அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM)

தேவையான பொருட்கள்:

  • குழு1 : 70 கிலோ முழுமையாக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் , 10 கிலோ சாம்பல் அல்லது அரிசி தவிடு சாம்பல் மற்றும் 20 கிலோ மரத்தூள்.
  • குழு2 : (அ) ஐந்து லிட்டர் பஞ்சகாவ்யா , (ஆ) ஐந்து லிட்டர் செறிவூட்டப்பட்ட அமுதம் கரைசல், (இ) ஐந்துலிட்டர் இளநீர் – மோர் அல்லது அரப்பு – மோர் அல்லது சீயக்காய் – மோர் கரைசல், (ஈ) பத்துலிட்டர் ETFPE , ( இ ) ஐந்து லிட்டர் ஆர்கியபாக்டீரியல் கரைசல்.
  • குழு3 :உயிர் உரங்கள் - அசோஸ்பைரில்லம் , ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா , பொட்டாஷ்பாக்டீரியா : 500 கிராம் -1 கிலோ மற்றும் வேர் உட்பூசணம் 5 முதல் 10 கிலோ.
  • குரூப் 4 :( வேர்அழுகல்,கிழங்கு அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்த ): ஒவ்வொன்றும் 500 கிராம் - 1 கிலோசூடோமோனாஸ் ஃப்ளுரோசென்ஸ் , டிரைகோடெர்மா விரிடி, டிரைகோடெர்மா ஹர்சனியம் மற்றும் பாசில்லஸ் சப்டில்லஸ் .
  • குழு5:(நூற்புழு கட்டுப்படுத்த) 1-2கிலோ பைசில்லோமைசிஸ்.
  • குழு 6: (வேர் புழு,வெள்ளை புழு கட்டுப்படுத்த, காண்டாமிருகம் வண்டு மற்றும் பிற மண்வாழும் வண்டுகள் மற்றும் கிராப்ஸ்): 500 கிராம் - பியூவீரியா ப்ரன்க்ரானிட்டி மற்றும் மேடார்ஹிசியம் ஒவ்வொரு 1KG .

தயாரிப்பு:

  • (அ) குழு 1ல் உள்ள பொருட்களை நன்கு கலக்கவும்.
  • (ஆ) குழு 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள கரைசல்களை கலந்து கொள்ளவும்.
  • (இ) 3,4,5 மற்றும் 6 ல் உள்ள பொடிகளை நன்றாக ஒன்றாக கலந்து கொள்ளவும் ; பயிர் நிலையைப் அடிப்படையில் பொடிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • (அ) மற்றும் (இ) வழிமுறைகளை பின்பற்றி கலவைகள் சேர்க்க வேண்டும். இந்த கலவை மீது (ஆ) கரைசலை தூவி கலவையை சீரான ஈரமான நிலையில் இருக்கும்.

பயன்பாடு:
30 நாட்களுக்குள்பயன்படுத்த வேண்டும். நீண்டகாலம் அதை சேமிக்க வேண்டும் என்றால், 2 அடி பரந்த மற்றும் ஒன்பது அங்குல உயரமாக ஒரு குவியலாக சேமிக்க வேண்டும். நீளம் வசதியை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். ஈரமான சணல் பைகள் , தென்னை ஓலைகள்அல்லது கரும்பு இலைகளும் கொண்டு மூட வேண்டும். தேவையான சமயத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து சீரான ஈரப்பதம் பராமரிக்க வேண்டும். இந்தக்குவியல் ஒரு கொட்டகை அல்லது மரத்தின் நிழலில் இருக்க வேண்டும். இதனை தேவையை பொறுத்து , அடியுரமாக அல்லது மேல் உரமாக பயன்படுத்தமுடியும் . பயிர்நிலைக்கு ஏற்ப ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு : 
நுண்ணுயிரிகள் ஊட்டமேற்றிய கலவை ஏக்கருக்கு 100-500 கிலோ என்ற விகிதத்தில் பயன்படுத்தமுடியும் . மேலே கொடுக்கப்பட்ட பொருட்கள் 100 கிலோ நுண்ணுயிரிகள் ஊட்டமேற்றிய கலவை தயார் செய்ய கொடுக்கப்பட்டவையாகும். பெரிய அளவில் தயார் செய்ய குழு 1 ல் உள்ள பொருட்களை அதே விகிதத்தில் பராமரிக்க குழு 1 ல் உள்ளவற்றை அதிகரிக்க வேண்டும். அதே அளவில் மற்ற பொருட்களின் விகிதத்தை பராமரிக்க வேண்டும். இது கலவையின் அளவுஅதிகரிக்கிறது. இந்த கலவையை சீரான ஈரத்தை பராமரிக்க போதுமான அளவு ஆர்கியபாக்டீரியல் கரைசல் தெளிக்க வேண்டும் . 2-5 வரையிலான குழு பொருட்களின் அளவை மாற்ற வேண்டாம்.

பயிர்வளர்ச்சி ஆரோக்கியமாக இல்லை என்றால், பயிர்களுக்கு மழை காரணமாக நீர்ப்பாசனம் கொடுக்க முடியாது. குறைந்தது இரண்டுமுறை பதினைந்து நாட்கள் இடைவெளியில் கலவையை பயன்படுத்தலாம். பயிர் ஆரோக்கியமானதாக இருந்தால், வளர்ச்சிகாலத்தில் ஒருமுறை 1-2 மாதங்களில் அதைபயன்படுத்த வேண்டும்.

படுக்கை பயிர்களான வெண்ணிலா ,மிளகு , ஏலக்காய் பயிர்களின் படுக்கை மீது தெளித்து இலைகள் கொண்டு மூட வேண்டும். மழைக்காலத்தில், தழைக்கூளம் நகர்த்தி பயனுள்ள வடிகால் வசதி ஏற்ப்படுத்தி நுண்ணுயிரிகள் ஊட்டமேற்றிய கலவை வேர்களுக்கு பக்கத்தில் பரப்பி உறுஞ்சு வேர்களைபாதுகாக்க வேண்டும்.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16