுத்துவதால் பயிர் வளர்ச்சியின் மீதான விண்வெளிக் கதிர்கள் விளைவுகள் ஏற்படுத்தும்.

உயிர்சத்து தயாரிப்பு முறைகள்:

இந்த முறை எளிதாக, இயற்கையான, ஹோமியோபதி தயாரிப்பு முறைகளைப் பயன்படுத்துவதால் கிரகங்களுடைய விளைவை அதிகப்படுத்துகிறது. மண் மற்றும் பயிரில் உள்ள சிலிக்கா மற்றும் சுண்ணாம்பினால் ஏற்படும் விளைவை அதிகப்படுத்துகிறது. சிதைக்கும் முறை மற்றும் உரக்குவியலில் உள்ள உயிர்சக்தியை அதிகப்படுத்துவதாலும் இது பயன்படுத்தப்படுகிறது. முனைவர் ஸ்டெய்னர் 2 விதமான தயாரிப்பு முறைகளை மண்ணில் நேரிடையாகவும் அல்லது செடிகளில் (500 மற்றும் 501 எண்ணிட்ட) தெளிப்பதன் மூலமும் மட்கிய உரத்தை செய்யும் போது (502 மற்றும் 507 எண்ணிட்ட) பயன்படுத்தப்பட்ட ஆறு தயாரிப்பு முறைகளை வழங்கியுள்ளார்.

பயிர் சுழற்சி முறை:

பயிர் சுழற்சி, முறையான மண்ணில் சாகுபடி மற்றும் இதர அங்கக வேளாண்மை முறைகள்:

பயிர்களுக்கு அதிகமான ஊட்டச்சத்து அளித்த பின்னர் (உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ்) மண்ணை எந்த விதத்திற்கும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருக்க முறையாக திட்டமிடல் வேண்டும். பசுந்தாள் உரம் பயிர்களை விதைப்பதால் (பருப்பு வகைகள், கிராம்பு) நிலப் போர்வை (புல், கிராம்பு செய்வதன் மூலம் தாவர மக்கு மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகப்படுத்தலாம். ஈரப்பாதுகாப்பு செய்வதால் மண் அமைப்பை மேம்படுத்தலாம். மண்ணில் நீர் மற்றும் வெப்ப நிலையை சமநிலைக்குக் கொண்டு வரலாம். களைகளைக் கட்டுப்படுத்தலாம். துணைப் பயிரிடுவதால் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். மூலிகை தேயிலையை தெளிப்பது, பழ மரங்களுக்கு சிறந்த மரப்பூச்சு, உயர்வான படுக்கையை உருவாக்குதல், மண்ணை மேலோட்டமாக தோண்டுதல் / உழுவது மற்றும் ஈரமாக இருக்கும் போது, குறிப்பாக களிமண் நிலத்தில் தேவையில்லாமல் வேலைசெய்வதோ அல்லது உள்ளே போவதைத் தவிர்த்தல்.

சாம்பல் அடித்தல்:

அளவற்ற பூச்சித் தொல்லை, விலங்கு பூச்சிகள், களைப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, முதலில் பூச்சிகள், களை விதைகள், அல்லது இறந்த விலங்குகளின் தோலை சேகரித்து எரிக்க வேண்டும். பின் இந்த சாம்பலை நீரில் கரைத்து மூலிகை மருந்தாக நிலத்தின் மீது தெளிக்க வேண்டும். இது இரசாயன மருந்து தெளிப்புக்கு ஒரு மாற்றமாகும்.

பண்ணை உயிரி:

தன்னிறைவு உள்ள பண்ணையாக இருக்க வேண்டுமானால் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உரம், பூச்சிக்கொல்லியை தெளிப்பதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்தின் அளவை சமப்படுத்தலாம். மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் மற்றும் வேலிப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் காற்றிலிருந்து ஏற்படும் இழப்பைத் தவிர்க்கலாம். இந்த மாதிரி மண் அமைப்பை சரி செய்வதற்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வேண்டும்.

