Agriculture
உர நிர்வாகம்

நெல்

நஞ்சையில் சேற்று நெல்

விதை நேர்த்தி

  • ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில், கார்பன்டஜிம் அல்லது பைரோகுயிலான் 2 கிராம் அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மி.லி. கலந்து 10 மணி நேரம் ஊர வைத்து பின்னர் வடிகட்டவும்
  • இம்முறையினால் இளம் வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
  • இவ்வாறு ஊர வைத்த விதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோனிச் சாக்கில் கட்டி மூடி, 24மணி நேரம் இருட்டில் வைத்து முளை கட்டிய பின்னர் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்கலாம்
  • சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கலத்தல் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் வைத்து நீரை வடிகட்டி, பின்னர் மேற்கூரிய முறையைப் பின்பற்றி விதைக்கலாம்
  • மூன்று பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கி/ஹெ) மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (700 கி/ஹெ) அல்லது 3 பாக்கெட் அசோபாஸ் (1200 கி/ஹெ) ஆகிய நுண்ணுயிர் உரங்களுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து விதைககளை விதைப்புக்கு முன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும் (விதைகளை நீக்கிய பின் கிடைக்கும் கரைசலையும் நாற்றங்காலில் விடலாம்).
    • உயிரியல் கட்டுப்பாடு இனங்கள் நுண்ணுயிர் உரங்களுடன் ஏற்புடையன
    • எனவே விதை நேர்த்திக்கு இவை இரண்டும் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்
    • பூஞ்ஞானங் கொல்லியும் உயிரியல் கட்டுப்பாடு இனங்களும் ஒவ்வாமையையுடையன

உர நிர்வாகம்

  • 20 சென்டிற்கு 1 டன் தொழு உரம்/ மாட்டு எரு தேவை
  • கடைசி உழவின் போது 20 சென்ட் நாற்றங்காலிற்கு 40 கிலோ டிஏபி உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்தோ இடப்படவேண்டும்.
  • அடியுரமாக டிஏபி இடுவது குறைவான மண் சத்துள்ள நாற்றங்கால்களுக்கு மட்டுமே
  • மண் சத்துக்கள் குறைவாக உள்ள நாற்றங்காலுக்கு, நாற்றுக்கள் 25 நாட்களுக்குப் பின்னர் எடுத்து நடவு செய்ய வேண்டிய தருணங்களில், 25 நாட்களுக்கு பின் இரசாயன உரங்களை இட்டு, அதிகபட்சம் அன்றிலிருந்து 10 நாட்களுக்குள் நாற்றுக்கள் எடுத்து நடவு செய்யப்படுதல் அவசியம்
  • மிக அதிகமான களிமண் பூமிகளில் நாற்றுக்கள் எடுக்கும் தருணத்தில் வேர்கள் அழுகுகின்ற நிலை ஏற்படின், விதைத்த 10 ம் நாள் ஒரு சென்டிற்கு 4 கிலோ ஜிப்சம் மற்றும் 1 கிலோ டிஏபி கலந்து இட வேண்டும்.

நடவு வயல்
உர நிர்வாகம்
இயற்கை உரமிடுதல்

  • தொழு எரு அல்லது மக்கு உரம் 12.5 டன் ஒரு எக்டருக்கு அல்லது
  • பசுந்தாள் உரம் 6.25 டன்

பசுந்தாள் உரம் இடும்முறை

  • பசுந்தாள் உற்பத்தி 6 டன் என்ற அளைவ எட்டியிருந்தால் அதனை அப்படியே மடக்கி உழுதுவிடவேண்டும். உழுவதற்கு இரும்பு கலப்பையோ அல்லது நாட்டுக் கலப்பையோ பயன்படுத்தலாம்
  • அத்தருணத்தில் குறைந்த பட்சம் ஒரு அங்குலம் தண்ணீர் தேக்கப்பட வேண்டும்
  • குறைந்த பட்சம் அரை செ.மீ. ஆழத்திலாவது பசுந்தாள் உரம் மண்ணினுள் மறையுமாறு ‘பசுந்தாள் மிதிப்பான்’ பயன்படுத்தி அமுத்துதல் வேண்டும்
  • பசுந்தாழை உரமென்றால் சிறிது சிறிதாக நறுக்கி, வரிசை வரிசையாக பரப்பி, மிதித்தல் நல்லது

அடித்தாள் மிதித்தல்

  • அடித்தாள் மிதிக்கப்படும்போது 22 கிலோ யூரியா ஒரு ஹெக்டரில் இடுதல் வேண்டும்
  • தாளடி நடவிற்கு முன், குறைந்தது பத்து நாட்களாவது தாள் மக்குவதற்கு சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.

