வெண்டையின் நரம்புத் தேமல் (Yellow Vein Mosaic)

  • முதன்முதலாக பம்பாயில் 1940-ல் இந்நோய் தோன்றியது. நாளடைவில் சிறிது சிறிதாகப் பிற மாநிலங்களுக்கும் பரவி வெண்டையின் விளைவைப் பெரிதும் பாதித்த நிற்கின்றது. இதனை நரம்பு வெளுத்தல் (Vein Clearing) நேரய் என்றும் கூறுவதுண்டு.
  • நோய்க்காரணி : வெண்டை மஞ்சள் நரம்புத் தேமல் நச்சுயிரி.
  • ஆரம்பத்தில் இலை ஓரங்களிலிருந்து நரம்பு வெளுத்துக் காணப்படும். நாளடைவில் இலைப் பாகத்திலுள்ள நரம்புகள் கிளைநரம்புகள் யாவும் வெளுத்துத் தோன்றும். புதிதாகத் தோன்றும் இலைகளிலும் கிளை நரம்புகள் வெளுத்துக் காணப்பட்டு இடைப்பாகம் மட்டும் பசுமையாக இருப்பதால் வலை பின்னப் பட்டிருப்பதை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். நாளடைவில் இலைப்பாகம் முழுவதுமே வெளுத்துத் தோன்றும். இலையின் அடிப்பாகத்திலுள்ள நரம்புகள் பெரியதாயிருக்கும். ஆயினும் இலைகளிலிருந்து வெளிவளர்ச்சி (Enation) தோன்றாது. வெண்டைக் காய்கள் ஒழுங்கற்ற வடிவத்தைப் பெறுவதுடன் குட்டையாகி வெளுத்துக் காணப்படும்.

    பரவுதல் :
  • பெமிசியா டபாசை என்ற வெள்ளை ஈக்கள் இந்நோயைப் பரப்புகின்றன. இதே நச்சுயிரி, நாய் மிளகாய் (Croton Sparsifirus) ஹைபிஸ்கஸ் டெட்ராபில்லஸ் போன்ற களைகளையும் தாக்குகின்றன. எனவே இக்களைகளிலிருந்து இந்நச்சுயிரி வெண்டை செடிகளுக்கும் பரவும் வாய்ப்புண்டு.
கட்டுப்பாடு
  • நோய்க்கண்ட செடிகளை அப்போதைக்கப்போது களைந்தெறிதல் அவசியம்.
  • இந்நோய் தோன்றும் களைச் செடிகளை அழித்து விடுதல், பூச்சிகளின் நிலத்திற்கருகிலுள்ள பூச்சிகள் தங்கும் களைகளை அழித்து விடுதல், பூச்சிகளின் நிலத்திற்கருகிலுள்ள பூச்சிகள் தங்கும் களைகளை அழித்து விடுதல், பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்கும். பூசா சவாணி (Pusa Savani) என்ற வெண்டை வகையில் நோய் மிகுதியாகத் தோன்றுவதில்லை.
  • மோனோகுரோட்டோஃபாஸ் 0.1% பூச்சிக் கொல்லியை விதைத்த 25, 35, 45 வது நாட்களில் தெளித்து நோய் பரப்பும் பூச்சிகளை அழித்தல்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016