Agriculture
வேளாண்மை :: பயறு வகைகள்

சோயா மொச்சை (கிளைசின் மேக்ஸ்)

arrow சோயாமொச்சை ஆராய்ச்சி இயக்குனரகம் , இந்தூர் 

 

Soybean

பருவம் மற்றும் இரகங்கள்

ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) புரட்டாசிப்பட்டம்(செப்டம்பர்-அக்டோபர்) மாசிப்பட்டம் (பிப்ரவரி-மார்ச்) கோ 1 (இறவை), கோ 2,
கோ (சோயா) 3
நெல் தரிசு கோ 1, கோ2

பண்புகள் கோ1 கோ2 கோ(சோயா) 3
பெற்றோர் தாய்லாந்து இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு யுஜிஎம்21×ஜெஎஸ்335 கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது யுஜிஎம் 69× ஜெஎஸ்335 கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது
வெளியிட்ட ஆண்டு 1980 1995 2005
50 சதம் பூக்கும் நாட்கள் 37 30 - 40 39 - 41
வயது (நாட்கள்) 85 75 - 80 85 - 90
மகசூல் (கிலோ/ எக்டர்)      
மானாவாரி 1080 1340 -
இறவை 1640 1650 1700
செடியின் உயரம் 58 30 - 40 53.5
கிளை 6   5 - 6
பூவின் நிறம் ரோஸ் ரோஸ் மற்றும் ஊதா ரோஸ்
விதையின் நிறம் பழுப்பு கலந்த வெண்மை பழுப்பு கலந்த மஞ்சள் பழுப்பு கலந்த மஞ்சள்
100 விதை எடை (கிராம்) 12.5 13-14 10.95 - 11.75

வயது: 

சோயா மொச்சை 90 நாட்களில் வளர்ந்து பயனளிக்கக்கூடியது, 40 நாட்களில் 50 சதம் பூக்கும் திறன் கொண்டது. நெல்லில் தரிசாக பயிரிட கோ 1, கோ ஏடிடி1 ஏற்றது.

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்

முன்செய் நேர்த்தி நிலத்தை நன்கு உழுதபின், பாத்தியாகவும், வாய்க்காலாகவும் பிரிக்கவும்.

விதை அளவு

கோ 1 , கோ(சோயா) 3 - 80 கிலோ/எக்டர், மிதமான பயிர் எண்ணிக்கை - 6,66,000/ எக்டர்
கோ 2 - (மானாவாரி) தனிப்பயிர் 60-70 கிலோ/ எக்டர், ஊடுபயிர் 25 கிலோ/ எக்டர்

விதைநேர்த்தி: 

விதையிலிருந்து பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், நுனிக்கருகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.

நுண்ணுயிர் கலத்தல்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் (COS1) 3 பாக்கெட் (600 கிராம் / எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம் / எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம் / எக்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம் / எக்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி உரம் மற்றும் 25 கி.கி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும். பாக்டீரியாவால் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடத்திற்குஉலர்த்த வேண்டும்

விதைத்தல்: விதைகளை 2-3 செ.மீ. ஆழத்தில் 30 x 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும்

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரநிர்வாகம்

ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 80 கிலோ மணிச்சத்து 40 கிலோ சாம்பல் சத்து மற்றும் 40 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இடவேண்டும். விதைத்த 40வது நாளில் இலைமூலம் 2 சதவீதம் டிஏபி கரைசல், தெளிப்பதன் மூலமும், சாலிசிலிக் அமிலம் 100 பிபிஎம் (50 கிராம்/ 500 லி/எக்டர்) இலை மூலம் விதைத்த 30வது மற்றும் 40வது நாளில் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

soybean0001

பயிர்     ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழை மணி சாம்பல் கந்தகம்
சோயா மொச்சை மானாவாரி 12.5 25 12.5 20
இறவை 25 50 25 40

நீர் நிர்வாகம்:

விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண் மற்றும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும். சோயா மொச்சை அதிகமாக ஈரம் இருக்குமாயின் பாதிக்கப்படும். வயலில் நீர்தேங்கி இருப்பதை தவிர்க்கவேண்டும். பூக்கும் பருவத்திலிருந்து முதிர்ச்சிப் பருவம் வரை நீர் பற்றாக்குறை பாதிப்பதில்லை. வறட்சியின் தாக்கத்தை சரிக்கட்ட கயோலின் 3 சதவிகிதக் கரைசல் அல்லது பாரபின் 1 சதவிகித கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சோயாமொச்சசை மற்றும் ஆமணக்கு விதைப்பில் 0.60 பாசன கூட்டு விகிதத்தில் பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்ச பயன் கிடைப்பதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்ததாகும்.

களை மேலாண்மை

  • இறவைப் பயிருக்கு எக்டருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.
  • முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாட்களில் தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 30 நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.

ஊடுபயிர்: கரும்பில் ஊடுபயிராக சாகுபடி செய்ய சோயா மொச்சை உகந்த பயிராகும். சோயாமொச்சையைத் தனிப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். மேலும் இப்பயிரை வாழை மரவள்ளி, பருத்தி, மஞ்சள், தென்னை ஆகிய பயிர்களிலும் ஊடுபயிராகப் பயிரிடலாம்

அறுவடை: இலைகள் பழுத்து உதிர்ந்தவுடன் நிலமட்டத்தில் அறுத்துச் செடிகளைக் காயவைத்து பின் தாம்பு கட்டி மணிகளைப் பிரித்துத் தூற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். சோயாவை நெல் தரிசாக ஜனவரி மாதம் முதல் மார்ச் நடுவரையிலும் பயிர் செய்யலாம். எக்டரக்கு 75 கிலோ விதைகள் தேவைப்படும்.

soybean0003

மானாவாரி சோயாமொச்சை

  • இரகங்கள் : கோ 1, ஏ டீ டி 1
  • பருவம்: தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலங்களில் பயிரிட சோயா மொச்சை ஏற்றது. வடமேற்கு மண்டல பகுதிகளில் மானாவாரி சோயா மொச்சையை ஜீலை மத்தியில் விதைக்கலாம்.

பூசணகொல்லி மற்றும் உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி 

  • விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு மு்னனர் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடிடர்மா விரிடி (அ) 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டுமு்.
  • ஒரு எக்டர் விதைப்பிற்கு தேவையான விதைகளை 3 பாக்கெட்  ரைசோபியம் மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபேக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உரமிடுதல்

  • மண் பரிசோதனை மூலம் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட வேண்டும் இல்லையெனில் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட எக்டருக்கு 20:40:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தக சத்தினை போதுமான ஈரப்பதத்தில் இட வேண்டும்.
  • அனைத்து தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தக சத்தினை அடியுரமாக இடவேண்டும்.

இடைவெளி

     வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும் செடிக்கு செடி 5 செ.மீ. இடைவெளியும் கொடுத்து நட வேண்டும்.

விதைப்பு

     விதைகளை ஊன்ற வேண்டும் (அ) துளை மூலம் விதைக்க வேண்டும்.

களை மேலாண்மை

  • இறவைப் பயிருக்கு எக்டருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.
  • முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாட்களில் தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 30 நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.

நெல் தரிசில் சோயாமொச்சை

ஜனவரி மாத இடையிலிருந்து மார்ச் இடையில் வரைக்கும் விதைக்கலாம். விதையளவு - 75 கிலோ/எக்டர்

சிறப்பு சூழ்நிலைகள்

  • கோ1 சோயா விதைப்பிற்கு தகுந்த காலம் கரிபில் ஜீன் 15 முதல் 30 வரை
  • வடமேற்கு மண்டலத்தில் சோயா கோ2 இரகத்தை கரும்பில் ஊடுபயிராக பயிர் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது
  • பத்து வருடங்களுக்கு மேல் உள்ள தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பயிரிட சோயா பரிந்துரைக்கப்படுகிறது.
  • மண்புழுஉரம் (50கிராம்/கிலோ) மற்றும் 30 10 செ.மீ. இடைவெளி மற்றும் 2% டிஏபியை பூக்கும் தருணத்தில் தெளித்தல் போன்றவை அதிக மகசூலை பெற பரிந்துரைக்கப்படுகிறது.

பயிர் பாதுகாப்பு

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
 
Fodder Cholam