நுண்ணுயிர் உரங்கள் இடுதல்

  • அசோல்லா 250 கிலோ என்ற அளவில் நடவு நட்ட மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பரவலாக தூவி நெற்பயிருடன் வளர வேண்டும். அசோல்லா வளர்ச்சியடைந்த நிலையில், நெல்லிற்கு களை எடுக்கும் தருணத்தில், ரோட்டரி களை எடுப்பான் மூலமோ அல்லது காலாலோ மண்ணிற்குள் மிதித்து விடுதல் வேண்டும்.
  • நீலப்பச்சைப்பாசியின் விதை 10 கிலோவை நடவு செய்த 10-ம் நாளில் தூவி சீரான அளவு தண்ணீர் கட்டி வளர்த்திட வேண்டும்.
  • ‘அசோஸ்பைரில்லம்’ மற்றும் பாஸ்போபாக்டீரியா’ ஒவ்வொன்றும் 10 பாக் (2 கிலோ) என்ற அளவில் எடுத்து, 25 கிலோ மக்கிய பண்ணையுரம் மற்றும் 25 கிலோ பெருமணலுடன் நன்கு கலந்து, நடவிற்கு முன் சீராகத் தூவி விட வேண்டும். அல்லது 20 பாக்(4 கிலோ) ‘அசோபாஸ்’ பயன்படுத்தலாம்.
  • சூடோமோனாஸ் ஃபுளுரசன்ல் (க1) 2.5 கிலோவும் நடவிற்கு முன் இடப்படுதல் வேண்டும்.

இரசாயன உரங்கள் இடுதல்

  • மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட வேண்டும்.
  • இறவை நெற்பயிருக்கான குறிப்பிட்ட வயலுக்கேற்ற உரமிடும் முறை மூலம் (LCC) மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடுவதை நிர்ணயிக்கவேண்டும்
  • மண் பரிசோதனை மூலம் உரங்கள் அளித்திட சந்தர்ப்பம் கிட்டாவிட்டால் கீழ்க்கண்ட பொதுவான பரிந்துரையைப் பின்பற்றலாம்.

பொதுவான உர பரிந்துறை -  ஒரு எக்ருக்கு (கிலோ என்ற அளவில்)

சத்துக்கள் தழை மணி சாம்பல்
குறுகிய கால ரகஙகள் (வறட்சிப்பருவம்)
150
120
50
40
50
40
அ.காவேரிப்பகுதி & கோவைப்பகுதி
ஆ.மற்ற பகுதிகள்
மத்திய மற்றும் நீண்ட காலப்பயிர்கள்
(மழைப்பருவம்)
150 50 50
ஒட்டு ரகங்களுக்கு 175 60 60
உரம் குறைவாகத் தேவைப்படும் ரகங்கள்
(வெள்ளைப் பொன்னி போன்றவை)
75 50 50
  • மூன்று பிரிவுகளாக தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் தருணங்களில் இடுதல் வேண்டும்.
  • மேற்கண்ட பரிந்துரை பொதுவானதே, இடத்திற்கு ஏற்ப பரிந்துரைகள் மாறுபடுகின்றன. பகுதிக்கேற்ற பரிந்துரைகள் மிகவும் அவசியமானது என்பது நன்கு உணரப்பட்ட விஞ்ஞான உண்மை.

நெற் பயிரின் வளர்ச்சிப் பருவங்கள் (நாட்கள் - விதைத்த பின்)

பருவம் குறுகிய காலம் (105) மத்திய காலம் (135) நீண்டகாலம்(150)
விரைந்து தூர் கட்டுதல் 35-40 50-55 55-60
பூங்குருத்து உருவாதல் 45-50 70-75 85-90
கதிர் வெளிவருதல் 70-75 100-105 115-120

