வங்கி மற்றும் கடன் :: கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்
கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்

கூட்டுறவு வங்கி 100 ஆண்டு கால வரலாறு உடையது. கூட்டுறவு வங்கிகள் இந்திய நிதி முறையில் பங்கு வகிக்கின்றது. அதன் பணிகளை செவ்வனே செய்தல், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தல், நிறைய அலுவலகங்கள் மூலம் பணிகளைச் செய்வது போன்றவை இதில் அடங்கும்.

கூட்டுறவு வங்கிகளின் பணி கிராமப்புற நிதித் தேவைகளில் இன்றளவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சமீபகாலமாக நகர்ப்புற பகுதிகளில் தொடக்க கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தொழில் துறையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கூட்டுறவு சங்க விதியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குமுறை செய்யும். இவை அனைத்தும் வங்கி ஒழுங்குமுறை விதி 1949 மற்றும் வங்கிகள் விதி (கூட்டுறவு சங்கங்கள் விதி ) 1965 ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

கூட்டுறவு கடன் அமைப்பு தான் மாநிலத்தில் தனிப்பெரிய நிறுவனக் கடன் வழங்கும் முறையாக விளங்குகிறது. கிராமப்புற மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் குறைந்த அளவு வட்டி விகிதங்களில் கடன் வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் முறையற்ற கடன் வசதிகளான அதிக வட்டிக்கு கடன் வாங்குவது மிகவும் குறைக்கப்படும். சமூக ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் இந்த நிறுவன முறை விவசாயிகள் கடன் பெறுவதற்கு ஏற்றதாக இருக்கின்றது.
ஆதாரம்
http://www.tngov.in/policynotes/cooperation_2html.
http://www.lbsnaa.ernet.in/lbsnaa/research/ccrd/saconf(98).html
http://www.tn.gov.in/policynotes/archives/policy2004-05/pdf2004/cfcp2004-05.pdf
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016