organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

பூண்டு அங்கக பயிர் சாகுபடி

இரகங்கள்: உள்ளூர் இரகம், ஊட்டி1, பார்வி, இராஜேயே, காடி மற்றும் சிங்கப்பூர்

பருவம்: ஜீன் -ஜீலை, அக்டோபர்-நவம்பர்

மண் மற்றும் வானிலை: நன்கு நீர் வடியும், களிமண் கலந்த வண்டல் மண் சாகுபடிக்கு உகந்தது. குளிர்ந்த வானிலை இருந்தாலே சாகுபடி செய்ய போதுமானது.

விதை மற்றும் விதைப்பு:
நிலத்தை நன்கு உழ வேண்டும். 15 செ.மீ. இடைவெளியில் ஆழம் குறைந்த பள்ளம் தோண்ட வேண்டும். விதைக் குமிழ்களான குளோங்களை 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

விதையளவு: 500-600 கிலோ /ஹெக்டேர்

விதை நேர்த்தி

3 சதவிகித தசகாவ்யாவை 30 நிமிடங்கள் விதையுடன் கலந்து வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து சூடோமோனஸ் ப்ளோரோங்சென்ஸ் 5% உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 500 கிராம் /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உரமிடுதல்

  1. லுபினுடன் பசுந்தாள் உரத்தை பயிரிடும் 15 நாட்களுக்கு முன்பு அளிப்பதால் மண்ணில் தழைச்சத்து அளவை அதிகரிக்கலாம்.
  2. நன்கு சிதைந்த தொழு உரம் 30 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
  3. கம்போஸ்ட் 5 டன்  /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
  4. மண்புழு உரம் 2.5 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
  5. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 5 கிலோ / ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
  6. மாட்டு குழம்பு உரம் 75 கிராம் /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 40 லிட்டர் நீரில் கரைத்து நிலத்தைத் தயார் செய்யும் பொழுது தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

  1. 10% மண் புழு உர தெளிப்பை விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தெளிக்க வேண்டும்
  2. மாட்டு சாணக்குழிக்குப்பையை 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 300 லிட்டர் நீரில் கரைத்து, விதைத்து 45,60,75 வது நாளுக்கு பிறகு தெளிக்க வேண்டும்
  3. மாட்டுக் கொம்பு சிலிக்கா: 2.5 கிலோ  /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்த 50 லிட்டர் நீரில் கரைத்து பயிரிட்ட 65வது நாளுக்குப் பிறகு தழைத் தெளிப்பாக  தெளிக்க வேண்டும்
  4. மஞ்சூரியன்தேயிலை சாற்றை (5%) விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்

பாசனம்: பூண்டு சாகுபடி பாசன சாகுபடியாகவும், மானாவாரி சாகுபடியாகவும், செய்யப்படுகிறது. பாசன சாகுபடியில், பயிரிட்ட அன்றும், அதற்கு பிறகு 3 நாட்களில் கழித்தும் பாசனம் செய்ய வேண்டும்.

பயிரிட்ட பின்னர் செய்யப்படும் சாகுபடி முறைகள்: மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறைகளை எடுக்கும் போது பூண்டுக் குமிழ்கள் வெயிலில் படுவதைப் பொறுத்து மண் அணைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

இலைப்பேன்

1.வேப்பஎண்ணெய் 3% தெளிக்க வேண்டும்
2.10% வேப்பங்கொட்டை சாற்ற பயிரிட்ட 45,60,75வது நாட்களில் தெளிக்க வேண்டும்
3.10%பூண்டு மிளகாய் சாற்றை தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்

வெள்ளை வண்டுகள்

  1. கோடை உழவு செய்வதால் கூட்டுப்புழு மற்றும் தாய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்
  2. விளக்குப் பொறியை ஏப்ரல்- மே மாதங்களில் இரவு 7 முதல் 9 மணி வரை வயலில் பொருத்த வேண்டும்
  3. காலை வேளைகளில் வண்டுகளை கையால் எடுத்த அழிக்க வேண்டும்
  4. 3வது நிலை வண்டுகளை ஜீலை-ஆகஸ்ட் மாதங்களில் கையால் எடுத்து அழிக்க வேண்டும்
  5. மெட்டாஹார்சியம் அனிசோபிலே 20 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்

நோய்கள்

கருகல் நோய்

அக்ரி ஹோட்ரா சாம்பலை (200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து 15 நாட்கள் வைத்திருந்து பின் 10 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்) பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

மண் வழியே பரவும் நோய்கள்

  • டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் அளிக்க வேண்டும்
  • சூடோமோனஸ் ப்ளோராஸ்சென்ஸ் 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் அளிக்க வேண்டும்

அறுவடை

பூண்டு செடியின் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக, பின் இலைகள் முழுவதும் காய்ந்து விடும். இந்த நிலையில் பூண்டுக் குமிழ்களை கைகளால் பிடுங்கி, குவித்த வைக்க வேண்டும். இலையுறைகளை குமிழ்களுக்கு அருகில் 1-2 செ.மீ. அளவு இருக்குமாறு வெட்ட வேண்டும். வேர்களையும் வெட்ட வேண்டும். பிறகு வெயிலில் ஒரு வாரத்திற்கு உலர்த்தி, அளவு மற்றும் எடையைப் பொறுத்து தரம் பிரிக்க வேண்டும்.

விளைச்சல்: 10-15 டன்கள் /ஹெக்டேர்