            
தழைச்சத்து & சாம்பல் சத்து பிரித்திடுதல்

  • தழைச்சத்தும், சாம்பல்சத்தும் நான்கு பிரிவுகளாக முறையே கடைசி உழவின்போது தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இடப்படுதல் வேண்டும்.
  • தூர் கட்டும் மற்றும் கதிர் உருவாகும் பருவங்கள் மிகவும் முக்கியமாக பயிர்வளர்ச்சியில் காலங்களாகும். அத்தருணத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவு முறை குறையாமல் இடப்படுதல் மிகவும் முக்கியம்.
  • அடியுரமாகவும், கதிர் வெளிவரும் தருணத்திலும் இடப்படுகின்ற அளவு மற்ற பருவங்களுக்குச் சமமாகவோ அல்லது சற்று குறைவாகவோ அமையலாம்.
  • தழைச்சத்து நிர்வாகம் இலைவண்ண அட்டை மூலம் இடப்படுதல் நலம்

இலை வண்ண அட்டை மூலம் (LCC) தழைச்சத்து நிர்வாகம்

  • தழைச்சத்து இடும் தருணம் இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து முடிவுசெய்யப்படுகிறது.
  • இலையின் பச்சைய அளவை மிதிப்பழவிடுவது நடவு நட்ட 14ஆம் நாளிலிருந்து அல்லது விதைத்த 21 ஆம் நாளிலிருந்து பின்னபற்ற வேண்டும்.
  • அளவீடு ஒவ்வொரு வாரமும் செய்யப்படவேண்டும்.
  • மதிப்பீடு செய்ய ஏற்ற இலை முழுதாய் வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாவது ஆகும்
  • மதிப்பீடு செய்ய குறைந்த பட்சம் 10 இலைகள் இங்கும் அங்குமாக தேர்வு செய்யப்படவேண்டும்.
  • வண்ண அட்டையைக் கொண்டு இலையின் வண்ணத்தை ஒப்பிடும்போது சூரியவெளிச்சம் இலையில் நேரடியாகப்படாதவாறு அளவிடுபவர் நிற்கவேண்டும்
  • அளவிடும் காலம் பொதுவாக ஒருகுறிப்பிட்ட நேரமாக இருத்தல் நல்லது. அது காலை 8-10 மணிக்குள் என்றால் நல்லது.
  • அளவிடுபவரும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நபரே என்றால் அளவீடு சரியாக அமைய வாய்ப்புள்ளது.
  • அளவீடு எண் ரகத்திற்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது. அதிக தழைச்சத்தை தாங்க முடியாத இரகங்கள் எனில்3.0 என்றும் மற்ற ரகங்களுக்கும் 4.0 என்பதை மறக்கலாகாது
  • அவ்வாறு முடிவு செய்யப்பட்ட அளவீடு பத்திற்கு ஆறு அல்லது அதற்கு மேல் குறிப்பிட்ட அளவைவிட கீழ் இருக்குமெனில் உடனே தழைச்சத்து இடப்பட வேண்டும் என்று பொருள். நட்ட ஏழு நாட்களில் 25 கிலோ / எக்டர் தழைச்சத்து (ஒரு பை யூரியா) அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் 40 கிலோ / எக்டர் தழைச்சத்தை குருவை அல்லது குறுகிய கால இரகங்களுக்கு அளிக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் 30 கிலோ / எக்டர் தழைச்சத்தினை மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களுக்கு அளிக்க வேண்டும். இரகங்கள் மற்றும் கலப்பினங்களின் அளவீட்டு எண் 4 கிற்கு கீழ் குறைந்தும் மற்றும் வெள்ளை பொன்னி இரகத்திற்கு 3 என்ற அளவீட்டு எண்ணாக இருப்பினும் நட்ட 14ம் நாளிலிருந்து கண்காணிக்க வேண்டும்.
  • வயதான நாற்றுகள் : 35 முதல் 45 நாள் வயதுள்ள நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்தினால் அதன் மகசூலை அதிகரிக்க 35 கிலோ / எக்டர் தழைச்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும். மேலும் நட்ட 14-ம் நாளிலிருந்து இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

** பகுதிக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்து மேலாண்மை அணுகு முறை மூலம் நெல் பயிரிடும் பகுதிகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல்  சத்து உர அளவுகள் (காவேரி டெல்டா பகுதிகளை தவிர)

வ.எண் பகுதி பரிந்துரைக்கப்பட்ட உர அளவு (கிலோ/எக்டர்)*
மணிச்சத்து சாம்பல்சத்து
1 காவேரி டெல்டா பகுதி
(i) பழைய டெல்டா 35 50
(ii) புதிய டெல்டா 35 80
2 கோயமுத்தூர் மாவட்டம்
(i) பொதுவாக 30 40
(ii) ஆனைமலை மண்டலம் 30 80
3 கிள்ளிகுளம் 30 50
4 திருச்சி 35 50
5 அம்பாசமுத்திரம் 40 50
6 பவானி சாகர் 20 25
7 பையூர் 25 45
8 ஏத்தாப்பூர் 30 45
9 அருப்புக்கோட்டை 20 30
10 கடலூர் 30 50

** குறிப்பிட்ட மண் வகைகளிலிருந்து கிடைக்கும் மகசூலை பொருத்து எஸ்.எஸ்.என்.எம் அடிப்படையில் மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து பல்வேறு நெல் பயிரிடும் பகுதிகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்டது.

மணிச்சத்து இடப்படும் முறைகள்

  • மணிச்சத்து அடியுரமாக இடப்பட்டு நன்று கலக்கப்பட வேண்டும்
  • பசுந்தாள் உரத்திற்கு மாற்றாக ஆலை அழுக்கு அல்லது தொழு உரமாக்கிய நார்க்கழிவு போன்றவைகளும் இடலாம்.
  • பசுந்தாள் உரம் இடப்படும் தருணத்தில் மணிச்சத்திற்கு ‘ராக்பாஸ்பேட்டு’ தேர்வு செய்யப்படலாம். அவ்வாறு தேர்வு செய்து இடப்பட்டபின், அடுத்த பருவத்திற்கு மணிச்சத்து இடப்பபடுவதை தவிர்க்கலாம். ‘ராக்பாஸ்பேட்’ உரத்தினை சூப்பர் பாஸ்பேட்டுடன் அல்லது டைஅமோனியம் பாஸ்பேட்டுடன் 75 : 25 அல்லது 50 : 50 சதம் என்ற அளவில் கலந்து இட்டு சரியான பலன் பெறலாம்.

ஐிங் சல்பேட் உரமிடுதல்

  • 25 கிலோ ஐிங் சல்பேட்டை 50 கிலோ உலர்ந்த மணலுடன் கலக்குதல் வேண்டும்
  • உழுது சமன்படுத்தப்பட்ட வயலில் நடவுக்கு முன் பரவலாக மண்ணின் மேற்பரப்பில் தூவிவிடவும்
  • அதன் பின்னர் மண்ணுடன் கலக்கத்தேவையில்லை
  • பசுந்தளையுரமாகவோ, தாழ் உரமாகவோ இடப்பட்டிருந்தால் ஐிங் சல்பேட்டின் அளவை 12.5 கிலோவாகக் குறைத்துக்கொள்ளலாம்.

ஐிங் குறைபாடு காணப்பட்டால் போக்கும் விதம்

ஐிங்க் சல்பேட் 0.5 சதம் + 1.0 சதம் யூரியா கரைசல் இலைவழியே 15 நாட்கள் இடைவெளியில் குறைபாடு மறையும் வரை தெளிக்கப்பட வேண்டும்.

ஐிப்சம் இடுதல்

நடுநிலையான மற்றும் சுண்ணாம்புத் தன்மையுடைய மண் வகைகளுக்கு 500 கிலோ அளவில் ஐிப்சம் கடைசி உழவின் போது இடப்படவேண்டும்.

பொதுவான இலைவழி உரம் அளித்தல்

நெல்லிற்கு கதிர் உருவான தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் கழித்தும் இருமுறை, இலைவழி உரமாக “யூரியா 1” + டிஏபி 2” + மூரியேட் ஆப் பொட்டாஷ் 1” ஆகிய மூன்றின் ஒட்டு மொத்த கரைசலின் கூட்டுமுறைப்படி தெளிக்கப்படலாம்.

சத்துப்பற்றாக்குறை / நச்சுத்தன்மையின் அறிகுறி

  • தழைச்சத்து பற்றாக்குறை செடியின்  கீழ் இலைகள் மஞ்சள் நிறத்துடனும்  பொதுவாக வளர்ச்சிக்  குன்றியும் காணப்படும். பற்றாக்குறை மிகவும் தீவிரமான நிலையில் இலைகள் பழுப்புநிறமாக மாறி மடிந்துவிடும். பற்றாக்குறையின் அறிகுறி இலையின் நுனியில் தோன்றி இலையின்நடு நரம்புவரை பரவி இறுதியில் இலை மடிந்து விடும்.
  • சாம்பல் சத்து பற்றாக்குறை புது இலையில் நீலம் கலத்த பசுமை நிறத்திலும், முதிர்ந்த இலைகள் முறையற்றும் மஞ்சள் தேமலுடனும், திட்டுத்திட்டாக கருகியும் காணப்படும். கதிர் முதிர்வது குறைந்தும் காணப்படும். தண்டு பலவீனமடைந்து சாய்ந்தும் விடலாம்.
  • மக்னீசியம் பற்றாக்குறை இலைகள் மஞ்சள்தேமலுடன் நுனியில் வெள்ளைப் புள்ளியுடன் காணப்படும்.
  • கரும்பின் நச்சுத்தன்மை அடியிலைகளின் நுனியிலிருந்து பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி இலையில் காம்புவரை வளர்ந்து பசுமையான அல்லது ஆரஞ்சு நிற வண்ணத்தில் அறிகுறி தென்படும்
  • துத்தநாகக் குறைபாடு அடியிலைகளின் அடிப்பாகத்தில் மஞ்சள் தேமல் குறித் தென்படும். மேலும் துருபிடித்த தோற்றமும் செடியில் தென்படும்.
  • தாமிரச் சத்து குறைபாடுஇலைகளில் பச்சை சோகை நடு நரம்பு தவிர அனைத்து பகுதியிலும் பரவும். அதன்பின் இலை நுனிகளில் செம்பழுப்பு சிதைவுப் புள்ளிகள் காணப்படும். புதியதாக உருவாகும் இலைகள் சுருண்டு காணப்படும்.

வேப்பம் பிண்ணாக்கு கலந்து மற்றும் தார் பூசிய யூரியா

வேப்பம் பிண்ணாக்கு அல்லது வேப்பம் கொட்டையை நன்கு நசுக்கி பொடியாக்கி (2 மி.மி. சல்லடையில் சலிக்க வேண்டும்). யூரியாவுடன் 20 % அளவில் இரண்டயும் கலந்து ஒரு இரவுப்பொழுது வைத்திருந்து பயன்படுத்தவேண்டும். யூரியா, ஜிப்சம், வேப்பம் பிண்ணாக்கு 5 :4:1 என்ற விகிதத்தில் கலந்தும் தழைச்சத்தின் பயன்படும் திறனை அதிகரிக்காலாம். 100 கிலொ யூரியாவிற்கு 1 கிலோ நிலக்கரித்தார் தேவைப்படும். தாரை குறைந்த அளவு வெப்பத்தில் காய்ச்சி 1.5 லிட்டர் மண்ணெண்னையுடன் கலந்து பின்னர்100 கிலோ யூரியாவுடன் கலந்து நன்கு கலக்கி நிழலில் உலரவைத்து பின்னர் இடலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட யூரியா ஒரு மாதம் வரைகூட வைத்து பயன்படுத்தலாம்.

நடவு முறையில் வீரிய ஒட்டுநெல்

உரம் : 175 : 60 : 60 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து / ஹெக்டர்

திருந்திய நெல் சாகுபடி
புதிய பாய்நாற்றங்கால் தயாரிக்கும் முறை

  • நாற்றங்கால் தேர்வு செய்யப்படவேண்டும். நீர் நிலைக்கும் நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது.
  • ஒரு எக்டர் நடவு செய்ய 20 x 7.5மீ பரப்பளவுள்ள (150 ச.மீ.) நிலம் போதுமானது. நிலத்தில் வாய்க்காலைத் தவிர்த்து 100 ச.மீ. நிலமே நாற்றங்கால் ஆகும்.
  • உழுது சமன் படுத்தப்பட்ட நிலம், 120 செ.மீ. (5 அடி) அகலமுள்ள பாத்திகளாக 50 செ.மீ. இடைவெளியில் இரண்டு அங்குலம் ஆழத்திற்கு மண்ணை எடுத்து இருபுறமும் உள்ள பாத்திகளில் பரவலாக விசிறி சமன் செய்யப்பட்டு அமைக்கவேண்டும். பாத்திகளின் நீளம் 20 மீட்டராக (சுமார் 60 அடி) அமைதல் சிறந்த முறையில் நீர் பாசனம் செய்வதற்கு ஏற்றது.
மண் கலவை கலைத்தல்
  • அவ்வாறு உயர்த்தப்பட்ட பாத்திகளில் பாலிதீன் தாள் பரப்பி அதன்மீது நாற்றங்காலுக்கு மண் பரப்ப படவேண்டும்
  • பரப்புவதற்கான மண் வயல் மண்ணே போதுமானது. களிமண் விகிதம் அதிகம் இருப்பின் மணல் கலக்கவும், அதிகம் மணலாக இருப்பின் சற்று களிமண் கலக்கவும் அல்லது
  • மண் 70 சதம் + 20 சதம் நன்கு மக்கிய தொழுஉரம் + 10 சதம் உமி அல்லது தவிடு இவற்றுடன் 15 கிலோ பொடியாக்கப்பட்ட டை அம்மோனியம் பாஸ்பேட் அல்லது 2 கிலோ 17 :17: 17 காமளெக்ஸ் உரம் இட வேண்டும்.
  • நாற்றுப் பாத்திகள் அமைக்க மரச் சட்டத்தினால் தயாரிக்கப்பட்ட ‘கட்டளை’ தேவை. அக்கட்டளை 2 அங்குல உயரம் 1x1 மீ நீளம் அகலமோ அல்லது 1x0.5 மீ நீளம் அகலமோ உள்ளதாய் அமைத்துக்கொள்ளலாம். அகலத்தில் குறுக்கே (50 செ.மீ. ஒர குறுக்குச் சட்டமும்) நீளவாக்கில் ஒவ்வொரு 20 செ.மீக்கு ஒரு சட்டம் வீதம் நான்கு சட்டங்கள் அமைத்து 20x50 ச.செ.மீ. என்ற பாத்திகள் மொத்தம் 5x2x10 அமைக்கப்படலாம்.
  • கட்டளையை 1.2 மீ அகலமுள்ள பாத்தியின் மையத்தில் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் வைத்து. தயாராக வைத்துள்ள மண் கொண்டு நிரம்பி, அழுத்தி, பின்னர் கட்டனையை உருவுதல் வேண்டும். அப்படிச்செய்யும்போது 10 நாற்று பாத்திகள் தயாராவதைக் காணலாம்.

மண்ணில் உயர் உரங்கள் பயன்பாடு : 

100 m2 நாற்றங்கால் பகுதிக்கு ஆசோஸ்பைரில்லம் 2 கிலோ மற்றும் மைக்கோரைசஸ் பூஞ்சை 5 கிலோ அளிக்கவும்.

நாற்றின் வளர்ச்சியைப் பொறுத்து முதல் வாரம் முடிந்த நிலையில் 0.5 சதம் யூரியா + 0.5 ஜிங்சல்பேட் கரைசல் தெளிக்கப்படலாம்.

நடவு வயல்
உர மேலாண்மை

  • நடவு முறை நெல் சாகுபடியைப் பார்க்கவும் (பகுதி 1,2,3)
  • தழைச்சத்து மேலாண்மைக்கு இலை வண்ண அட்டை (LCC) மூலம் முடிவு செய்தல், உரம் மற்றும் பணச்சிக்கனமும், மேன்மையான பயிர்வளர்ச்சியும் மகசூலும் தரவல்லது.
  • பசுந்தாள் மற்றும் தொழுவுரம் பயன்படுத்தி நெல் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்கலாம்.
  • களர் நிலத்தில், சுழல் களை எடுக்கும்பொழுது ஆசோபோஸ்மெட் 2.2கி / ஹெக்டர் அளிக்கவும் மற்றும் PPFM 500 மிலி/ ஹெக்டர் இலைவழித் தெளிக்கவும்.

சேற்றுவயல் நேரடி விதைப்பு
உரமிடுதல்

  • நடவு முறைக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகள் இம்முறைக்கும் ஏற்றது
  • தழைச்சத்து, சாம்பல் சத்து இரண்டையும் 25 சதங்களாகப் பிரித்து விதைத்த 21 நாட்கள் விரைந்து தூர் பிடிக்கும் பருவம், பூங்கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இடுதல் வேண்டும்
  • பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து முழுவதுமே அடியுரமாக கடைசி உழவின் போது அளிக்க வேண்டும்
  • உயிர் உரங்கள் நடவுமுறை பயிரிருக்கு பரிந்துரைக்கப்பட்டது போன்றே
  • நுண்ணூட்டச்சத்துக்கள், இழைவழி உரமிடுதல் போன்றவைகளும் இப்பயிருக்கும் பின்பற்றப்பட வேண்டும். நடவு முறையில் கூறப்பட்டதே இதற்கும் பொருந்தும்

நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

உர மேலாண்மை

  • பொதுவான உர அளவு 50 : 25 : 25 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு
  • ஊட்டமேற்றிய தொழுஉரம் 750 கிலோ 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்து அடியுரமாக இடப்படவேண்டும்
  • தழைச்சத்து 25 கிலோ சாம்பல்சத்து 12.5 கிலோ இருமுறை, பயிர்முளைத்த 20-25 நாட்களில் முதலிலும் மீண்டும் 40-45 ஆம் நாட்கள் மரு முறையும் இடப்படவேண்டும்
  • மழை பெய்வது நல்ல முறையில் மண்ணின் ஈரம் தூர் கட்டும் பருவமிருந்தே அமையும் சந்தர்ப்பங்களில் தழைச்சத்தும், சாம்பல் சத்தும் மூன்றாவது முறையாக 60 லிருந்து 65 நாட்களுக்குள் அல்லது கதிர் வெளிவரும் பருவத்தில் இடுதல் அதிக மகசூல் தரவல்லது
  • மூன்றாம் முறை உரம் அளிக்கப்படும் தருணத்தில் வயலில் தண்ணீர் தேங்கி நிற்கவேண்டும். அத்தண்ணீர் குறைந்தது அடுத்த இரு வாரங்களுக்கு போதுமான நீரைத் தரவல்லதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இரும்பு சத்து குறைபாடுள்ள மண்ணில் இரும்பு சல்பேட் எக்டருக்கு 50 கிராம் அடி உரமாக இடலாம் (அல்லது) எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மானாவாரி நெல் நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோவை  ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:10 என்ற விகிதத்தில் தகுந்த ஈரப்பதத்தில் 30 நாட்களுக்கு நோய் பாதுகாப்பிற்காக அளிக்க வேண்டும்.
  • 0.5% துத்தநாக சல்பேட் மற்றும் 1% இரும்பு சல்பேட் இலைத் தெளிப்பாக குறுத்து விடும் மற்றும் கதிர் வரும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
  • இலைவழி உரமான யூரியா 1 சதம் + டிஏபி 2 சதம் + பொட்டாஷ் 1 சதம் கரைசல் இருமுறை, பூங்குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல் நன்று.

இறவையுடன் நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

உர மேலாண்மை

  • பொதுவான உர அளவு 75 : 25 : 37.5 கிலோ தழை,மணி. சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு இடவேண்டும்.
  • ஊட்டமேற்றிய தொழுஉரம் 750 கிலோ, 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்து அடியுரமாக இடப்படவேண்டும்.
  • தழைச்சத்து 25 கிலோ, சாம்பல்சத்து 12.5 கிலோ மூன்றுமுறை, பயிர் முளைத்த 20-25 நாட்களில், 40-45 ஆம் நாட்களில் மீண்டும் 60-65 ஆம் நாட்களிலும் இடப்படவேண்டும்
  • விதைத்தது முதலும், இடையேயும் நல்ல மழை பெய்து, பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருப்பின் இரண்டாம் தருணமான 40 முதல் 45 நாட்களுக்குள் இடப்படும் தழைச்சத்து 40 கிலோவாக அதிகரிக்கப்படலாம். (சாம்பல் சத்து 12.5 கிலோவாகவே இருக்கட்டும்). அதன் பின்னர் குறைந்தது 10 தினங்களுக்காவது தண்ணீர் தேங்கியிருத்தல் ஒரு கட்டாயத் தேவை எனலாம்.
  • எக்டருக்கு 25 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 50 கிலோ இரும்பு சல்பேட்டை துத்தநாகம் மற்றும் இரும்பு பற்றாக்குறை அறியப்படும்பொழுது அடிஉரமாக அளிக்க வேண்டும் (அல்லது) எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மானாவாரி நெல் நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோவை  ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:10 என்ற விகிதத்தில் தகுந்த ஈரப்பதத்தில் 30 நாட்களுக்கு நோய் பாதுகாப்பிற்காக அளிக்க வேண்டும்.
  • 0.5% துத்தநாக சல்பேட் மற்றும் 1% இரும்பு சல்பேட் இலைத் தெளிப்பாக குறுத்து விடும் மற்றும் கதிர் வரும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
  • இலைவழி உரமான யூரியா 1 சதம்  + டிஏபி 2 சதம் கரைசல் இருமுறை, பூங்குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல் நன்று

நஞ்சையில் புழுதிவிதைத்த இறவை நெல்

உர மேலாண்மை

  • பரிந்துரைக்கப்பட்ட உர அளவு : 75:50:37.5 கிலோ தழைச்சத்து : மணிச்சத்து : சாம்பல் சத்து/ எக்டர்
  • ஊட்டமேற்றிய தொழு உரம் 750 கிலோ 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்தது அடியுரமாக இடப்படவேண்டும்
  • குறுகிய கால பயிராயின் தழைச்சத்து 25 கிலோ, சாம்பல்சத்து 12.5 கிலோ மூன்றுமுறை, பயிர் முளைத்த 20-25 நாட்களிலும், 40-45 ஆம் நாட்களிலும் மீண்டும் 60-65 ஆம் நாட்களிலும் இடப்படவேண்டும்
  • மத்தியகால பயிராயின் தழைச்சத்து 25 கிலோ, சாம்பல்சத்து 12.5 கிலோ நான்குமுறை, பயிர் முளைத்த 20-25 நாட்களில், 40-45 ஆம் நாட்களிலும் 60-65 ஆம் நாட்களிலும் மீண்டும் 80-85 ஆம் நாட்களிலும் இடப்பட வேண்டும்
  • விதைத்தது முதலும், இடையேயும் நல்ல மழை பெய்து, பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருப்பின் இரண்டாம் தருணமான 40 முதல் 45 நாட்களுக்குள் இடப்படும் தழைச்சத்து 40 கிலோவாக அதிகரிக்கப்படலாம். (சாம்பல் சத்து 12.5 கிலோவாகவே இருக்கட்டும்). அதன் பின்னர் குறைந்தது 10 தினங்களுக்காவது தண்ணீர் தேங்கியிருத்தல் ஒரு கட்டாயத் தேவை எனலாம்
  • குறுகிய கால வறட்சியைப் போக்குவதற்கு பொதுவான விதை நேர்த்தியுடன் இலைவழி உரமான ஒரு சதம் பொட்டாஷ் + சைக்கோசெல் 500 பிபிஎம்கலந்து பயிர் வளர்ச்சிப்பருவத்தில் தெளிக்கலாம்
  • எக்டருக்கு 25 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 50 கிலோ இரும்பு சல்பேட்டை துத்தநாகம் மற்றும் இரும்பு பற்றாக்குறை அறியப்படும்பொழுது அடிஉரமாக அளிக்க வேண்டும் (அல்லது) எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மானாவாரி நெல் நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோவை  ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:10 என்ற விகிதத்தில் தகுந்த ஈரப்பதத்தில் 30 நாட்களுக்கு நோய் பாதுகாப்பிற்காக அளிக்க வேண்டும்.
  • 0.5% துத்தநாக சல்பேட் மற்றும் 1% இரும்பு சல்பேட் இலைத் தெளிப்பாக குறுத்து விடும் மற்றும் கதிர் வரும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
  • இலைவழி உரமான யூரியா 1 சதம் + டிஏபி 2 சதம் + பொட்டாஷ் 1 சதம்’ கரைசல் இருமுறை பூங்குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல் நன்று

நெல் விதை உற்பத்தி

பரிந்துரைக்கப்பட்ட உர அளவு

குறுகிய கால இரகம்

: NPK @ 120:40:40 kg ha-1

மத்திய கால இரகம்

: NPK @ 150:50:60 kg ha-1

நீண்ட கால இரகம்

: NPK @ 150:50:80 kg ha-1

துத்தநாக குறைபாடுள்ள மண்

எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் இட வேண்டும்.

இலைத் தெளிப்பு

  • 2% டிஏபி அல்லது 0.5% நியூட்ரிகோல்டை (அங்கக வளர்ச்சி ஊக்கி) கண்ணாடி இலை மற்றும் 5- 10 % பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
  • 3% தட்டைப்பயறு சாறினை தழை மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

வீரிய ஒட்டு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் (ADTRH 1 மற்றும் CORH 2)

உரமிடுதல்

எக்டருக்கு 150 : 60 : 60 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து. தழை மற்றும் சாம்பல் சத்தினை மூன்றாக பிரித்து அடியுரமாகவும், அதிக தூர் உருவாகும் பருவத்திலும், கதிர் உருவாகும் பருவத்திலும் இட வேண்டும்.

இலைத் தெளிப்பு

  • 2% டிஏபியை கண்ணாடி இலை மற்றும் 5- 10 % பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும் அல்லது
  • 0.5% நியூட்ரிகோல்டை (அங்க்க வளர்ச்சி ஊக்கி) கண்ணாடி இலை மற்றும் 5- 10 % பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும் அல்லது
  • 3% தட்டைப்பயறு சாறினை தழை மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

Updated on : 19.12.2013

 
Fodder Cholam