Agriculture
வேளாண்மை :: பயறு வகைகள்

பச்சைப்பயிறு (விக்னா ரேடியேட்டா)

Green Gram

விதை அளவு

விபரங்கள் விதை அளவு (கிலோ,எக்டர்)
தனிப்பயிர் கலப்புப்பயிர்
அனைத்து இரகங்களும் 20 10
நெல் தரிசு எடிடீ 3 30 -

பயிர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,000 எக்டர்

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்

வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும். மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்டிபன்டாசிம் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைப்பு நஞ்சையில் விதைகளை 30 × 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் விதைகளை நெல் அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும்போது சீராக நிலத்தில் தெளிக்க வேண்டும். அப்போது வயலில் தகுந்த ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பாக்டீரியா ராசியுடன் விதை நேர்த்தி

விதை நேர்த்தி செய்ய ஒரு பாக்கெட் (200கி/எக்டர்) ரைசேரபியல் கல்சர் சி.ஆர்.எம் 6 மற்றும் ஒரு பாக்கெட் (200கி/எக்டர்) பாஸ்போ பாக்டீரியா, ஒரு பாக்கெட் (200கி/எக்டர்) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் -ஐ அரிசிக் கஞ்சியுடன் கலந்து உபயோகிக்கவும். விதை நேர்த்தி செய்யவில்லையென்றால் பாஸ்போ பாக்டீரியா 10 பாக்கெட்  (2 கிலோ) மற்றும் 10 பாக்கெட் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் – ஐ 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து விதைக்கவும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

மானாவாரிப்பயிர் 12.5 கிலோ தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து இடவேண்டும். இறவைப்பயிர் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து  தரக்கூடிய உரங்களை இட வேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.

பயிர் ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழை மணி சாம்பல் கந்தகம்
பச்சைப்பயிறு மானாவாரி 12.5 25 12.5 10
இறவை 25 50 25 20

குறிப்பு:

  • மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்.
  • பாசன நிலையில் மண்ணில் 25 கிலோ துத்தநாக சல்பேட்/எக்டர் அளிக்கவும்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுன்உரக் கலவையை எக்டருக்கு 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுன்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில்   ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்)

புதிய டெல்டா பகுதி, தஞ்சாவூரில் பாசன பச்சைப்பயிரில் பன்முக பூக்கும் தொழில்நுட்பம்

அதிக மகசூல் மற்றும் வருமானம் பெற எக்டருக்கு 25:50:25:20 கிலோ NPKS + எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்தை 3 சம பாகங்களாக பிரித்து விதைத்த 30,45 மற்றும் 60ம் நாளில் அளிக்கவும் + 2% டி.ஏ.பி விதைத்த 45 மற்றும் 60ம் நாளில் தெளிக்க வேண்டும்.

பச்சை பயிரில் மகசூலை அதிகரிக்க 1% யூரியாவை இலைவழியாக தெளித்தல்

மகசூலை அதிகரிக்க வினையியல், உயிர் இயைபு வழி பண்புகள், இலைத் தெளிப்பாக யூரியா 1% விதைத்த 30 மற்றும் 45ம் நாளில் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. டெல்டா பகுதிகளில் நெல் தரிசு பயறுகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்ட 2% டி.ஏ.பி கரைசலை இலைவழித் தெளிக்கும் முறையைப் பயன்படுத்தலாம்.

பச்சைப் பயறு நுண்ணூட்டப் பொருள் கொண்டு சிக்கனமாக விதைநேர்த்தி செய்தல்

உயிர் உரங்கள், துத்தநாகம், மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற நுண்ணூட்டச்சத்துகள் முறையே ஒரு கிலோ விதைக்கு 4, 1, 0.5 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.

நீர் நிர்வாகம்:

விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். 10-15 நாட்களுக்கு ஒருமுறை மண் மற்றும் கால நிலைகளுக்கு ஏற்றவாறு தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரம் கழித்து பானை மூலம் பாசனம் செய்ய வேண்டும். பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் நீர் பாசனம் மிக முக்கியமானதாகும். எல்லா பருவங்களிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

இலைவழி நுண்ணூட்டம்

டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றும் சாலிசிலிக் அமிலக் கரைசல் தெளித்தல்

இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீர்ல் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும். நெல் தரிசு பயறு வகைப்பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

  1. களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் @ 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லி 20ம் நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளிக்கும் களைக் கொல்லியான குயிசல்பாப் இதைல் எக்டருக்கு 50 கிராம் ai மற்றும் aiயை விதைத்த 15-20 நாளில் தெளிக்க வேண்டும்.  
  2. களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.

பன்முக பூக்கும் தொழில்நுட்பம்

பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப் பயிரின் சிறப்பு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வண்டல் மண், கரிம பொருள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முன் கோடையில் பயிரிட்டால் மற்ற பயிர்களைப் போன்று உரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதனுடன் கூடுதலாக நைட்ரஜன் 25 முதல் 30 கிலோ யூரியாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பயறு வகை பயிர்கள் உறுதியற்ற வளர்ச்சி பண்புகளைக் கொண்டவை. விதைத்த 40-45ம் நாள் மேலுரமிடல் வேண்டும். பயிரின் 60-65ம் நாள் முதிர்ந்த காய்களுடன் காணப்படும். அடுத்த 20-25ம் நாள் இரண்டாம் முறை முதிர்ந்த காய்கள் காணப்படும். எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை செய்ய முடியும்.

நெல்- தரிசு:

இரகங்கள் மற்றும் விதை அளவு

விதை அளவு கிலோ/எக்டர்
இரகங்கள் தனிப்பயிர் கலப்புப்பயிர்
எல்லா இரகங்களுக்கும் 30 -

1. விதைக்கும் காலம்
               ஜனவரி மூன்றாம் வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை
2. விதைத்தல்

  1. தொடர் பயிரிடும் முறையில், உகந்த மண் ஈரப்பதத்தில் நெற்பயிரின் அறுவடைக்கு 5-10 நாட்கள் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும்.
  2. கூட்டு அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பகுதிகளில் நெற்பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும்.

3. டைஅமோனியம் பாஸ்பேட், என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்

  • என்.ஏ.ஏ 40 மிகி/லி மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
  • டி.ஏ.பி 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

அறுவடை

காய்கள் 80 சதம் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுத்து கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து, கையினாலோ அல்லது இயந்திரங்களை வைத்து மணிகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 

 
Fodder Cholam