களைகள், பூச்சிகள் மற்றும் நோய்கள்:

மண்ணில் குறைபாடு உள்ள போது களைகள் வளர்வதும், முறையான சாகுபடி முறையை கடைபிடிக்காததால் பூச்சித் தொல்லை மற்றும் நோய் தொல்லை ஏற்படும். இதற்காக முதலில் நிலத்தை சமநிலையில் அனைத்து ஊட்டச்சத்துடன் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

செயல்முறை அளிப்பு:

  • தினமும் நிலத்தை சுற்றிப் பார்க்க வேண்டும். அப்பொழுது தான் நிலத்தில் உள்ள தாதுக்கள், பாறைகள், மண் வகைகள், களை வகைகள், பூச்சி வகைகள், பகலிலும் இரவிலும் நடமாடும் விலங்குகள், நிலத்தில் உள்ள மின் கம்பிகள், நிலத்தடியில் உள்ள நீரோடைகள், நீர் ஆதாரம், காலநிலை, மக்கள் வாழுமிடம் அல்லது நிலத்தைப் பயன்படுத்துதல் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
  • சுற்றுப்புறச்சூழல் கட்டுப்பாடு: வேலிப்பயிர்கள் மற்றும் மரங்களைப் பயிரிடுவதால் காற்றினால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். நீரின் தரத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
  • மண் அரிப்பைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சியும், மூடுப்பயிர்களை பயிரிட வேண்டும்.
  • சாகுபடி முறைகளை மேம்படுத்த வேண்டும்.
  • பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும்.
  • ஈரப்பதமாக்குதலை முறையாக செய்ய வேண்டும்.
  • மட்கிய உரக்குவியலை பயன்படுத்த வேண்டும்.
  • உயிர் சக்தி தயாரிப்புகளான 500, 501ஐ தேவையான போது பயன்படுத்த வேண்டும்.
  • மற்ற தயாரிப்புக்களான சாண எரு, பஞ்சகாவ்யா, இயற்கை நீர்மை உரங்களான (தேயிலை, நொதிக்க வைத்த பூனைக் காஞ்சொறி செடி வகையின் உரம்) அளிக்க வேண்டும்.

நன்மைகள்:

  • நல்ல தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளை நல்ல சுவை அதிகளவிலான ஊட்டச் சத்துக்கள் (புரோட்டீன், விட்டமின்கள்) உடன் உற்பத்தி செய்ய முடியும்.
  • அங்கக வேளாண்மையில் விளைச்சல் எப்பொழுதும் சராசரி அளவை விட அதிகமாக இருக்கும். ஆனால் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மண் அமிலத் தன்மையுடையதாகவும் பூச்சிகளின் தொல்லையும் அதிகமாகி பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • கால்நடை மற்றும் பயிர் நோய்களால் குறைந்த அளவுத் தொல்லையே இருக்கும்.
  • உயிர் சக்தி வேளாண்மையால் பூச்சிகளால் சேதமிருக்காது மற்றும் பொருளாதார சேதமும் அதிகளவில் இருக்காது. பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்த மரங்கள் மற்றும் புதர்ச்செடிகளை நிலத்தைச் சுற்றி வளர்க்கலாம்.

பண்ணையை உயிர்ச்சக்தி நிலமாக மாற்றுதல்:

பண்ணையின் வளத்தை தொடர்ந்து பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். முக்கியமான வழிமுறைகள் பின்வருமாறு:

  • தண்ணீரில் கரையக்கூடிய உரங்களை வேகமான வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது. இதனால் மண் அமைப்பு பாதிக்காது. ஆனால் பயிர்களில் சமமற்ற ஊட்டச்சத்து இருக்கும்.
  • இரசாயனங்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகளை நிறுத்த வேண்டும்.
  • பண்ணையில் வளர்க்கப்படும் தண்டு துண்டுகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பயிறு வகை வளர்ச்சி, மண்புழு மற்ற மண் நுண்ணுயிரிகளின் செயலை ஊக்குவிக்க வேண்டும். இதனால் தாதுப்பொருள்கள் தேவையான அளவு கிடைக்கும் மற்றும் தாவர மக்கு உற்பத்தி ஆவதற்கும் உதவுகிறது
  • போதுமான அளவு மரங்களை வளர்ப்பதால், மண்ணில் ஈரப்பதம், காற்றிலிருந்து பயிருக்கு பாதுகாப்பு, கொன்றுண்ணியாகவும் செயல்படும்.

மேலே

தகவல்:

  • செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
  • இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு