|| | | ||||
 

வெற்றிக் கதைகள் :: கண்டுபிடிப்புகள்

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

விவசாய வேலையை எளிதாக்கும் எந்திரங்கள்

‘பொன்னீம்’ பூச்சிக்கொல்லியின் பொன்னான வாழ்வு

விற்பனை இயக்க யுக்திகள் மூலம் அங்கக வேளாண்மையின் உயர்வு

ஓர் எளிய பயிற்சி : கன்னியாகுமாரி விவசாயிகளுக்கு மண் பானையின் மூலம்

காய்கறிகளில் வருடந்தோறும் செயல்படுத்தப்படும் பிரெட் சாண்விச் முறை தொழில்நுட்பம்  

முக்கிய தேவை : வெற்றிக்கு மதிப்பூட்டுதல் வழிவகுக்கும்

மதிப்பூட்டப்படாத பயிர் உற்பத்தி பயனற்ற உற்பத்தியாகும் 

பெண்களுக்கான - குறைந்த முதலீட்டில் அதிக வருவாய்த் திட்டம்

செய்முறை தீர்வு

மனசை மாற்றிய அசோலா


விவசாய வேலையை எளிதாக்கும் எந்திரங்கள்

 

விவசாய வேலைகளை எளிமைப்படுத்தவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்த பொறியியல் கல்லூரி, திருச்சியிலிருந்து 37கி.மீ தொலைவில் உள்ள குமுளூரில் இயங்கி வருகிறது.
பண்ணை எந்திரம் மற்றும் உயிர் சக்தி துறையின் இணைப் பேராசிரியர் ச.கணபதி அங்கே நின்றிருக்க, அவரை அணுகிய போது இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றி மலைமலையாக செய்திகளைச் சொன்னார்.
விவசாயிகளின் வேலையைக் குறைக்க புதிய கருவிகளைக் கண்டுபிடித்து வருகிறோம். வெளிநாடுகளில் பெரும்பாலும் கருவிகளை நம்பித்தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதுபோன்று இங்கும் வரவேண்டும். தமிழ்நாட்டுக்குத் தக்கப்படிதான் நாங்கள் கருவிகளை வடிவமைத்து வருகிறோம் என்று சொல்லியபடியே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கருவிகளைக் காட்டி விரிவித்தார்.

நேரடி நெல் விதைப்புக் கருவி:

இந்தக் கருவியின் மூலம் நெல் விதைகள் நேரடியாக விதைத்து விடலாம். இரண்டு உருளைகள் கொண்ட இக்கருவியில் துளைகள் வழியாக நெல் விதைகள் சீராக வெளிவந்து நிலத்தில் விழும் இதைப் பயன்படுத்துவதன் மூலம் வேலை யாட்களின் தேவை 30% குறைகிறது. இக்கருவியைப் பயன்படுத்துவதால் மாசூலில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆட்களைக் கொண்டு நடவு செய்யும் முறைக்கு இணையாக மகசூல் கிடைக்கிறது. இக்கருவியின் விலை ரூ.4,000 ஒரே நாளில் ஹெக்டேர் நிலத்தில் விதைக்கலாம்.

நாற்று நடும் கருவி:

இந்தக் கருவியின் மூலம் எட்டு வரிசைகளாக நடவு செய்யலாம். வழக்கமான பாணியில் அல்லாமல், பாய் முறையில் நாற்றுகள் தயாரிக்க வேண்டும் (பாலிதீன் பேப்பரின் மீது மண்கொட்டி, அதன் மீது விதைகளை தூவவேண்டும். வளர்ந்த பிறகு கேக், கேக்காக வெட்டி இயந்திரத்தில் பொருத்தவேண்டும்). இக்கருவியை பயன்படுத்துவதால் ஆள் தேவை 75% குறைகிறது. செலவும் 50% குறைகிறது. ஒரு நாளைக்கு 1.5 ஹெக்டேரில் நடலாம். இக்கருவியின் விரை ரூ.1,50,000.

கூம்பு உருகைக் களையெடுக்கும் கருவி:

நாற்று வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் முன்னும் பின்னும் இக்கருவியை இழுத்து இயக்குவதன் மூலம் களைகள் சேற்றுக்குள் திணிக்கப்படும். களைகள் மட்கி பயிருக்கு உரமாக்கிவிடும். கோனோ வீடர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இக்கருவியின் விலை ரூ.900 ஒரு நாளைக்கு அரை ஹெக்டேரில் களையெடுக்கலாம்.

சிறுமரங்களின் வேர் அகற்றும் கருவி:

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கருவேலம், காட்டாமணக்கு, மஞ்சனத்தி போன்ற மரங்கள், களைகளாக வளர்ந்து நிலச் சீரமைப்புப் பணிகளுக்குச் சவாலாக இருந்து வருகின்றன. இம்மரங்களின் கட்டைகளை வெட்டி அடுப்பெரிக்க கொண்டு செல்லும் விவசாயிககள் இவற்றின் வேர்களை அகற்ற அதிக ஆற்றலை வீணடிக்க வேண்டியிருக்கிறது. அதிக ஆட்களைக் கொண்டு அதிக செலவில் வேர் மூடுகளை அகற்றி வருகின்றனர். இதனால் நேரமும் அதிகமாக விரயமாகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக டிராக்டரால் இயக்கப்படும் வேர் அகற்றும் கருவி வடிவமைக்கப்பட்டது. இந்தக் கருவி ‘V’ வடிவம் கொண்ட எஃகு இரும்பிலான கூரிய ஈட்டி போன்ற தகடு கொண்டுள்ளது. இதைத்தவிர அடிமண் தளர்த்தி என்றொரு கருவியும் உண்டு. இந்த இரண்டையும் டிராக்டரில் பொருத்தி பயன்படுத்த வேண்டும். அடிமண் தளர்ததி மூலம் மண்ணுக்குள் இருந்து வேர் மூட்டினை எளிதாக பெயர்த்து எடுத்துவிட முடியும். வேர் முடிச்சுகள் இல்லாத தனி ஆணிவேர் கொண்ட மஞ்சனத்தி போன்ற மரங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
2 முதல் 3 நிமிடங்களில் ஒரு வேர் மூடு அகற்றப்பட்டுவிடும். 5 முதல் 25 கிலோ எடையுள்ள வேர் மூடுகளை இக்கருவியின் மூலம் அகற்றலாம். இந்தத் தகட்டின் விலை ரூ.500 மொத்தமாக அடிமண் தளர்த்தியுடன் சேர்த்து ரூ.10,500.
விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் இயக்குவது குறித்த பயிற்சியும் இங்கு கொடுக்கப்படுகிறது.

தொடர்புக்கு:
முதல்வர், வேளாண் பொறியியல் கல்லூரி,
குழுளூர்,
திருச்சி.
அ.கு.எண்.621712
தொலைபேசி: 0431-2541218.


‘பொன்னீம்’ பூச்சிக்கொல்லியின் பொன்னான வாழ்வு

 

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகேயுள்ள கொழுமண்ணிவாக்கம் கிராமம் முழுக்கவே ‘பொன்னீம்’ பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி பலன் கண்டு வருகிறது. கிராமத்தைச் சேர்ந்த ‘டான்வா பண்ணை மகளிர் குழு’ என்ற அமைப்பின் தலைவி உமாமகேஸ்வரி அதைப்பற்றி மகிழ்ச்சி பொங்க நம்மிடம் பேசினார்.
நடவு நட்ட ரெண்டாவது மாதம் வெள்ளை தத்துப் பூச்சியும், குருத்துப் புழுவும் அதிகமாக இருந்தது. சரி லயோலா காலேஜ் மருந்தை அடித்துத்தான் பார்ப்போமென்று அடித்தேன். பயிருக்கு எமனா இருந்த எல்லா பூச்சி, புழுவும் மூணாம் நாளே செத்துப் போயிவிட்டது. ஏக்கருக்கு 35 மூட்டை நெல்லும் விளைந்தது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகேயுள்ள வயலாநல்லூர் கிராமத்தில் கத்திரி விவசாயத்தை பிரதானமாக செய்து வரும் ரவி “ஒரு நாள் காலையில் 8மணி இருக்கும்.

தயாரிப்பது சுலபம்:

இந்த பொன்னீம் தயாரிப்பு மிகமிக எளிதானதாகவே இருக்கிறது. வேப்ப எண்ணெய் 45%, புங்கன் எண்ணெய் 45%, சோப்புக் கரைசல் (ஒட்டும் திரவம்) 10% ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, நன்கு கலக்கினால் உடனடியாக பொன்னீம் தாயர்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். 10 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாக கலந்துவிடும் மிண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கருக்கு ஒன்றறை லிட்டர் வரை தேவைப்படும்.
பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

அசுவினி:

இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.

காய்த் துளைப்பான்:

தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.

படைப்புமு:

இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப் புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்தது போல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.
நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.


விற்பனை இயக்க யுக்திகள் மூலம் அங்கக வேளாண்மையின் உயர்வு

 

பயிர் சாகுபடி செய்ய அங்கக வேளாண்மை குறைந்த முதலீட்டியான தொழில்நுட்பமாயினும், சில விவசாயிகள் அங்கக பயிர்களை வியாபாரப்படுத்த முடியாமல் உள்ளனர்.
தேவையான, விற்பனை வழிகள், சரியான அரசு வழிகாட்டுதல் போன்றவற்றின் பற்றாக்குறை காரணமாக, அங்கக பொருட்களின் விலை மிகக் குறைந்தே காணப்பட்டது. ஆனால் இன்று, மூன்று ரூபாய் முதல் நான்கு ரூபாய் வரை ஒரு கிலேவிற்கு அதிகமாகவுள்ளது. இது இராசாயன பொருட்களை கொண்ட சாகுபடி செய்வதை காட்டிலும் அதிகமாகும்.

உதகமண்டலத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, (Meerkeri) மீகீரி கிராமம், இது (அங்கக கிராமம் அல்லது) இயற்கை கிராமம் என்றே அழைக்கப்படுகிறது. ஆயினும் இங்கும் அதே சந்தைப் படுத்தும் முறைகளில் இவர்களுக்கு பிரச்சனையுக்கது.

உயிர கிராமம்

இக்கராமத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், வணிக தோட்டக்கலை நிலையமும், மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டமும் ஒருங்கிணைந்து பொறுப்பேற்றுள்ளது.
இங்குள்ள விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மையின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. பஞ்சகாவ்யா (panchagavya), தசகாவ்யா (Dasagavya), உயிர் ஆற்றல் மக்கரம் (Biodynamic compost), மண்ப்புழு உரம் (vermicompost), பாஸ்போபாக்டீரியா (phosphobacteria), கெள பேட் பிட் அசேஸ்பைரில்லம் (cow pat pit Azospirillum), உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடர்மா வீரைட் (Trichoderma viride) மற்றும் சுடோமோனஸ   புளோரோசன்ஸ்     (pseudomonas fluorescens) போன்ற  ஈடுபொருட்களை இந்நிலையங்களே பயிர்  வளர்ச்சிக்கு  வழங்குகிறது.

அதிக சாகுபடி

இதன் மூலம் இராசாயன உரங்களை காட்டிலும் இம்முறையில் 5 - 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக திரு. M . சேகர் என்ற விவசாயி கூறினார். ஆனால் உண்மையான பிரச்சனை யாதெனில், வியாபார வழிகளில் நாம் பின்னடைந்துள்ளோம். மேலும், தயாரைிக்கப்பட்ட பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. சில அரசு சாரா நிறுவனங்கள் இந்த பொருட்களை வாங்க முற்பட்டபோதும், அதற்கு தகுந்த பணத்தை அவர்கள் தருவதாக எந்த உறுதியுமில்லை.

அங்கக கூட்டமைப்பு

இந்த சூழ்நிலையில், அக்கிராம மக்கள் முனைவர். செல்வராஜ் - ன் வழிகாட்டுதல், அங்கக விவசாயிகள் சங்கத்தினை அணுகி, அங்கக வேளாண்மை தொடர்பான விஷ்யங்களையும், இந்து செய்தித்தாள் மூலமாக வியாபார வழிகளையும் அறிந்து மீகீரி விராமத்தின் வியாபார வழிகளை மேம்படுத்தினர்.
“அச்சங்கத்தின் பிரதினிதிகள் உடனடியாக வந்து அக்கிராமத்தை பார்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளுடன் உரையாடினர். அவர்கள் விவசாயிகளின் பொருட்களில் திருப்தி அடைந்து, முற்பணம் கொடுத்து, அங்கக பொருட்களை பெற்று கொண்டார்” இவ்வாறு திரு. M. சேகர் கூறினார்.

நஞ்சில்லா உணவு

அங்கக விவசாயிகள் சங்கத்தில் கிட்டத்தட்ட நாடு முழுவதும் 10,000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் 200 கிளைகள் கொண்டு, “நஞ்சில்லா உணவு” என்னும் வர்த்தக குறிப் பெயரில் தங்களது பொருட்களை சற்தைப் படுத்துகின்றனர்.
விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசு செயல்படும் முறைகளை அங்கக விவசாயிகளுக்கு நாடு முழுவதும் ஏற்படுத்தலாம். மேலும் அங்கக விவசாய முறை குறைந்த செலவுத்திட்டத்திலானது, இடர் இல்லாத விவசாய முறை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இம்முறை விவசாயிகளுக்கும், சுற்றுப்பரத்திற்கும் சல்ல தாக்கத்தை அளிக்கிறது.

தொடர்புக்கு
திரு. M .சேகர்,
மீகீரி, (Meerkeri),
B. மணிகாட்டி அஞ்சல் (B.Manihatty p.o.,)
நீலகிரி  (The Nilgris)
மற்றும்
திரு. R. ரங்கநாதன்,
16, வணிகர தெரு,
திருப்போரூர் (Thirupporur),
தமிழ்நாடு - 603110.
மின்னஞ்சல் : tedetrust@rediffmail.com
தொலைபேசி : 044 - 27478669
044 - 27446793
அலைபேசி : 94433 – 46369


ஓர் எளிய பயிற்சி : கன்னியாகுமாரி விவசாயிகளுக்கு மண் பானையின் மூலம்

 

மிழ்நாட்டின் கன்னியாகமாரி மாவட்டம், கோழிக்கோடு பொதையை (Kozhikodupothai) சார்ந்த விவசாயிகளிடையே, பூச்சி விரட்டி மற்றும் பயிர் வளர்ச்சிக்குரிய உருவகங்கள் பாரம்பரியமாக இருந்துள்ளது.
அவ்வாறான பாரம்பரிய முறையான, “மண்பானை செடித் தைலம் (manpannai sedi thailam)” செடிகள் வளர்ச்சிக்கு தேவையான சத்தினை தருவதுடன் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

வயல் பரிசோதனை

முதலில் பரிசோதனைக்காக ரோஜா சாகுபடியாளர் செல்வி. S. தங்கம் அவர்களின் நிலத்தில் ஒரு சிறு பகுதியில் மேற்கொண்டனர். இது இரசாயன கூடுதலாக, இவரது ரோஜா செடிகளுக்கு பஞ்சகாவ்யாவும் உபயோகிக்கப்பட்டது. மண் பானை உருவங்களில் ரோஜா செடிகளை வளர்ப்பதன் மூலம் பெரிய அளவு பூக்களாகவும்ஈ அதிக சாகுபடியுடன் நல்ல வளர்ச்சியை அளிப்பதாகவும் பூக்கள் நல்ல நிறத்துடன், அதிக வைப்பு திறன் பொண்டதாக இருக்கிறது என்று செல்வி. தங்கம் கூறுகிறார். மேலும் பூக்கள் பறித்த 2 முதல் 3 நாட்களுக்கு புதியதாகவே உள்ளதாகவும் கூறுனார்.

இயற்கை வேளாண்மை

லண்டனில் நடந்த ஏஷ்டன் விருது வழங்கும் விழாவில், விவேகானந்தா கேந்தர - இயற்கை வள மேம்பாட்டுத்திட்டத்தின் நிகழ்படம் ஒன்றில் செல்வி. தங்கம் இயற்கை வேளாண்மை மூலம் உணவு உற்பத்தியை பெறுக்குவது குறித்த கருத்து பறிமாற்றத்தில் இடம்பெற்றார்.
இவரது புதிய முயற்சி, அனைத்து விவசாயிகளையும் ஊக்குவிக்கும் விதமாக அமைத்தது.
ஆரம்ப காலத்தில், விருப்பமில்லாமல் இரசாயன உரங’களை நிறுத்திவிட்டு, குறைந்த அளவு நிலத்தில் இயற்கை உரங்களை கொண்டு பரிசோதித்தனர். ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைத்த பொருளாதார பயன்களை மனதில் கொண்டு, இயற்கை வேளாண்மையை பின்பற்ற ஆரம்பித்தனர். எடுத்துக்காட்டாக, செல்வி. தங்கம், இரண்டு வருடத்திற்கு முன்பு, ஒரு ஏக்கர் ரோஜா சாகுபடிக்கு 3500 ரூபாய் செலவிட்டுயிருக்கிறார். ஆனால் இன்று ஒரு ஏக்கருக்கு 1300 ரூபாய் மட்டுமே செலவிடுகிறார்.

குறையும் செலவுகள் :

மண் பானை முறையில் இயற்கை விவசாயம் மேற் கொள்வதன் மூலம் பெருமளவு செலவு குறைவதாக செல்வி. தங்கம் கூறுகிறார். ஓய்வு பெற்ற வேளாண் அலுவலரும், தலை சிறந்த இயற்கை வேளாண் விவசாயியும் ஆன திரு. முருகன் அவர்கள் இம்மண் பானை முறையை முன்னேற்றியவர் ஆவார். மேலும் மத்திய பிரதேசத்தின் பயிற்சியான பாரம்பரிய உருவகம் ஒன்றை இப்பகுதியின் மக்கள் உபயோகிக்கும் முறையில் மேம்படுத்தினார் என்று திரு. அரவிந்தன் சமூக விஞ்ஞானி விளக்கினார்.
செல்வி. தங்கம் அவர்களின் ரோஜா தோட்டத்தில் இம்முறை பரிசோதனை முடிந்தவுடன், மற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சியளிக்கவும் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த தைலத்தை தயாரிக்க தேவையானதாக திரு. அரவிந்தன் கூறுவது வேம்பு, எருக்கு, நொச்சி ஆகியவை சுமார் 50 கிராம் பொடி செய்த பயிறுவகைகள் (ஏதேனும் ஒரு பயிறு), 1 லிட்டர் தயிர் அல்லது அடர்த்தியான மோர், 1.5 லிட்டர் தண்ணீர் ஆகியவையாகும்.

முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கி கொள்ளவும், அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயையை ஒரு துணியை கொண்டு மூடிவிடவேண்டும்.
பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15 - 20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்கப்பட வேண்டும்.
இதனை தெளிக்கும் நேரம் மிக முக்கியமானது. அதிகாலை நேரத்திலும், அந்தி சாயும் மாலையிலும் இதை தெளிக்க சிறந்ததாகும்.

கட்டுப்பாடு முறைகள் :

இதை தெளிப்பதன் மூலம் பல பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு, செடிக்கு நல்ல ஊட்டச்சத்து தருவதுடன் நல்ல வளர்ச்சியையும் அளிக்கிறது. இயற்கை இடுபொருட்கள் பல்வேறு பயன்களை தரவள்ளது. இது ஈடுபொருள் செலவினை குறைப்பதுடன், சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கிறது.
“இரசாயன உரங்களை உபயோகிக்கும் நிலத்தினையும், இயற்கை ஈடுபொருட்களான பஞ்சகாவ்யா, மண்புழுஉரம் போன்றவற்றை உபயோகிக்கும் நிலத்தையும் ஒப்பீட்டல் பார்க்கையில், இயற்கை உரம் உபயோகிக்கும் நிலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இயற்கை உரம் உபயோகித்த நிலத்தில், அதிக மண்ப்புழு, எறும்பு, மரவட்டை போன்ற உயிரிகள் காணப்படும்” என்று திரு. அரவிந்தன் விளக்குகிறார்.

பயனுள்ள உயிரிகள் :

விவேகானந்தா நிலையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் பல தரப்பட்ட நிலத்தில் மண்புழு மற்றும் எரும்புகளின் இருப்பு குறித்து கணக்கிடப்பட்டது. இதன் மூலம் இராசாயன உரங்கள் உபயோகிக்கப்பட்ட நிலங்களில் தொந்தரவு செய்யப்பட்டது. சில நிலங்களில் இவ்வாறான உயிரிகள் சிறிதும் இல்லாமலும் இருப்பது கண்டறியப்பட்டது.
சில விவசாயிகள் இதன் பின், இயற்கை விவசாய முறைக்கு மாறினர், இப்போது அவர்களது நிலத்தில் உயிரிகளை பார்க்க முடிந்தது.

தொடர்புக்கு :
திரு. S. அரவிந்தன்
மின்னஞ்சல் : ngc_vknardep@sancharnet.in
vknardep@gmail.com 
அலைபேசி :  9443748714
தொலைபேசி : 04652246296
04652247126.


காய்கறிகளில் வருடந்தோறும் செயல்படுத்தப்படும் பிரெட் சாண்விச் முறை தொழில்நுட்பம்  

 


பழப் பயிர்களை காட்டிலும், காய்கறிகளின் ஆயுட்காலம் மிக குறைந்ததாகும். வேண்டுமானால் நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஈடுபொருட்களின் மூலமாக இதன் ஆயுட்காலத்தை நீடிக்கலாம்.
எளிமையான காய்கறி வளர்க்கும் முறைகளை வருடம் முழுவதும் பின்பற்றுனோமானால், விவசாயிகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும். இது நவீன தொழில்நுட்பங்களோ, விலை உயர்ந்த உபகரணங்களோ அல்லது ஈடுபொருட்களிலோ இல்லாமல் விவசாயிகள் நன்கு பயிர் சாகுபடி செய்ய உதவும்.
முனைவர் G. நம்மாழ்வார், இயற்கை விஞ்ஞானியான இவர் “பிரட் சாண்விச்” முறையை பின்பற்ற, நிலம் நன்கு பக்குவப்படுத்தி தயார் அசய்தபின், பரிந்துரைக்கப்படும் செயல் முறைகளை பின்பற்றுவேமானால், ஒருவர் மீண்டும் இரண்டாம் முறையாக நிலத்தை பக்குவப்படுத்த தேவையில்லை என்று கூறுகிறார்.

நல்ல / அதிக சாகுபடி :

சாண்விச் முறை பெயர் விளக்கம் ? நாம் உண்ணும் சாண்விச்சில் காய்கறிகளையும், முட்டைகளையும் இரண்டு ரொட்டியின் நடுவே வைத்து உண்கிறோம். அதேபோல் தோட்டக்கலையில் அதிக சாகுபடி பெற இம்முறை பயன்படுகிறது. இங்கு மேல்தட்டு மண்ணிற்கும், அடிதட்டு மண்ணிற்கும் இடையில் கலப்பு உரம் போடப்படுகிறது. அதிக செயல்பாட்டுக்கு, கலப்பு உரத்திற்கு பதிலாக கரித்துண்டுகளையும் பயன் படுத்தலாம் என்று முனைவர் நம்மாழ்வார் கூறுகிறார்.
அதன்படி, சத்தான உணவிற்கு, வளமான, ஆரேக்கியமான மண் அடிப்படையானதாகும்.
நுண் உயிர்களை உண்பதன் மூலம் மண்ணின் நீர்பிடிப்புத்தன்மையை அதிகப்படுத்தி ஒளிச் சேர்க்கையை கொண்டு அதிக சூரிய வெப்பத்தை கிரகிப்பதன் மூலம், அதிக மகசூலை அடையலாம். இம்முறையை பின்பற்றுவதே, “மண் சாண்விச்சிக் முறையாகும்”. மேற்தட்டு மண்ணாணது இடைத்தட்டு மண்ணை விட, இறுகி போகாமல் அதிக நுண்ணுயிருகள் வளர உதவுகிறது. கோதுமை மற்றும் முள்ளங்கியின் வேர்கள் 6.0 செண்டி மீட்டறுக்கு ஆழமாக வளரும்.

ஆரோக்கியமான நிலத்திற்கு :

வளமான நிலத்திற்கு முக்கியமாக நுண் உயிரிகள் சுமார் 60 செண்டிமீட்டர் (centimeter) ஆழம் வரை காணப்பட்வேண்டும். இதே சமயம், மேல்தட்டு மண் புதைக்கப்படாமல் விவசாயிகள் பார்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு முதல் படியாக, மேல்தட்டு மண்ணை எடுத்து தனியாக ஓர் இடத்தில் வைத்துவிட்டு இரண்டாவது படியாக அதன் அடி மண்ணை இரண்டாக பிரிக்கலாம்.
மூன்றாவது நிலையாக, நெருக்கமாக கலப்பு உரத்தினை பிரிவுபடுத்தி இடவேண்டும்.
இவை முடிந்தவுடன், தனியாக வைக்கப்பட்டுள்ள மேல்தட்டு மண்ணிணை உரத்தின் மீது போடவேண்டும். இவ்வாறு முனைவர். நம்மாழ்வார் கூறினார். இம்முறையை “மண் சாண்விட்சிங் “ என்றும் கூறுவர்.
முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை ஓரங்களில் பயிரிடலாம். காய்கறிகளான தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் மற்றும் மிளகாய் ஆகியவற்றுக்கு அதிக இடைவெளி விட்டு பயிரிடவேண்டும்.

ஓர் வகை பயிரிடுதல் - தவிர்க்க :

ஓரே வகை பயிரிடுதலை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஓர் குடும்பத்தைச் சார்ந்த செடிகள் வெளிச்சம், தண்ணீர், சத்துணவு போன்றவற்றிக்கு போட்டியாக நேரிடும். விவசாயிகளுக்கு தொடர் பயிரிடும் முறை பரிந்துரைக்கப்படுகிறது. இம்முறையில் பயிரிட பட்டிருக்கும் செடி வெளிரும் முன் அடுத்த வெடியை நடுதல் அல்லது விதையை விதைத்தலாகும்.
அறுவடைக்கு பின் அச்செடிகளின் தழைகளை வெட்டி நிலத்திலேயே போட்டு விடவும். இது இயற்கை ஈடுபொருளாக மாறி நல்ல தரத்தையும், அதிக அளவு சாகுபடியையும் தரும்.
தடுத்த பிணைப்பு :
ஒருவரின் அனுபவத்தின் மூலம் சிறந்த பிணைப்பினை கண்டறியலாம். கண்ணி விதியின் படி பயிறு வகைகளும் அதன் அடுத்து பயிறற்ற வகைகளையும் விதைக்க வேண்டும்.
பாத்தியின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதன் அகலம் சுமார் 120cm இருக்குமாறு அமைக்க வேண்டும்.
ஒரு தனி மனிதருக்கான ஒரு நாளைய காய்கறி தேவைக்கு 1.2 மீட்ர் * 7.5 மீட்டர் பாத்தி போதுமானதாகும். அதாவது 200 கிராம் காய்கறிகளாகும். செடிகளுக்கு தெளிப்பு நீர் அல்லது பூ வாளி அல்லது பிளாஸ்டிக் குழாய்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு நீர் பாசானம் செய்ய வேண்டும். ஏனெனில், இவைகள் தாம் மழைத்தூறல் போன்ற விளைவினை ஏற்படுத்தும்.
பாத்திரங்கள் சுத்தம் செய்த கழிவு நீர், தரையை சுத்தப்படுத்திய நீர், இவற்றையும் செடிகளுக்கு பாசானம் செய்ய பயன்படுத்தலாம்.
செடிகளுக்கு நீர் பாய்ச்ச, மாலை நேரமே சிறந்ததாகும் என்று நம்மாழ்வார் கூறகிறார்.

குறைந்தபட்ச வருமானமாக :

இம்முறையை கடைபிடிப்பதன் மூலம், ஐந்து பேர் உள்ள குடும்பத்திற்கு வருடத்திற்கு 25 செண்டில் (cents) காய்கறிகள் பயிரிடலாம். இது வருடம் முழுவதும் குறைந்தளவு வருமானம் ஈட்டி தரும்.
தற்போது இந்தியா முழுவதுமாக சுமார் 2500 விவசாயிகள், இம்முறையை பின்பற்றுபின்றனர்.

தொடர்புக்கு :
முனைவர். G. நம்மாழ்வார்,
மின்னஞ்சல் : nammalvar @gmail.com
அலைபேசி : 9442531699.


முக்கிய தேவை : வெற்றிக்கு மதிப்பூட்டுதல் வழிவகுக்கும்

 

வேலையாள் பற்றாக்குறை, தொடர்ந்து அதிகரிக்கும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளின் விலை, வியாபாரம் செய்யும் வழிகள், சரியான விலை நிர்ணயத்தில் வழிகாட்டுதல் இல்லாமை, சாகுபடி செய்த பொருட்களின் சந்தைப்படுத்தும் முறை போன்று பல பிரச்சனைகள் அதிகரித்து கொண்டேயுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் குறைத்த மற்றும் நிரந்தர வருவாய் இருந்தாலும் போதும் என்று கருதுகின்றனர். இப்போது குறைந்த முதலீடு நல்ல எதிர்பலன் ஆகியவையே முக்கிய சிந்தனையாகவுள்ளது. இதன் பின்விளைவாக, பல சிறு விவசாயிகள் காளான் சாகுபடியை தொடங்கினர். இவ்வகை விவசாயத்தில் குறைந்த முதலீட்டில் அதிக பயன்கள் பெறமுடியும்.

இலாபகரமான முறை :
திரு. ஜார்ஜ் தாமஸ், 4.5 ஏக்கர் நிலமுடைய சிறு விவசாயி இவர் பல்வகையான பயிர்களை இவரது நிலத்தில் வளர்க்கிறார். ஆனால் காளான் வளர்ப்பில் மிகவும் ஆர்வமுற்றார். தற்போது குறைந்த முதலீட்டில் அதிக பயன்களை தரும் வகைகளையே விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனர்.
இயற்கை காளான் சாகுபடியில் இவரே எடுத்துக்காட்டாவார். இவர் விருப்பமுள்ள பிற விவசாயிகளுக்கு, இதில் பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறார். முதலில் ப்ளுரோடஸ் சஜர்கஜி என்னும் காளான் வளர்த்தார். இதற்கு கூட்டுறவு வங்கியில் ருபாய் 1 லட்சம் வங்கி கடன் பெற்று, கொட்டகை அமைத்து, மேம்படுத்தினார். காற்றோட்டத்திற்காக, நன்கு சன்னல்கள் சமமபன இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டது. கூடுதலாக, கொசு வலையும், சன்னல்களின் வழியாக பூச்சிகள் வருவதை தடுக்க போடப்பட்டது.

வெப்பத்தை குறைக்க :
மேற்கூரை ஓடுகளில் வெய்யப்பட்டு, அதன்மேல் பச்சை நிழற் வலை விரிக்கப்பட்டது. கூரையின் கீழ், மேலும் வெப்பத்தை குறைக்க தென்னங்கீற்றுகள் அமைக்கப்பட்டது.
ஒரு அங்குலமுள்ள ஜல்லி கற்கள் கொண்டு தளம் அமைக்கப்பட்டு அதற்கு தினமும் தண்ணீர் தெளிக்கப்பட்டு, ஈரப்பதம் பராமரிக்கப்பட வேண்டும். பின் இதில் 600 பைகள் அமைக்கப்பட்டது.
இரண்டாவதாக, தமிழ்நாடு வேளான் பல்கலைக் கழகத்தின் மூலம் வெளியிடப்பட்ட கோ 2 ரக வகையை, கொட்டகையின் கீழ் தொங்கும் பைகள் அமைத்து, அங்கு காளான் வளர்க்கும் ஊடமாக வைக்கோல் வைக்கப்பட்டது. இங்கு தேவையான அனைத்து வேலைகளையும் இவர்கள் செய்துகொள்கின்றனர். வைக்கோலில் கிறுமி நீக்குதல், அதை பைகளில் நிரப்புதல், காற்றின் ஈரப்பதத்தை பராமறிக்கும், கொட்டகையின் கீழ் தண்ணீர் தெளித்தல் போன்ற அனைத்தும் இவர்களாகவே செய்து கொள்ளப்படுகிறது.
தற்போது திரு. ஜார்ஜ் (George) அவர்கள் தினமும் 5 கிலோ காளான் சாகுபடி செய்கிறார்.

வியாபார முறைகள் :
திரு. ஜார்ஜ் எப்படி அவரது பொருட்களை சந்தைப்படுத்துகிறார் ? உள்நாட்டு சந்தையில், ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து, ஒரு நாளில் 500 ரூபாய் சம்பாதிக்கிறார். இவ்வாறாக 2006 - ல் 15,000 ரூபாய் நிகர வருமானம் அடைந்தார். 2007 - ஆம் ஆண்டில் 25,000 ரூபாய் நிகர வருமானமாக பெறுகிறார்.
கூடுதலாக, புதிய àய காளான்களை கொண்டு ஊறுகாய் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். இம்மதிப்âட்டப்பட்ட காளான் ஊறுகாய்கள் ஐக்கிய நாடுகளுக்கும், வலைகுடா நாடுகளுக்கும் 300 கிராம் பாட்டில்கள் ஏற்றுமதி செய்கிறார்.

வர்த்தக குறிப்பெயர் :
ஆயுர் காளான்கள் என்னும் பெயரில் 10 பேர் கொண்ட ஒரு விவசாய குழு, இதை வியாபாரப்படுத்துவதாக கேரளாவின் கோழிக்கோடு, இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி கழகத்தை சார்ந்த தலைமை விஞ்ஞானி, முனைவர் T.K. யாகோப் கூறுகிறார்.

தொடர்புக்கு :
திரு. ஜார்ஜ் தாமஸ்,
பளைக்க வயல் வீடு,
களங்கலி,
அத்தியோடி அஞ்சல்,
கூராசள்,
கோழிக்கோடு, கேரளா.
மற்றும்,
முனைவர் T.K. யாகோப்,
முதன்மை விஞ்ஞானி,
இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம்,
கோழிக்கோடு,
கேரளா - 673012.

மின்னஞ்சல் : Jacob tk@spices.res.in
அலைபேசி : 09447539967


மதிப்பூட்டப்படாத பயிர் உற்பத்தி பயனற்ற உற்பத்தியாகும் 

 

விவசாயிகள் வருவாயை அதிகப்படுத்தும் வழிகளை  தேடிக்கொண்டுள்ள சமயங்களில், பதட்டப்படாத மற்றும் இறுதி நிலை விவசாயிகளுக்கு, உள்ளூர் மதிப்பூட்டால் மற்றும் வேளான் உணவு உற்பத்தி முக்கியமானதாகும். இது விவசாயத்தின் எதிர்பலனை காட்டிலும் புதிய விற்பனை வழிகளை இம்மதிப்பூட்டுதல் ஏற்படுத்துவதுடன், விவசாயிகளுக்கு ஓர் அங்கீகாரத்தை பெற்று தருகிறது. மேலும் மதிப்பூட்டல் காரணமாக, வருடம் முழுவதும் அப்பொருட்களில் கிடைக்கும் தன்மை இருக்கிறது.

உள்ளூர் பொருளாதாரம் :
வழக்கமாக, மதிப்பூட்டலுக்கு தேவையான இருபொருட்கள், வேலை ஆட்கள் ஆகியவை உள்ளூரிலேயே பெறப்பட்டு, அப்பொருள் மதிப்பூட்டப்பட்ட பின் உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மூக்கியமாக இதில் பெறப்படும் வருவாய், உள்ளூர் பொருளாதார சூழ்நிலையிலேயே சுழன்று கொண்டு இருக்கும். உற்பத்தியில் வளர்ந்து வரும் பதப்படுத்தும் வசதியானது. பல இடுபொருட்களை குறைந்த விலையில் தருவதுடன், பல மக்களுக்கு வேலை வாய்ப்பையும் தருகிறது.

பதப்படுத்தும் மையங்கள் :
கிராமப்புறங்களில் அறுவடைக்கு பின் பதப்படுத்துதல் மற்றும் பிற பிரச்சனைகளின் காரணமாக, அறுவடைக்கு பின் பதப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்ந்த வேளான் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பின் சார் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகளும், பெங்கæர் காந்தி வேளான் அறிவியல் நிலையமும் இணைந்து கிராமப் புறங்களில் பின் சார் மையங்கள் அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
முனைவர். B. ரங்கண்ணா கூறகையில், பின் சார் தொழில்நுட்ப மையமே, “வேளான் - பதப்படுத்தும் மையங்கள் அமைத்ததில் நாட்டின் முன்னோடி” என்று கூறுகிறார்.
தெற்கு கர்நாடகத்தில் மட்டும் தற்போது 16 மையங்கள் நிறுவப்பட்டு, உற்பத்தி பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர பொண்கள் சமய உதவிக் குழுக்களின் மூலம் மேலும் 6 மையங்கள் நிர்வாகிக்கப்படுகிறது. இதில், அங்குள்ள கிராமங்களின் பயிரிடுகலுக்கு தகுந்தவாறு தேவையான பின் சார் பதப்படுத்தும் கருவிகள் உள்ளன. இவை அனைத்து மையங்களும் பல்வேறுபட்ட நிதிவுதவி மையங்களின் மூலமாக உதவி செய்யப்பட்டு விவசாய கூட்டுறவு சங்கம், கிராம பஞ்சாயத், இளைஞர் சங்கம் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது.

இறுதி நிலை இலாபம் :
இக்கருவிகளை வைக்க விவசாயிகளே ஓர் இடத்தை முடிவு செய்து, அதை வாடகைக்கு கொடுத்துள்ளனர். பொருட்களின் விலை பட்டியல், வரும் இலாபத்தை பொறுத்து விவசாயிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. இம்மையங்கள் வேலை வாய்ப்பு வழங்குவதுடன் வருடம் முழுவதும் லாபம் தரக்கூடியதாக இயங்குகிறது.
அங்குள்ள விவசாயிகளுக்கும், குழுக்களுக்கும், நமது அறிஞர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும் பெண்கள் குழுக்களுக்கு, மதிப்பூட்டல் குறித்த பல பயிற்சிகளை பல்வேறு பொருட்களுக்கு அழிக்கப்படுகிறது.
பெண்கள் சுய உதவிக் குழுகள் அனைத்தும் உள்ளூரில் கிடைக்க்கூடிய அடுபொருட்களை கொண்டு குறைந்த செலவில் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் மக்களின் புரத - கலோரிகள் அதிகரிக்க உதவுகின்றனர். இதற்கு ஒவ்வொரு குழுக்களுள் இருந்தும் ஒவ்வொருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மதிப்பூட்டல் பொருட்களின் பயிற்சியளிக்கப்படுகிறது.
மூலப் பொருட்கள் :
தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருளானது, அந்த இடத்தில் கிடைக்க கூடிய மூலப் பொருட்களை சார்ந்ததாகும். மேலும் அதை உபயோகிக்கும் மக்கள் மற்றும் அருகாமையில் உள்ள சந்தையை சார்ந்ததாகும்.

தொடர்புக்கு :
முனைவர். B. ரங்கண்ணா,
பேராசிரியர் மற்றும் பொறியியர் ஆராய்ச்சியாளர்,
அறுவடை பின் சார் தொழில்நுட்ப மையம்,
வேளான் அறிவியல் பல்கலைக்கழகம்.
GKVK,
பொங்கæர் - 560065.
மின்னஞ்சல் : rangannab @gmail.com
தெலைப்பேசி : 080 - 23330153345


பெண்களுக்கான - குறைந்த முதலீட்டில் அதிக வருவாய்த் திட்டம்


மற்ற தொழில்களை காட்டிலும், விவசாயம் நிலையான நிதானமான தொழிலன்று, நிதானமற்ற சந்தை, நிலையில்லாத விலை, சாதகமற்ற வானிலை போன்ற காரணங்களினால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். இதன் விளைவாக, பெண் விவசாயிகளை ஊக்குவித்தல், பொருளாதார பாதுகாப்பினை விவசாயிகளுக்கு ஏற்படுத்துகின்றது.

முதலீடு இல்லா தொழில் :
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பயனுள்ள விவசாய பயிற்சிகளை மேற்கொள்ள, பல நிறுவனங்கள் வழிகாட்டுகின்றன. ஆனால் இதில் முதலீடற்ற நிறுவனத்தை தேர்வு செய்வதில் கவனமாக செயல் பட வேண்டும். இதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சார்ந்த திருமதி. லைசம்மா பேபியும் (Lysamma Baby) அவரது குழுவினர்களும் மண்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டனர்.
இவர்கள் அனைவரும் ஏழை விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்களது கணவர்கள் பெரும்பாலும் 90 - 100
ரூபாய் வருமானம் பெறும் விவசாய தின கூழிகளாகவே    உள்ளனர்.

வயல் வெளி ஆய்வு :
பெண்கள் அனைவரும், மண்புழு தொழில்நட்பங்களில் பயிற்சி மேற்கொள்ளுமாறு, பயிற்சி ஏற்பாட்டாளரான முனைவர் T.K. யாகோப் பறிந்துரைக்கிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களான இவர்கள் ஒரு சுய உதவிக் குழு அமைத்து கடனதவி பெற்று முன்னேறலாம் என்று அறிவுரை வழங்கினார். இதற்கு ஏற்றார் போல் “நிதி” என்னும் பெயரில் சுய உதவிக் குழு அமைத்தனர்.
இவர்களின் சார்பாக விஞ்ஞானிகளும், கிராம பஞ்சாயத்தும் துவக்க தொகையாக ரூபாய் 5000 வழங்கி, மண்புழு தயாரிப்பு பிரிவினை தொடங்கினர்.
திரு. லைசமா அவர்களின் நிலத்தில் இத்தயாரிப்பு பிரிவினை கட்டமைத்தனர் இங்கு 4 மண்புழு தொட்டிகள் அமைத்து அதை சுற்றி எறும்பு குழிகள் இருக்குமாறு கட்டமைக்கப்பட்டது. இத்தொட்டியின் மேற்புரத்தை எலிகள், பல்லிகள் மற்றும் பறவைகள் தீண்டாதவாறு இரும்பு வலை போடப்பட்டது. மேலும் தொட்டியினை மழையில் இருந்து பாதுகாக்க கொட்டகையும் அமைக்கப்பட்டது.
தொடக்கத்தில் வளர்ப்பு இன மண்புழுக்களை வேளாண்மை அறிவியல் நிலையம் வழங்கியது. குழுவின் தலைவியான திரு. லைசமா சொந்தமாக பசு ஒன்றும், கன்று ஒன்றும் வைத்துள்ளார், இதன் மூலம் தேவையான மாட்டுச் சாணத்தை விநியோகம் செய்கிறார்.
இதன் மூலம் மூன்றே மாதங்களின் தயாரிப்பு பிரிவு செயல்பட ஆரம்பித்தது.
கழிவுகளின் பயன்பாடு :
குழுவின் உறுப்பினர்கள் தங்களது சமையல் கழிவுகள் மற்றும் பண்ணை கழிவுகளை உரம் தயாரிக்க பயன்படுத்தினர்.தினமும் 2 - 3 மணி நேரம், ஓய்வு நேரங்களில் செலவிடுகின்றனர்.
முதல் தயாரிப்பு, புழுக்களை தொட்டியில் விட்ட 60 நாட்களில் தயாரானது. 200 கிலோவிற்கும் அதிகமான உரத்தை முதலீடு மற்றும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக செலவிட்ட காரணத்தாலாகும்.
இக்குழு உறுப்பினர்கள், சிறு அளவு விவசாயமாக தென்னையின் இடையில் காய்கறிகள் மற்றும் வாழையை பயிரிட்டனர்.
பிறரை சார்ந்து இருத்தல் :
மண்ப்புழு உரத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட காய்கறிகள் உயர்வானதாகவும், உள்ளூர் சந்தையை சார்ந்து இருக்கும் நோக்கம் அகற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர். இக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறி தங்களது நிலத்திற்கு இம்மண்புழு உரத்தை மட்டுமே உபயோகிப்பதாகவும் கூறுகின்றனர். அதிகபடியாக உரம் இருப்பின் அவற்றை 8 - 10 ரூபாய் வரை ஒரு கிலோவிற்கு நிர்ணயித்து, விற்பனை செய்கின்றார். தற்போது பலர் இவர்களது தயாரிப்பினை பெற கோரிக்கையிடுகின்றனர்.
வங்கி வைப்புப்பணம் :
சொந்தமாக வருவாய் பெற்று, தற்போது வைப்புப்பணமாக 25,000 ரூபாய் வைத்துள்ளதர்க்கு மிகவும் பெருமை படுவதாக, திரு. லைசமா கூறுகிறார்.
கடந்த இரண்டு வருடங்களில் மொத்த வருமானமாக 53,514 ரூபாய் இம்மண்ப்புழு உரத்தின் மூலம் மட்டும் பெற்றுள்ளனர்.
தொடர்புக்கு :
திரு. லைசம்மா பேபி,
பரம்புகட்டில் வீடு,
செம்பநோட அஞ்சல்,
கோழிக்கோடு,
கேரளா - 673528.
மின்னஞ்சல் : jacobtk @ spices.res.in
தொலைபேசி : 0496 - 2662372.


செய்முறை தீர்வு


தரிசுநிலங்களை வளமான இடங்களாக மாற்றம் செய்முறை தீர்வுகள்.
இயற்கை வளம் மிக்க பொருளான நீரினை, நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம். இதன் விளைவாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளை போல நீரினை கண்டுபிடிக்க இயலாது, இதற்கு நாம் வான்மேகங்களை தான் சார்ந்து இருக்க வேண்டும்.
பருவமழை தோல்வி மற்றும் திடீர் கணமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பான்மையான நீர்பகுதியையும், மேற்பரப்பு மண்ணையும் அடித்து செல்கிறது. இச்சூழ்நிலை எவ்வளவு கடினமானது என்று உணருமாரு இயற்கை விஞ்ஞானி, திரு. நம்மாழ்வர் கூறுகிறார்.
நகரமயமாக்குதல், தொழிற்சாலைமயமாக்குதல் போன்ற காரணங்களால் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் தாக்கம் மழையின் மையமாகும்.

மண் ஈர்ப்புத் திறன்:
மழையினை சார்ந்து இருக்கும் ஒவ்வொரு விவசாயியும், மழையின் ஒவ்வொரு துளியையும் சேமித்து, மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும். “குறைந்த நீரீயை கொண்டு அதிக சாகுபடி செய்தல்” என்பது மட்டுமே ஒரே குறிக்கோளாகும். இக்குறிக்கோளை அடைய கலப்பு பயிரிடுதல் மரம் வளர்த்தல், விலங்கின பெருக்கம் ஆகியவை ஒருங்கிணைத்து செய்யல்பட வேண்டும்.

சரியாக திட்டமிடுதல்:

தெளிவான திட்டமிடுதல் மற்றும் குறைந்த முதலீடு மூலமாக தரிசு நிலங்களை வளம்மிக்க நிலங்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக, பயிர் முறை பாங்கினை கவனமாக கண்காணிக்க வேண்டும். விவசாயிகள், வறட்சி எதிர்பாற்றல் மிக்க பாரம்பரிய பயிர்களை குறைந்த நீர் செலவில் பயன்படுத்தலாம். ஏனெனில் பாரம்பரிய இரகங்களில் பூச்சி தாக்குதல் குறைவாகும். கூடுதலாக, சிறு குளம் அல்லது குட்டை போன்றவற்றை தங்களது நிலங்களில் உருவாக்கலாம். இவை மழை நீர் சேகரிப்பு இடங்களாகவும் மீன் வளர்ப்பு தொட்டிகளாவும் உபயோகப்படும்.

அஸ்சோலா வளர்ப்பு:
கால்நடைகள் வைத்திருப்பின், அவற்றின் நீர் நிலைகளில் அஸ்சோலா வளர்க்கலாம். இவைகளை அறுவடை செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் பால் உற்பத்தி அதிகரிப்பதாகவும், கோழிகளின் முட்டை உற்பத்தி அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் சாணம் நிலங்களில் உரமாக உபயோகிக்கலாம். இதன் விளைவு 3 முதல் 5 வருடங்களில் உரமிட்ட தரிசு நிலங்கள் செம்மை நிலமாக மாறிவிடும்.
மேலும் மரங்களில் இருந்து உதிறும் இலைசருகுகளை முழு பகுதியிலும் இடுவதன் மூலம் நில போர்வையாக பயன்படுத்தலாம்.
நில போர்வையானது, ஈரப்பதம்நீராவி தடுப்பதுடன், மண்புழுக்களுக்கு இருப்பிடமாகவும், களை கட்டுப்பாட்டு பொருளாகவும் உதவுகிறது. இலை சருகுகள் மட்டுமின்றி, சமையறை கழிவுகள், குப்பைகள் போன்றவையை மக்கிய உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவையாக மாற்றி நிலங்களுக்கு  பயன்படுத்தலாம்.

நீடித்த வாழ்கைதரம் (Sustainable livelyhood):
ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம் வானிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதுடன் உற்பத்தியாளர் மற்றும் வாடிக்கையாளரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. ஆனால் இச்செய்முறை ஒரு இரவில் செய்து முடிக்க இயலாது. குறைந்த காலமாக 3 முதல் 5 வருடம் வரை நிலத்தை பக்குவப்படுத்தி, சரியான வழிமுறையில் இப்பண்ணைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு:
திரு.கே.முரளி,
இந்திய இயற்கை வேளாண் இயக்கம்
மின் அஞ்சல் : sadhguru@gmail.com
அலைபேசி : 94425-316999


மனசை மாற்றிய அசோலா

 

ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம் ருத்ராவதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதி திருமலைச்சாமி ரூபிணி. (அலைபேசி : 97882 96144)
மாடுகளை வித்துடலாம்ன்னு முடிவு செய்துட்டு வியாபாரிகளைத் தேடிக்கிட்டிருந்தேன். அதிக விலை கொடுத்து மாட்டுக்குத்  தீவனச் செலவு செய்துகிட்டிருந்த நான், இன்னிக்கு வெறும்  65 பைசாவுக்கு குறைஞ்ச செலவுல மாட்டுக்குத் தீனி கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். அதுவும் இயற்கையான சத்துணவான அசோலா.
சென்னிமலையில இருக்கிற மணிவேல்ங்கிற நண்பர் மூலமா, அசோலா வாங்கிகிட்டு வந்து உடனே நடைமுறைப்படுத்திட்டேன். மூணு மாசமா தீவனச்செலசு பாதிய குறைஞ்சு போச்சு. அதேசமயம், பால் உற்பத்தி கூடிப்போச்சி. அன்னிக்கு மாட்டை விற்கற நிலைக்குத் தள்ளப்பட்ட நான், இப்ப கூடுதலா ரெண்டு  மாடுகளை வாங்கற அளவுக்கு நம்பிக்கையோட நடமாட ஆரம்பிச்சிட்டேன்.
பால் உற்பத்தி கூடுறது மட்டுமில்லீங்க, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமா கிடைச்சிப் போகுது. கலப்பின பசுன்னாலே ரொம்ப சுலபமா நோய் தாக்கும். அதுக்கே மாசம் 300,400 ரூபாய்ன்னு செலவு செய்யவேண்டியிருக்கும். அசோலா கொடுக்க ஆரம்பிச்ச பிறகு, அந்தச் செலவே இல்லாமப் போயிருச்சி. கோமாரி நோய் வந்து எங்கப் பகுதியில பலபேறு வீட்டுல மாடுங்க செத்துப் போச்சுதுங்க. பக்கத்து தோட்டத்து மாடு கூட பாதிக்கப்பட்டிச்சி. ஆனா, எங்க மாடுகள கோமாரி தாக்கவே இல்லை. எல்லாரும் ஆச்சர்யமா பாத்தாங்க. இப்படியொரு நல்ல வழியைக் காட்டின பசுமை விகடன், இனி வாழ்க்கையில என்னிக்கும் எங்க கூடவே வரும் என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
கோழிக்கும் அசோலா
முருங்கைத் தோப்பில் இயற்கை முறையில் வான்கோழிகளை வளர்க்கும் ரவி (அலைபேசி : 99944 56334, தொலைபேசி : 04320 238354) தன்னுடைய வான்கோழிகளுக்கு அசோலாவை உணவாகக் கொடுத்து வருகிறார்.
குறைந்த செலவுல வான்கோழிகளை வளர்த்து வெற்றியடையணும்ன்னு எனக்குள்ள ஒரு எண்ணம் ஓடிக்கிட்டே இருந்துது. அதுக்கு செயல்வடிவம் கொடுத்தது அசோலா ஓர் அமுதசுரபிங்கிற கட்டுரை தான்.
தானிய வகைகளோட விலை, வான்கோழி தீவன விலை எல்லாமே ஏறிக்கிட்டே இருக்கிற நிலையில், கோழிகளுக்கும் அசோலா ஒரு இணை உணவுன்னு இந்தக் கட்டுரையில படிச்சதும் எனக்குள்ள பொறி பத்திக்கிச்சி. தென்னை மரத்து நிழல்ல நீள் சதுரக் குழி வெட்டி, பாலித்தீன் விரிப்புப் போட்டு, தோட்டத்து மண்ணு, பசுஞ்சாணம், சூப்பர் பாஸ்பேட் இதெல்லாம் போட்டு தண்ணிணை விட்டு, அசோலாவைக் கொஞ்சம் தூவினேன், மளமளன்னு அசோலா வளர்ந்து நிறைஞ்சிப்போச்சி. அதை எடுத்துக்கிட்டு வான்கொழி வலைக்குள்ள நுழைஞ்சாலே போதும். எல்லாக் கோழிகளும் ஓடி வந்துடும். அசோலாவை அள்ளிப் போட்டா லபக் லபக்ன்னு முழுங்கித் தள்ளிடும். அசோலாவைச் சாப்பிடறதால தரமான முட்டை கிடைக்குது. குஞ்சு பொரிக்கும் திறனும் நல்லாயிருக்கு, என்கிட்ட வான்கோழிக் குஞ்சு வாங்குறவங்க, இறப்பு சதவிகிதமே இல்லன்னு சொல்றாங்கன்னா பார்த்துக்குங்க என்று சிலாகித்தார் ரவி.

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008